ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 டிசம்பர், 2011

ஏறுவாயா ? ! ? பார்ப்பாயா . . .


ராதேக்ருஷ்ணா

தென்னை மரத்தில் ஏறுவியா . . .
தேங்காயைப் பறிப்பாயா ?


மாமரத்தில் ஏறுவியா . . .
மாங்காயைப் பறிப்பாயா ?


கொய்யாமரத்தில் ஏறுவியா . . .
கொய்யாக்காய் பறிப்பாயா ?


ஆத்துல விழறியா . . .
சேத்துல விழறியா . . .
குளத்துல விழறியா . . .

இது உனக்கும் தெரியும் !
எனக்கும் தெரியும் !

சிறிய வயதில்
நம் தாய்/தந்தை காலில்
ஏறிக்கொண்டு
அவர்கள் பாட
நாம் அனுபவித்தது . . .



கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன் !
இந்த வார்த்தைகளில்
என்ன பிரயோஜனம் ? ? ?

என் பிள்ளைக்கு
இதைச் சொல்லிக்கொடுக்க
நான் தயாராகயில்லை . . .


க்ருஷ்ணனிடம் கேட்டேன் !
அவன் புதியதாக ஒன்றைச்
சொல்லிக்கொடுத்தான் . . .

அதை நான் உனக்கும்
சொல்கிறேன் . . .
நீயும் அனுபவி ! ! !


திருப்பதி ஏறுவாயா ? ! ?
ஸ்ரீநிவாசனைப் பார்ப்பாயா . . .

பத்ரிகாஸ்ரமம் ஏறுவாயா ? ! ?
நாராயாணனைப் பார்ப்பாயா . . .

அத்திகிரி ஏறுவாயா ? ! ?
வரதராஜனைப் பார்ப்பாயா . . .

கோவர்தனகிரி ஏறுவாயா ? ! ?
கோவிந்தனைப் பார்ப்பாயா . . .

பத்ராசலம் ஏறுவாயா ? ! ?
ராமனைப் பார்ப்பாயா . . .

பர்சானா ஏறுவாயா ? ! ?
ராதிகாவைப் பார்ப்பாயா . . .

கோகுலம் போறாயா . . .
 ப்ருந்தாவனம் போறாயா . . .
வைகுந்தம் போறாயா . . .

எத்தனை சுகமல்லவா இது . . .

பாடு . . .பாடு . . .பாடு

எதிர்கால சந்ததிக்கு
இதையே பாடுவோம் . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP