நிர்ணயம் செய்வாய் . . .
ராதேக்ருஷ்ணா
இழப்புகள் . . .
எத்தனையோ இழப்புகளைத்
தாண்டி வாழ்க்கை உள்ளது . . .
வாழ்க்கையை இழப்புகளால்
நிர்ணயம் செய்யாதே . . .
வாழ்க்கையை அன்பினால்
நிர்ணயம் செய் . . .
சந்தோஷத்தை இருப்புகளால்
நிர்ணயம் செய்யாதே . . .
சந்தோஷத்தை திருப்தியால்
நிர்ணயம் செய்து கொள் . . .
பலத்தை பணத்தால்
நிர்ணயம் செய்யாதே . . .
பலத்தை தைரியத்தால்
நிர்ணயம் செய்து பார் . . .
வீரத்தை கோபத்தால்
நிர்ணயம் செய்யாதே . . .
வீரத்தை விவேகத்தால்
நிர்ணயம் செய்து நிரூபி . . .
மனிதர்களை வார்த்தைகளை
கொண்டு நிர்ணயம் செய்யாதே . . .
மனிதர்களை மனதைப்
பார்த்து நிர்ணயம் செய். . .
அன்பை பொருட்களால்
நிர்ணயம் செய்யாதே . . .
அன்பை அன்பினால்
நிர்ணயம் செய்து கொள் . . .
பக்தியை பகட்டுத்தனத்தால்
நிர்ணயம் செய்யாதே . . .
பக்தியை ஆத்மார்த்தமாக
நிர்ணயம் செய்யப் பழகு . . .
க்ருஷ்ணனை ஆசைகளைக்
கொண்டு நிர்ணயம் செய்யாதே . . .
க்ருஷ்ணனை ஆசிர்வாதத்தை
கொண்டு நிர்ணயம் செய்துவிடு . . .
குருவை காரியங்களால்
நிர்ணயம் செய்யாதே . . .
குருவை கருணையால்
நிர்ணயம் செய்து கொள் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக