ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 அக்டோபர், 2011

தீபாவளி வாழ்த்துக்கள் . . .

ராதேக்ருஷ்ணா

தீபாவளி . . .

இந்த தீபாவளி எல்லோருக்கும்
விதவிதமான தீபாவளி . . .



சிஷ்யர்களுக்கு
அனுக்ரஹ தீபாவளியாகட்டும் . . .

பயந்தாக்கொள்ளிகளுக்கு
தைரிய தீபாவளியாகட்டும் !

பெற்றோர்களுக்கு
பொறுப்பு தீபாவளியாகட்டும் !

குழந்தைகளுக்கு
குதூகல தீபாவளியாகட்டும் !

அஹம்பாவிகளுக்கு
வினய தீபாவளியாகட்டும் !

வியாபாரிகளுக்கு
லாப தீபாவளியாகட்டும் !

தாய்மார்களுக்கு
வாஞ்சை தீபாவளியாகட்டும் !

தந்தைமார்களுக்கு
கடமை தீபாவளியாகட்டும் !

ஏழைகளுக்கு
நீங்காத செல்வ தீபாவளியாகட்டும் !

பணக்காரர்களுக்கு
நிம்மதி தீபாவளியாகட்டும் !

வியாதியஸ்தருக்கு
ஆரோக்கிய தீபாவளியாகட்டும் !


முதியோருக்கு
மரியாதை தீபாவளியாகட்டும் !

ஆதரவற்றோருக்கு
அன்பு மயமான தீபாவளியாகட்டும் !

படிக்கும் குழந்தைகளுக்கு
அறிவு தீபாவளியாகட்டும் !

படிப்பற்றவருக்கு
அனுபவ தீபாவளியாகட்டும் !

குடும்பத்தினருக்கு
கொண்டாட்ட தீபாவளியாகட்டும் !


புதுமண தம்பதியருக்கு
தலை தீபாவளியாகட்டும் !

ப்ரும்மசாரிகளுக்கு
வைராக்ய தீபாவளியாகட்டும் !

வயது வந்த பெண்களுக்கு
ஜாக்கிரதை தீபாவளியாகட்டும் !

ஊனமுற்றோருக்கு
உற்சாக தீபாவளியாகட்டும் !

முட்டாள்களுக்கு
ஞான தீபாவளியாகட்டும் !

முயல்பவருக்கு
திருவினை தீபாவளியாகட்டும் !

இந்துக்களுக்கு
வீர தீபாவளியாகட்டும் !



பாரதத்திற்கு
சுதந்திர தீபாவளியாகட்டும் !

உலகத்திற்கு
சாந்தி தீபாவளியாகட்டும் !

எல்லோருக்கும்
நிம்மதி தீபாவளியாகட்டும் !



தீபாவளி வாழ்த்துக்கள் . . .

Read more...

செவ்வாய், 25 அக்டோபர், 2011

நானின்றி அவனில்லை . . .

ராதேக்ருஷ்ணா

தீபாவளி . . .
உற்சவ தீபாவளி . . .
அனந்தனுக்கு தீபாவளி . . .
அனந்தபுர ராஜனுக்கு தீபாவளி . . .

அனந்தபுரி அழகன்
விசேஷமான அலங்காரத்தில்
ஆனந்தமாய் பவனி வருகிறான் !

அனந்தபுரி ராஜன்
விண்ணோரும் மண்ணோரும்
வியக்க பவனி வருகிறான் !

அனந்தபுரி நாயகன்
பக்தர்களின் ப்ரேம வெள்ளத்தில்
உற்சாகமாய் பவனி வருகிறான் !


அனந்தபுரியின் ஆனந்தன்
தீப ஒளியில் தீபாவளி இரவில்
ஜொலிப்பாய் பவனி வருகிறான் !


அனந்தபுரி அன்பன்
திருவிதாங்கூர் ராஜனோடு
அன்பாய் பவனி வருகிறான் !


அனந்தபுரி தேவாதி தேவன்
அனல் விழி, ப்ரஹ்லாத நரசிம்மரோடு
நன்றாக பவனி வருகறான் !

அனந்தபுரியின் செல்லம்
குறும்பன் க்ருஷ்ணனோடு
குதூகலமாய் பவனி வருகிறான் !


அனந்தபுரியின் ரக்ஷகன்
சப்தரிஷிகளின் வேதசப்தத்தோடு
ரமணீயமயமாய் பவனி வருகிறான் !



அனந்தபுரியின் காதலன்
கோபாலவல்லியின் மனதோடு
காதலில் பவனி வருகிறான் !


அவனன்றி நானில்லை . . .
நானின்றி அவனில்லை . . .

Read more...

திங்கள், 24 அக்டோபர், 2011

காரணம் யாரோ ? ? ?

ராதேக்ருஷ்ணா


கண்களிலே ஆனந்த பாஷ்பம் . . .
காரணம் யாரோ ? ? ?

உடலெல்லாம் மயிர்கூச்சல் . . .
காரணம் யாரோ ? ? ?

மனம் முழுக்க சந்தோஷம் . . .
காரணம் யாரோ ? ? ?

நினைக்க நினைக்க இனிக்கிறது . . .
காரணம் யாரோ ? ? ?

வாயெல்லாம் சிரிப்பு . . .
காரணம் யாரோ ? ? ?

வார்த்தைகளிலெல்லாம் குதூகலம் . . .
காரணம் யாரோ ? ? ?

நடையெல்லாம் துள்ளல் . . .
காரணம் யாரோ ? ? ?

பேச்செல்லாம் ஆனந்தமயம் . . .
காரணம் யாரோ ? ? ?

காரியங்களிலெல்லாம் நம்பிக்கை . . .
காரணம் யாரோ ? ? ?

வாழ்வெல்லாம் பரமானந்தம் . . .
காரணம் யாரோ ? ? ?

சொல்லமுடியாத சுகம் . . .
காரணம் யாரோ ? ? ?

மறைக்கமுடியாத அனுபவம் . . .
காரணம் யாரோ ? ? ?

காரணம் யாரோ . . .?

என் பத்மநாபனைத் தவிர
வேறு யார்தான் காரணம் . . .

என் காதலா . . .
என் அழகா . . .
என் கணவா . . .

பத்மநாபா . . .

என்றும் உன் கோபாலவல்லி . . .



Read more...

வெள்ளி, 21 அக்டோபர், 2011

மறக்காதே . . .

ராதேக்ருஷ்ணா


மறக்காதே . . .

சில விஷயங்களை
ஒருபோதும் மறக்கவே கூடாது . . .

நாமஜபத்தை மறக்காதே . . .

க்ருஷ்ணனை மறக்காதே . . .

வினயத்தை மறக்காதே . . .

அன்பை மறக்காதே . . .

நன்றியை மறக்காதே . . .

பெற்றோரை மறக்காதே . . .

வாங்கின கடனை மறக்காதே . . .

உன் கடமையை மறக்காதே . . .

நல்லவைகளை மறக்காதே . . .

நல்லவர்களை மறக்காதே . . .

உழைப்பை மறக்காதே . . .

உதவியவை மறக்காதே . . .

உதவியவரை மறக்காதே . . .

தெய்வத்தின் அருளை மறக்காதே . . .

தாய்மொழியை மறக்காதே . . .

தாய்நாட்டை மறக்காதே . . .

பக்தர்களை மறக்காதே . . .

பக்தியை மறக்காதே . . .

பஜனையை மறக்காதே . . .

சத்சங்கத்தை மறக்காதே . . .

சத்குருவை மறக்காதே . . .

மறக்காதே . . .

இதில் ஒன்றை மறந்தாலும்
நீ மனிதரில்லை . . .


Read more...

வியாழன், 20 அக்டோபர், 2011

மறந்து பார் . . .

ராதேக்ருஷ்ணா

வாழ்வில் பல
விஷயங்களை
நீ மறந்துவிட்டாய் . . .

சில விஷயங்களை
மறக்க முயற்சிக்கிறாய் . . .

சில விஷயங்களை
மறப்பதேயில்லை . . .

இப்பொழுது நான்
சொல்லப்போவதையெல்லாம்
மறந்து பார் . . .

உன் அஹம்பாவத்தை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .

உன் சுயநலத்தை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .

உன் பொறாமையை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .

உன் அதிகப்பிரசங்கித்தனத்தை
மறந்துவிட்டு வாழ்வைப் பார் . . .

உன் கோபத்தை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .

உன் விரோதத்தை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .

உன் கெட்ட எண்ணங்களை
மறந்துவிட்டு வாழ்வைப் பார். . .

இவையெல்லாவற்றையும்
வைத்துக்கொண்டு
நீ வாழ்வைப் பார்ப்பதால்தான்
உன் வாழ்க்கை நரகமாய்த் தெரிகிறது !

இவையெல்லாவற்றையும்
நீ மறந்துவிட்டால் உன் வாழ்க்கை
க்ருஷ்ணனின் வரம் என்பது
உனக்குப் புரியும் !

இவைகளை நித்தியம்
நீ மறக்கத்தான் செய்கிறாய் !

எப்பொழுது . . .?

தூங்கும்போது . . .

முழித்திருக்கும்போதும்
நீ இவைகளை மறந்துவிட்டால் . . .

ஆஹா . . .
சீக்கிரம் மறந்துவிடேன் . . .

இந்த மறதி உனக்கு வர
நான் க்ருஷ்ணனிடம் ப்ரார்த்திக்கிறேன் . . .


Read more...

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

பிரச்சனைகள் . . .

ராதேக்ருஷ்ணா
 
பிரச்சனைகள் . . .
பிரச்சனைகள் இல்லாத
மனிதரில்லை . . .
 
பிரச்சனைகள் இல்லாமல்
ஒரு வாழ்க்கையில்லை . . .
பிரச்சனைகள் இல்லாமல்
உலகின் சுழற்சி இல்லை . . .

பிரச்சனைகள் நம்
வாழ்வில் ஓர் அங்கம் . . .

பிரச்சனைகள் நம்
வாழ்வின் ஓர் ஆதாரம் . . .

பிரச்சனைகள் நம்மை
பக்குவப்படுத்தும் ஒரு ஆசான் . . .
 
பிரச்சனைகளை அணுக
நமக்குத்தான்  தெரியவில்லை . . .

நானும் பிரச்சனைகளோடு
போராடிக்கொண்டே இருக்கிறேன் . . .
பல வருடங்களாக
பிரச்சனைகளிடமிருந்து
நான் கண்டறிந்த உண்மை இதுவே !

பிரச்சனைகளைக் கண்டு
நான் பயந்தால் அது என்னை
இன்னும் பயமுறுத்தும் . . .

பிரச்சனைகளைக் கண்டு
நான் அழுதால் அது என்னை
இன்னும் அழவைக்கும் . . .

பிரச்சனைகளைக் கண்டு
நான் ஓடினால் அது என்னை
பயங்கரமாகத் துரத்தும் . . .

பிரச்சனைகளைக் கண்டு
நான் புலம்பினால் அது என்
நிம்மதியைக் கெடுக்கும் . . .

பிரச்சனைகளைப் பற்றி
நான் அடுத்தவரிடம் பேசினால்
அது என்னைப் பரிகசிக்கும் . . .

பிரச்சனைகளைக் கண்டு
நான் மனம் புழுங்கினால்
அது என்னை அசிங்கப்படுத்தும் . . .

பிரச்சனைகள் என்று தீரும்
என்று நான் ஏங்கினால் அது
என் முதுகில் சவாரி செய்யும் . . .

பிரச்சனைகள் தீராது என்று
நான் முடிவு செய்தால் அது
என் வாழ்வை சீரழிக்கும் . . .

ஆனால் இதுதானே நாம்
எல்லோரும் செய்கின்றோம் . . .

அதனால் பிரச்சனைகள்
பிரச்சனைகளல்ல . . .
நாம் அணுகும் முறைதான்
பிரச்சனை . . .

இது நான் கண்ட முதல் உண்மை . . .

அடுத்தது . . .

பிரச்சனைகளைக் கண்டு
நாம் சிரித்தால் அது நமக்கு
பலவித நன்மைகள் செய்யும் !

பிரச்சனைகளை தைரியமாகக்
கையாண்டால் அது நமக்கு
அடிமையாகிச் சேவகம் செய்யும் !

பிரச்சனைகளை எதிர்கொள்ள
நாம் காத்திருந்தால் அது நம்மைக்
கண்டு விலகி ஓடி விடும் !

பிரச்சனைகளை நாம்
புரிந்துகொண்டுவிட்டால் அது
நம் வாழ்வை வளமாக்கும் !

அதனால் பிரச்சனைகள்
எனக்கு நல்லவையே . . .

உனக்கு எப்படி ? ? ?



Read more...

செவ்வாய், 4 அக்டோபர், 2011

நீயில்லாமல் நானில்லை . . .

ராதேக்ருஷ்ணா 


என்னை நான் தேடுகிறேன் !


காமத்தில் மூழ்கிவிட்ட
என்னைத் தேடுகிறேன் !

கோபத்தில் மாட்டிக்கொண்ட
என்னைத் தேடுகிறேன் !

பயத்தில் ஒளிந்துகொண்டிருக்கும்
என்னைத் தேடுகிறேன் !

அஹம்பாவத்தில் சிக்கிகொண்டிருக்கும் 
என்னைத் தேடுகிறேன் !

சுயநலத்தில் சுழன்றுகொண்டிருக்கும்
என்னைத் தேடுகிறேன் !

குழப்பத்தில் கரைந்துவிட்ட
என்னைத் தேடுகிறேன் !

திடீரென நான் எனக்கு
கிடைக்கிறேன் . . .

பல சமயங்களில் நான்
எனக்குக் கிடைப்பதில்லை . . .

சில சமயங்களில் நான்
எனக்கு ரொம்ப அழகாகக் கிடைக்கிறேன் !

அந்த சில சமயங்கள்
நான் நாமத்தை ஜபிக்கும் நேரங்கள் . . .

கிருஷ்ணனின் நாமத்தை
நா ஜபித்தால் நான் எனக்குக்
கிடைக்கிறேன் . . .

கிருஷ்ணனின் நாமத்தை
நான் மறந்தால் என்னை
நான் தேடவேண்டி உள்ளது . . .

எவ்வளவு தேடினாலும்
நான் எனக்குக் கிடைப்பதில்லை . . .

திரும்பவும் நா நாமத்தை
ஜபித்தால் கிடைக்கிறேன் . . .

என்ன அதிசயம் இது . . .

நான் எனக்குக் கிடைக்கும்போது
எத்தனை சந்தோஷம் . . .

நான் என்னைத் தேடும்போது
எத்தனை துக்கம் . . .

கிருஷ்ணா . . .
ஒன்று தெளிவாய் புரிந்தது . . .

நீயில்லாமல் நானில்லை . . .

நீயில்லாத நான் கொடுமை . . .

நீயில்லாத நான் அசிங்கம் . . .

நீயில்லாத நான் கேவலம் . . .

நீயில்லாத நான் பயங்கரம் . . .

நீயில்லாத நான் அழுக்கு . . .

நீயில்லாமல் நான் நானில்லை . . .

நீயில்லாத நான் தேவையில்லை . . .




Read more...

திங்கள், 3 அக்டோபர், 2011

திறந்து பார் . . .

ராதேக்ருஷ்ணா


உன் மனதைத் திறந்து வை !

உலகம் உனக்கு நிறைய
நல்லதைத் தருகிறது !
முழுவதுமாக வாங்கிக்கொள்ள
உன் மனதைத் திறந்து வை !

க்ருஷ்ணன் உனக்கு எல்லா
உதவிகளையும் செய்கிறான் !
முழுவதுமாக உதவிபெற
உன் மனதைத் திறந்து வை !

இயற்கை உனக்கு எல்லையில்லா
சுகத்தை வழங்கிக்கொண்டேயிருக்கிறது !
முழுவதுமாக அனுபவிக்க
உன் மனதைத் திறந்து வை !

வாழ்க்கை உன்னை உயர்த்த
எல்லா சிறந்த வழிகளையும் காட்டுகிறது !
முழுவதுமாக உபயோகப்படுத்த
உன் மனதைத் திறந்து வை !

உன் மனதைத் திறவாமல்
யாரிடம் கோபித்து என்ன பயன் ?

உன் மனதைத் திறவாமல்
யாரிடம் புலம்பி என்ன பயன் ?

உன் மனதைத் திறவாமல்
யாரைப் பழித்து என்ன பயன் ?

உன் மனதைத் திறவாமல்
வாழ்வை வெறுத்து என்ன பயன் ?

உன் மனதைத் திறவாமல்
தெய்வத்தைக் கடிந்து என்ன பயன் ?

உன் மனதைத் திறவாமல்
வாழ்வில் நீ எதை அடைவாய் ?

உன் மனதைத் திறவாமல்
அடுத்தவரிடம் கெஞ்சி என்ன பயன் ?

உன் மனதைத் திற . . .
அது மட்டுமே நீ செய்ய வேண்டியது ! ! !

திறந்து பார் . . .
வெற்றி நிச்சயம் . . .

உன் மனது தருவதே உன் சுகம் . . .
உன் மனது தருவதே உன் வெற்றி . . .
உன் மனது தருவதே உன் ஆரோக்கியம் . . .
உன் மனது தருவதே உன் பலம் . . .
உன் மனது தருவதே உன் வாழ்ககை . . .

உன் மனது சொல்வதையே
உலகம் உனக்குத் தருகிறது . . .


உன் மனது சொல்வதையே
இயற்கை உனக்குச் செய்கிறது . . .


உன் மனது சொல்வதையே
வாழ்க்கை உனக்குக் கொடுக்கிறது . . .


உன் மனதைத் திற . . .
உடனே திறந்து பார் . . .


Read more...

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ஹே ராம் ! ! !

ராதேக்ருஷ்ணா


ஹே ராம் ! ! !
முகம்மதியருக்கு
தனமும்,தனி நாடும்
தந்தோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
ஆங்கிலேயரின் மதத்திற்கு
மதமாற்ற உரிமையும், சலுகையும்
தந்தோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
சிறுபான்மையினருக்கு 
நம் கோவில் வருமானத்தையும்,இடத்தையும்
தந்தோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
அஹிம்சை என்று சொல்லிக்கொண்டு
காஷ்மீரத்தில் மௌனமாய்
நிற்க்கிறோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
எம்மதமும் சம்மதம்
என்று எல்லோரையும்
வரவேற்க்கிறோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
வெளிநாட்டுப் பொருட்களை
பாரதத்தில் விற்க்க
அனுமதி தந்தோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
தாய் மொழியை வெறுத்து
நுனி நாக்கில்
ஆங்கிலம் பேசப் பழகினோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
நம் ஆரோக்கிய உணவை
மறந்து,துரித உணவைச்
சாப்பிடக் கற்றோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

நாடு துண்டானதை மறந்தோம் . . .
கொள்ளையரையும் மறந்தோம் . . .
அஹிம்சையையும் மறந்தோம் . . .
மதமாற்றத்தையும் மறந்தோம் . . .
கலாசாரத்தையும் மறந்தோம் . . .
சுதந்திரப் போராட்டத்தை மறந்தோம் . . .
தியாகத்தை மறந்தோம் . . .
தியாகிகளை மறந்தோம் . . .
சுதந்திரத்தையும் மறந்தோம் . . .

ஹே ராம் ! ! !
எங்களை கரையேற்று . . .

இந்தியா . . .
இந்துஸ்தானமாக மாறுவது எப்போது ? ? ?

மஹாபாரதம் சொன்ன பாரதம் எங்கே ? 

ராமாயணம் நடந்த பாரதம் எங்கே ?

ஹே ராம் . . .
எங்களுக்கு பாரதம் தா . . .

உனக்கு ஒரு கோயிலைக் கூட
அயோத்தியாவில் கட்ட முடியாத
இந்த முதுகெலும்பில்லாத
இந்துக்களைக் காக்க வா . . .

ஹே ராம் ! ! !
எல்லாவற்றையும் தந்துவிட்டு,
கேள்விக்குறியாய் நிற்கும்
எங்களைக் காக்க வா . . .

ஹே ராம் ! ! !
மற்ற மதத்தினரின்
கேலிக்கூத்தாய் ஆகிவிட்ட
உன் இந்து தர்மத்தைக் காக்க வா . . .

ஹே ராம் . . .

Read more...

சனி, 1 அக்டோபர், 2011

தெய்வத்தைப் பார்க்கிறேன் !

ராதேக்ருஷ்ணா


குழந்தையின் சிரிப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தாயின் அரவணைப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தந்தையின் வழிகாட்டுதலில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

மனைவியின் அக்கறையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

கணவனின் பொறுப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

சகோதரனின் உதவியில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

சகோதரியின் உரிமையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !


நண்பரின் உயர் நட்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

வயதானவரின் அறிவுரையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

இளைஞர்களின் பலத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தொழிலாளர்களின் உழைப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

சூரியனின் ஒளியில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

சந்திரனின் ஈர்ப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

காற்றின் ஸ்பரிசத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தாகம் தீர்க்கும் தண்ணீரில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

பூமியின் பொறுமையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

ஆகாசத்தின் பரப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

மேகங்களின் மழையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

பசியைப் போக்கும் உணவில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

நல்லவரின் காரியங்களில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

எழுத்தறிவிக்கும் ஆசானிடத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

உயர்ந்தோரின் குணங்களில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தோற்றவர்களின் விடாமுயற்சியில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

மிருகங்களின் வாழ்வில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தாவரங்களின் உபயோகத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

மலர்களின் வாசத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

மானத்தைக் காக்கும் ஆடைகளில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

அவமானத்தில் துவளாத உத்தமரிடம்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தற்கொலை செய்யா ஏழையிடம்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

இயற்கையின் வனப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

இளமையின் உணர்வில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

முதுமையின் பக்குவத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

ஆண்களின் காம்பீர்யத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

பெண்களின் மென்மையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

மொழியின் சப்தத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

நாஸ்தீகரின் தேடலில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

ஆஸ்தீகரின் நம்பிக்கையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

உலகிற்க்கான ப்ரார்த்தனையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தியாகிகளின் தியாகத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

உத்தமமான அன்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

குருவின் கருணையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

உன்னுள்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

என்னுள்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

நம் ஒற்றுமையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !


Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP