ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 ஜனவரி, 2012

முடிவு உன் கையில் . . .


ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணா . . .
உன்னிடம் சில உண்மைகளை
நான் சொல்லப்போகிறேன் . . .

க்ருஷ்ணா . . .
அவையெல்லாம் உனக்குத்
தெரிந்ததுதான் . . .
இருந்தாலும் சொல்லவேண்டும்
என்று தோன்றுகிறது . . .


க்ருஷ்ணா . . .
என்னை சரிசெய்ய
என்னால் முடியவில்லை . . .
உனக்கு நான் வேண்டுமானால்
என்னை சரிசெய்துகொள் . . .

க்ருஷ்ணா . . .
என்னால் தவறுகள்
செய்வதை விடமுடியவில்லை . . .
உனக்கு என் தவறுகள் பிடிக்கவில்லை
என்றால் என்னை தடுத்தாட்கொள் . . .

க்ருஷ்ணா . . .
எனக்கு ஆசைகளை
அடக்க முடியவில்லை . . .
உனக்கு என்னைப் பிடிக்குமென்றால்
என்னை ஆசைகளை வெல்ல வை . . .

க்ருஷ்ணா . . .
என்னால் எதையும் ஒழுங்காக
செய்யமுடியவில்லை . . .
நீ தான் என்னை ஒழுங்காக
எல்லாவற்றையும் செய்ய வைக்கவேண்டும் !


க்ருஷ்ணா . . .
எனக்கு ஒரு பொறுப்புமில்லை . . .


க்ருஷ்ணா . . .
எனக்கு எதிலும் அக்கறையில்லை . . .


க்ருஷ்ணா . . .
நான் வெட்டியாய் வாழ்கிறேன் . . .


க்ருஷ்ணா . . .
நான் இன்னும் உருப்படவில்லை . . .


க்ருஷ்ணா . . .
உனக்கு வேண்டுமானால்
என்னை சரி செய்துகொள் . . .


க்ருஷ்ணா . . .
உன்னைத் தவிர யாராலும்
என்னை சரிசெய்ய முடியாது . . .


சரி செய்தால் உனக்கு சந்தோஷம் . . .


இல்லையென்றால் நான்
இப்படியேதான் வாழ்ந்துகொண்டிருப்பேன் . . .


இது உனக்கும் தெரியும் !
எனக்கும் தெரியும் !


இனி முடிவு உன் கையில் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP