ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 ஜனவரி, 2012

பீஷ்மா . . .

ராதேக்ருஷ்ணா

பீஷ்மாஷ்டமி . . .
பீஷ்மரின் கடைசி நாள் !

பீஷ்மர் இந்த உலகை விட்டு
தன் வீர உடலை விட்டு
வைகுந்தம் அடைந்த நாள் இன்று !

பீஷ்மா . . .
எனக்கு உன்னைப் போல்
வைராக்கியமில்லை . . .

பீஷ்மா . . .
எனக்கு உன்னைப் போல்
சஹஸ்ர நாமம் சொல்லவராது . . .



பீஷ்மா . . .
எனக்கு உன்னைப் போல்
க்ருஷ்ணனை ஜெயிக்கமுடியாது . . .

பீஷ்மா . . .
என்னால் உன்னைப் போல்
தியாகம் செய்ய முடியாது . . .


பீஷ்மா . . .
என்னால் உன்னைப் போல்
அம்புப்படுக்கையில் படுக்கமுடியாது . . .


பீஷ்மா . . .
என்னால் உன்னைப் போல்
க்ருஷ்ணனை வசப்படுத்தமுடியாது . . .


பீஷ்மா . . .
என்னால் முடிந்தது இது தான் . . .
உன்னை நமஸ்காரம் செய்கிறேன் . . .

நீ அடைந்ததை எல்லாம்
நான் அடைய எனக்கு
ஆசீர்வாதம் செய் . . .



உன் க்ருஷ்ணனிடம்
என்னைச் சேர்த்துவிடு . . .



உன் க்ருஷ்ணனுக்கு
என்னை அர்ப்பித்துவிடு . . .

உன் க்ருஷ்ணனிடம்
எனக்கு சிபாரிசு செய் . . .

பீஷ்மா . . .
உன்னைப் போல் நானும்
க்ருஷ்ணனை அந்திமகாலத்தில்
தரிசிக்க அருள் செய் . . .



எனக்கு ஒரு தகுதியுமில்லை . . .



ஆனால் உன் தகுதியை
நான் நம்புகிறேன் . . .



இந்தக் குழந்தையை கரையேற்று ! ! !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP