ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 மார்ச், 2012

நிர்ணயம் செய்வாய் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
இழப்புகள் . . .
 
 
எத்தனையோ இழப்புகளைத்
தாண்டி வாழ்க்கை உள்ளது . . .
 
 
வாழ்க்கையை இழப்புகளால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
வாழ்க்கையை அன்பினால்
நிர்ணயம் செய் . . .
 
 
சந்தோஷத்தை இருப்புகளால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
சந்தோஷத்தை திருப்தியால்
நிர்ணயம் செய்து கொள் . . .
 
 
 பலத்தை பணத்தால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
பலத்தை தைரியத்தால்
நிர்ணயம் செய்து பார் . . .
 
 
வீரத்தை கோபத்தால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
வீரத்தை விவேகத்தால்
நிர்ணயம் செய்து நிரூபி . . .
 
 
மனிதர்களை வார்த்தைகளை
கொண்டு நிர்ணயம் செய்யாதே . . .
 
 
மனிதர்களை மனதைப்
பார்த்து நிர்ணயம் செய். . .
 
 
அன்பை பொருட்களால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
அன்பை அன்பினால்
நிர்ணயம் செய்து கொள் . . .
 
 
பக்தியை பகட்டுத்தனத்தால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
பக்தியை ஆத்மார்த்தமாக
நிர்ணயம் செய்யப் பழகு . . .
 
 
க்ருஷ்ணனை ஆசைகளைக்
கொண்டு நிர்ணயம் செய்யாதே . . .
 
 
க்ருஷ்ணனை ஆசிர்வாதத்தை
கொண்டு நிர்ணயம் செய்துவிடு . . .
 
 
குருவை காரியங்களால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
குருவை கருணையால்
நிர்ணயம் செய்து கொள் . . .
 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP