ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

உன் நினைவே சுகமடா . . .


ராதேக்ருஷ்ணா

ஹே வேங்கட க்ருஷ்ணா . . .
நீ ரொம்ப அழகுடா ! ! !

உன் மீசை ரொம்ப ரொம்ப
அழகுடா . . .

உன் திருமுகம் அற்புத
அழகுடா . . .

உன் திருப்பவள செவ்வாய்
ஒய்யார அழகுடா . . .

உன் திருமார்பு என்னை
வசீகரிக்கும் அழகுடா . . .

நீ நிற்கும் அழகு
என்னை மயக்குதடா . . .

உன் கருணை
என்னை அழ வைக்குதடா . . .

உன் அன்பு
என்னை உருக்குதடா . . .

உன்னிடம் நான்
என்னை தந்துவிட்டேனடா . . .

இனி நான் உன்
குற்றேவலடா . . .

என்னை மறந்துவிடாதேடா . . .

என் கண்ணா . . .
என் சாரதி . . .
என் செல்லமே . . .
உன் நினைவே சுகமடா . . .

வேறு என்ன வேண்டுமடா . . .

வாழ்வில் நீ ஒருவன் போதுமடா . . .

வேறு யாருமே வேண்டாமடா . . .

வாழ்வே போதுமடா . . .

உன் நினைவிலேயே வாழ்வேனடா !


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP