ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 செப்டம்பர், 2011

வாருங்கள் . . .

ராதேக்ருஷ்ணா


தடைகளே வாருங்கள் . . .
எத்தனை தடைகள்
வந்தாலும் நான் ஓயமாட்டேன் . . .


பிரச்சனைகளே வாருங்கள் . . .
எவ்வளவு பிரச்சனைகள்
வந்தாலும் நான் ஓடமாட்டேன் . . .


தொல்லைகளே வாருங்கள் . . .
எத்தனை தொல்லைகள்
தந்தாலும் என் முயற்சி நிற்காது . . .


குழப்பங்களே வாருங்கள் . . .
கோடி குழப்பங்கள் வந்தாலும்
என்னை ஒன்றும் செய்யமுடியாது . . .


கர்மவினைகளே வாருங்கள் . . .
என் க்ருஷ்ணன் என்னிடம்
இருப்பதால் எனக்கு பயமில்லை . . .


தோல்விகளே வாருங்கள் . . .
எத்தனை தோல்விகள் வந்தாலும்
நான் ஒன்றும் அசந்துபோகமாட்டேன் . . .


நான் தோற்றுப்போக மாட்டேன் !

நான் ஓய்ந்துபோக மாட்டேன் !

நான் ஓடிப்போக மாட்டேன் !

நான் அழுது மூலையில் உட்காரமாட்டேன் !

நான் மற்றவரிடம் புலம்பமாட்டேன் !

போராடி ஜெயித்தே தீருவேன் !

இதை யாரும் தடுக்க முடியாது !

என் க்ருஷ்ணன் என் பலம் ! ! !

உலகின் ஆதி சக்தி
எனக்கு பலமாயிருக்கும்போது
நான் ஜெயித்தேதீருவேன் . . .

நான் ஜெயிப்பது நிச்சயம் . . .

நான் ஜெயிப்பது நிச்சயம் . . .

நான் ஜெயிப்பது நிச்சயம் . . .

சத்தியம் . . .சத்தியம் . . .சத்தியம் ! ! !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP