ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

தினமும் கவனி . . .

ராதேக்ருஷ்ணா


வாழ்க்கை தருவதை
எல்லாம் ஏற்றுக்கொள் . . .

வாழ்க்கை உனக்கு
என்னவெல்லாம் தேவையோ
அதை மட்டுமே தருகிறது . . .

வாழ்க்கை தருகிற விஷயங்களில்
நீ உன் வாழ்க்கையை
நடத்த ரஹஸ்யங்கள் ஒளிந்திருக்கிறது . . .

உன் வாழ்க்கை தருகிற பல
அற்புதங்களை அஹம்பாவத்தினால்
நீ உணருவதில்லை . . .

உன் வாழ்க்கை தருகிற பல
பரிசுகளை குழப்பத்தினால்
நீ வாங்கிகொள்வதில்லை . . .

உன் வாழ்க்கை தருகிற பல
நல்ல ஆசீர்வாதங்களை பயத்தினால்
நீ ஏற்றுக்கொள்வதில்லை . . .

உன் வாழ்க்கை தருகிற பல
விசேஷமான வாய்ப்புகளை
நீ கவலையினால் உபயோகப்படுத்துவதில்லை !

உன் வாழ்க்கை எப்படி
உனக்குத் துரோகம் இழைக்கும் ?

உன் வாழ்க்கை எப்படி
உன்னை படாதபாடு படுத்தும் ?

உன் வாழ்க்கை எப்படி
உன்னை அழ வைக்கும் ?

உன் வாழ்க்கை எப்படி
உன்னை அவமானப்படுத்தும் ?

வாழ்வை புரிந்து கொள் !
உன் வாழ்வை புரிந்து கொள் !
சரியாகப் புரிந்து கொள் !

உன் வாழ்க்கை விசேஷமானது !
உன் வாழ்க்கை அற்புதமானது !
உன் வாழ்க்கை அருமையானது !

வாழ்க்கை உன் மீது முழுமையான
நம்பிக்கை வைத்திருக்கிறது . . .

நீ உன் வாழ்க்கையிடம்
பூரணமான நம்பிக்கையை வை . . .

இனியும் உன் வாழ்க்கையைக்
கேவலப்படுத்தாதே . . .

இனி உன் வாழ்க்கையைத்
தொலைக்காதே . . .

இனி உன் வாழ்க்கையை வாழ் . . .

அடுத்தவர் வாழ்க்கை வேறு . . .
உன் வாழ்க்கை வேறு . . .

அடுத்தவர் வாழ்க்கையை
உன்னால் வாழ முடியாது !

அடுத்தவரைப் போல் வாழ
நீ இந்த உலகில் பிறக்கவில்லை !

அடுத்தவரின் வாழ்க்கை
உனக்கு நன்மையைச் செய்யாது !

உன் வாழ்வை கவனி . . .
தினமும் கவனி . . .
இப்பொழுதே கவனி . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP