ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 ஜனவரி, 2012

கருணை காட்டுங்கள் . . .

ராதேக்ருஷ்ணா



நெஞ்சே ! ராமன் சொல்வதைக் கேள் !
மனமே ! க்ருஷ்ணன் சொல்வதைக் கேள் !
புத்தியே ! குரு சொல்வதைக் கேள் !

தலையே ! பஜனைக்கு ஏற்றபடி ஆடு !

கண்களே ! சூர்தாசர் கண்டதைக் காண் !
 
   காதுகளே ! சுகப்ரும்மம் சொல்வதைக் கேள் !

மூக்கே ! திருத்துழாயின் வாசனையை நுகர் !

நாக்கே ! குலசேகரர் சொல்வதைச் செய் !

வாயே ! பகவத் ப்ரசாதத்தைச் சாப்பிடு !

தோள்களே ! பகவானின் பல்லக்கை தூக்கு !

கைகளே ! பாகவத கைங்கர்யம் செய் !

விரல்களே ! பாண்டுரங்கனைத் தடவு !

தொடைகளே ! கண்ணனைத் தாங்கு !

கால்களே ! சத்சங்கத்திற்கு மட்டுமே நட !

என் உடலே . . .
கொஞ்சம் ஒத்துழை . . .


என் இந்திரியங்களே . . .
கொஞ்சம் உதவி செய்யுங்கள் . . .


என் மனமே . . .
கொஞ்சம் தயவு காட்டு . . .


என் நெஞ்சே . . .
கொஞ்சம் வாழ வை . . .

என் புத்தியே . . .
கொஞ்சம் சொல்படி கேள் . . .


நீங்களே உதவவில்லை
என்றால்,
இந்த உலகில் வேறு யார்தான்
எனக்கு உதவமுடியும் . . .


தயவு செய்து உதவுங்கள் . . .


உங்களிடம் மாட்டிக்கொண்ட
ஒரு பாவப்பட்ட மனிதனின்
கெஞ்சலைக் கொஞ்சம் கேளுங்கள் . . .


கருணை காட்டுங்கள் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP