ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 அக்டோபர், 2011

நானின்றி அவனில்லை . . .

ராதேக்ருஷ்ணா

தீபாவளி . . .
உற்சவ தீபாவளி . . .
அனந்தனுக்கு தீபாவளி . . .
அனந்தபுர ராஜனுக்கு தீபாவளி . . .

அனந்தபுரி அழகன்
விசேஷமான அலங்காரத்தில்
ஆனந்தமாய் பவனி வருகிறான் !

அனந்தபுரி ராஜன்
விண்ணோரும் மண்ணோரும்
வியக்க பவனி வருகிறான் !

அனந்தபுரி நாயகன்
பக்தர்களின் ப்ரேம வெள்ளத்தில்
உற்சாகமாய் பவனி வருகிறான் !


அனந்தபுரியின் ஆனந்தன்
தீப ஒளியில் தீபாவளி இரவில்
ஜொலிப்பாய் பவனி வருகிறான் !


அனந்தபுரி அன்பன்
திருவிதாங்கூர் ராஜனோடு
அன்பாய் பவனி வருகிறான் !


அனந்தபுரி தேவாதி தேவன்
அனல் விழி, ப்ரஹ்லாத நரசிம்மரோடு
நன்றாக பவனி வருகறான் !

அனந்தபுரியின் செல்லம்
குறும்பன் க்ருஷ்ணனோடு
குதூகலமாய் பவனி வருகிறான் !


அனந்தபுரியின் ரக்ஷகன்
சப்தரிஷிகளின் வேதசப்தத்தோடு
ரமணீயமயமாய் பவனி வருகிறான் !



அனந்தபுரியின் காதலன்
கோபாலவல்லியின் மனதோடு
காதலில் பவனி வருகிறான் !


அவனன்றி நானில்லை . . .
நானின்றி அவனில்லை . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP