ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 மே, 2011

செத்துப் போ . . .

ராதேக்ருஷ்ணா

என்ன விலை ?

உன் கண்களின் விலை என்ன ?

உன் காதுகளுக்கு என்ன விலை ?

உன் கைகளின் விலை என்ன ?

உன் கால்களுக்கு என்ன விலை ?

உன் சிந்தனையின் விலை என்ன ?

உன் மனதிற்கு என்ன விலை ?

உன் உடலின் விலை என்ன ?

உன் புத்திக்கு என்ன விலை ?

உன் உயிரின் விலை என்ன ?

உன் ஆனந்தத்திற்கு என்ன விலை ?

உன் வாழ்வின் விலை என்ன ?

உன் நேரத்திற்கு என்ன விலை ?

உன் ஆரோக்கியத்தின் விலை என்ன ?

யோசித்துப் பார் . . .
நீ விலைமதிப்பற்றவன்/ மதிப்பற்றவள் . . .

அதனால் நீ வாழ்ந்துகாட்டவேண்டும் . . .
 
ஒதுங்கியது போதும் . . .
பயந்தது போதும் . . .
குழம்பியது போதும் . . .
அழுதது போதும் . . .
சந்தேகம் கொண்டது போதும் . . .

புதியதாய் தொடங்கு . . .
உன்னை புதியதாய் மாற்றிக்கொண்டு
தொடங்கு . . .

உன் புது வாழ்வைத் தொடங்கு . . .
நேற்று தோற்ற நீ இன்று இல்லை . . .
இன்று வெல்ல நீ புதியதாக வந்திருக்கிறாய் !

பழையதை வீசி எறி  . . .
உன் பழமையை கொளுத்திப்போடு . . .

புதிய விதையாய் உன்னை
வாழ்வில் விதை . . .

புதிய நம்பிக்கையை
தண்ணீராய் ஊற்று . . .

புதிய பலத்தை
சூரிய வெளிச்சமாய் காட்டு . . .

புதிய முயற்சியை
வேலியாய் கட்டு !

வென்று பார் . . .
உன்னை வென்று பார் . . .

உலகில் உன் விலையை
நீ நிர்ணயம் செய் . . .
 
உலகில் உன் மரியாதையை
நீ முடிவு செய் . . .
உலகில் உன் வாழ்க்கையின்
அர்த்தத்தை நீ நிரூபணம் செய் . . .

உடனே செய் . . .
உன் உடல் விழும் முன்பு செய் . . .

நீ வீழமாட்டாய் என்பதை
 நிரூபித்துவிட்டுப் பிறகு
உன் உடலைக் கீழே போடு . . .

பிறகு உலகை விட்டுப் போ . . .
அதுவரை போராடு . . .

நிரூபித்துவிட்டு செத்துப் போ . . .
நிரூபணம் செய்யும் வரை வாழ் . . .
நிரூபணம் செய்வதற்காக வாழ் . . .
உன்னை உனக்கு நிரூபி . . .



 

Read more...

திங்கள், 23 மே, 2011

க்ருஷ்ண பக்தி !

ராதேக்ருஷ்ணா
 
க்ருஷ்ணன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .
 
கஷ்டங்கள் வரட்டும் !
க்ருஷ்ணன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

  
பிரச்சனைகள் படுத்தட்டும் !
க்ருஷ்ணன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .
 
 
வியாதிகள் நோகடிக்கட்டும் !
க்ருஷ்ணன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .
 
 
துன்பங்கள் விளையாடட்டும் !
க்ருஷ்ணன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .
 
 எது எப்படி வேண்டுமானாலும்
நடக்கட்டும் . . .
க்ருஷ்ணன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .
 
 
நான் க்ருஷ்ணனிடம் பணம்
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் நிம்மதி
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் தைரியம்
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் ஆனந்தம்
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் ஆரோக்கியம்
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் வெற்றியைக்
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் ராஜபதவி
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் உலகில் பெருமை
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் சொத்து
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் மோக்ஷம்
கேட்கமாட்டேன் . . .

நான் க்ருஷ்ணனிடம் ஒன்றுமே
கேட்கமாட்டேன் . . .

எனக்கு க்ருஷ்ணனிடமிருந்து
ஒன்றுமே வேண்டாம் . . .

க்ருஷ்ணன் என்னோடு இருக்கிறான் என்பதே
எனக்குப் போதும் . . .

க்ருஷ்ணன் என்னை விட்டு நீங்கவே
மாட்டான் என்பதே எனக்குப் போதும் . . .

க்ருஷ்ணன் என் மீது அளவு கடந்த
அன்பை வைத்திருக்கிறான் என்பதே
எனக்குப் போதும் . . .
 
என் பக்திக்கு எனக்கு ஒன்றுமே
க்ருஷ்ணனிடமிருந்து வேண்டாம் . . .
 
 
எனக்குப் பக்தியே போதும் . . .
க்ருஷ்ண பக்தியே போதும் . . .
எல்லாப் பிறவியிலும் இது போதும் . . .
 
இதைத் தவிர எதுவும் சுகமில்லை . . .
 
இதை விட்டு எதைக் கேட்டு என்ன சுகம் ? ? ?
 
அதனால் எனக்கு க்ருஷ்ண பக்தி போதும் . . .
 
 

Read more...

ஞாயிறு, 22 மே, 2011

யாருக்குச் சொந்தம் ?

ராதேக்ருஷ்ணா

இந்த உடல் யாருக்கு சொந்தம் ? 

வயிற்றில் பத்து மாதம்
சுமந்த அம்மாவுக்கா ?

தன் வீர்யத்தை விதைத்த
தந்தைக்கா ?

சுகமாய் கொஞ்சி மகிழும்
பந்துக்களுக்கா ?

பாடம் சொல்லிக்கொடுக்கும்
வாத்தியாருக்கா ?

வேலை தந்து சம்பளம் தரும்
யஜமானனுக்கா ?

இளவயதில் சுகம் தரும்
மனைவிக்கா / கணவனுக்கா ?

வயதான காலத்தில்
உடனிருக்கும் மகனுக்கா/மகளுக்கா ?

மதித்துக் காப்பாற்றும்
மருமகனுக்கா / மருமகளுக்கா ?

பல வித வியாதிகளிருந்து
காக்கும் வைத்தியனுக்கா ?

மானத்தைக் காப்பாற்றும்
நம்முடைய ஆடைக்கா ?

தேவையான உதவி செய்யும்
நண்பர்களுக்கா ?

தன் வசத்திற்கு இழுக்கும்
காமத்துக்கா ?

நம்மையே மறக்கடிக்கும்
கோபத்திற்கா ?

நடுநடுங்க வைக்கும்
பயத்திற்கா ?

தேவையான சுகத்தை
ஏற்படுத்தித்தரும் பணத்திற்கா ?

நினைத்தபோதெல்லாம் படுத்தும்
வியாதிகளுக்கா ?

அந்திம காலத்தில் எரித்துச்
சாம்பலாக்கும் அக்னிக்கா ?

புதைத்தால் உணவாக்கிக் கொள்ளும்
புழுக்களுக்கா ?

இல்லையென்றால் இந்த உடலில்
பல வருடங்களாக குடிகொண்டிருக்கும்
நமக்கா ?

நமக்கு அனுக்ரஹம் செய்யும் தெய்வத்திற்கா ?

இந்த உடலின் காரணமான
பாப, புண்ணியத்திற்கா ?

தன்னிஷ்டப்படியெல்லாம்
இதை ஆடவைக்கும் அடங்காத
ஆசைகளுக்கா ?

யோசித்துச் சொல் . . .

யாருக்குச் சொந்தம் . . .

இந்த உடல் யாருக்குச் சொந்தம் ?

உன்னுடைய உடல் யாருக்குச் சொந்தம் ? ? ?


Read more...

சனி, 21 மே, 2011

பக்தியை அனுபவி . . .

ராதேக்ருஷ்ணா


உனக்காகப் பக்தி செய் !

உன் க்ருஷ்ணனுக்காகப் பக்தி செய் !

உன் வாழ்க்கைக்காக பக்தி செய் !

உன் சந்தோஷத்திற்காக பக்தி செய் !

உன் நிம்மதிக்காகப் பக்தி செய் !

உன்னைப் புரிந்துகொள்ள பக்தி செய் !

உலகில் நிம்மதியாய் வாழ பக்தி செய் !

உன்னை க்ருஷ்ணன் அனுபவிக்க பக்தி செய் !

நீ க்ருஷ்ணனை அனுபவிக்க பக்தி செய் !

ஆனந்தமாக பக்தி செய் !

தைரியமாக பக்தி செய் !

நிதானமாக பக்தி செய் !

தீர்மானமாக பக்தி செய் !

த்ருப்தியாக பக்தி செய் !

சரியான பக்தி செய் !

முன்னோர் சொன்ன பக்தி செய் !

வாழ்க்கை முடியும் வரை பக்தி செய் !

வாழ்க்கை முடிந்த பின்னும் பக்தி செய் !

சுலபமான பக்தி செய் !

சுத்தமான பக்தி செய் !

யாருக்கும் உன் பக்தியை
நீ நிரூபணம் செய்ய வேண்டாம் !

உன் பக்தி . . .உன் க்ருஷ்ணன் . . .

அனுபவி . . .
பக்தியை அனுபவி . . .

யாருக்காகவோ பக்தி செய்யாதே . . .

பக்தி என்பது கடினம் இல்லை . . .

பக்தி என்பது கொடுமை இல்லை . . .

பக்தி என்பது குழப்பம் இல்லை . . .

எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கவே
பக்தி . . .

பக்தியை அறி . . .

பக்தியை அனுபவி . . .


Read more...

வியாழன், 12 மே, 2011

பொறுமை இருக்கிறதா ? ? ?

ராதேக்ருஷ்ணா
 
அவசரப்படாதே . . .
வாழ்வில் பொறுமை
மிக மிக அவசியம் . . .
எங்கும் பொறுமையாயிரு !
 
எல்லோரிடமும் பொறுமையாயிரு !
எப்பொழுதும் பொறுமையாயிரு !
 
பொறுமை இல்லாதவர்கள்
வாழ்வில் ஜெயித்ததில்லை !
 
பொறுமை இல்லாதவர்கள்
பெரிய காரியங்கள் செய்யமுடியாது !
 
பொறுமை இல்லாதவர்கள்
தங்களையே அவமதிக்கிறார்கள் !
 
பொறுமை இல்லாதவர்கள்
தன்னையே இழக்கிறார்கள் !
 
பொறுமை இல்லாதவர்கள்
தெய்வத்தையும் அனுபவிப்பதில்லை !
 
பொறுமை இல்லாதவர்கள்
உலகில் வெல்வதில்லை !
 
பொறுமை இல்லாதவர்கள்
எதையும் சாதிப்பதில்லை !
 
பொறுமையாயிருப்பதால்
நீ கோழையில்லை !
 
பொறுமையாயிருப்பதால்
நீ முட்டாளில்லை !
 
பொறுமையாயிருந்தால்
உன்னால் சரியாக யோசிக்கமுடியும் !
 
பொறுமையாயிருந்தால்
உன்னால் தெளிவாகப் பேசமுடியும் !
 
பொறுமையாயிருந்தால்
உன்னால் சரியான முடிவெடுக்கமுடியும் !
 
பொறுமையாயிருந்தால்
உன்னால் சாதிக்கமுடியும் !
 
பொறுமையாயிருந்தால்
தெய்வம் உன்னைத் தேடி வரும் !
 
பொறுமையாயிருந்தால்
உலகம் உன்னை கொண்டாடும் !
 
பொறுமையாயிருந்தால்
உனக்கே உன்னைப் பிடிக்கும் !
 
பொறுமையாயிருந்தால்
நீ உலகையே ஆளலாம் !
 
பொறுமையாயிருந்தால்
உன் பேச்சு எடுபடும் !
 
பொறுமையாயிருந்தால்
உன்னை மற்றவர் மதிப்பர் !
 
பொறுமையாயிருந்தால்
உன் ஆரோக்கியம் நன்றாயிருக்கும் !

பொறுமையாயிருந்தால்
நீ நிம்மதியாக வாழமுடியும் !

பொறுமையாயிருந்தால்
நீ நீண்ட ஆயுளோடு இருக்கமுடியும் !

பொறுமையாயிருந்தால்
உன் காரியங்கள் தானாக நடக்கும் !

பொறுமையாயிருந்தால்
யாவரும் உனக்கு உதவிசெய்வர் !

பொறுமையாயிருந்தால்
உன் மனம் சமாதானமாயிருக்கும் !

பொறுமையாயிருந்தால்
அழகு உன்னைத் தேடி வரும் !

பொறுமையின் பெருமை பெரியது !

பொறுமை உனக்கிருந்தால்
உன்னை வெல்ல உலகில் யாருமில்லை !

பொறுமை இருக்கிறதா ? ? ?


 
 

Read more...

செவ்வாய், 10 மே, 2011

அணையா ஜோதி !

ராதேக்ருஷ்ணா

சிரி . . .
துன்பத்தைப் பார்த்துச் சிரி !

சிரி . . .
குழப்பத்தைப் பார்த்துச் சிரி !

சிரி . . .
பயத்தைப் பார்த்துச் சிரி !

சிரி . . .
கவலைகளைக் கண்டு சிரி !

சிரி . . .
அவமரியாதைக் கண்டு சிரி !

சிரி . . .
நோயைப் பார்த்துச் சிரி !

சிரி . . .
பொறாமையைப் பார்த்துச் சிரி !

சிரி . . .
அஹம்பாவத்தைப் பார்த்துச் சிரி !

சிரி . . .
தற்பெருமையைப் பார்த்துச் சிரி !

சிரி . . .
பிரச்சனைகளைக் கண்டு சிரி !

சிரி . . .
சுமைகளைக் கண்டு சிரி !

சிரி . . .
கஷ்டமான சமயங்களில் சிரி !

சிரி . . .
நீ நம்பினவர்கள் உன்னை
ஏமாற்றும்போது சிரி !

சிரி . . .
உனக்கு நம்பிக்கை துரோகம்
செய்தவர்களைக் கண்டு சிரி !

சிரி . . .
உன்னை எல்லோரும்
ஒதுக்கிவைக்கும்போது சிரி !

சிரி . . .
உலகம் உன்னைக் கண்டு
பரிகசிக்கும்போது சிரி !

சிரி . . .
உலகம் உன் மீது வீண் பழி
சுமத்தும்போது சிரி !

சிரி . . .
நீ நஷ்டப்படும்போது சிரி !

சிரி . . .
நீ தோல்வியடையும்போது சிரி !

சிரி . . .
சிரி . . . சிரி . . . சிரி . . .

அழுதது போதும் . . .
புலம்பியது போதும் . . .
நடுங்கியது போதும் . . .
நொந்தது போதும் . . .
வீழ்ந்தது போதும் . . .
 கலங்கியது போதும் . . .
துவண்டது போதும் . . .
கெஞ்சியது போதும் . . .

எழுந்திரு , , ,
அணையா ஜோதி ஒன்று
உன்னோடு இருக்கிறது !
என்றும் உன்னோடு இருக்கிறது !
நம்பிக்கை என்னும் அணையா
ஜோதி உன்னிடம் இருக்கிறது !

அதனால் தைரியமாகச் சிரி . . .
கைகொட்டிச் சிரி . . .
விடாமல் சிரி . . .

சிரித்துக்கொண்டே இந்த உலகை வெல் !
 சிரித்தே இந்த மனிதர்களை வெல் !

சிரிப்பால் உன்னையே வெல் !


சிரிப்பால் வெல்லமுடியாதது எதுவுமில்லை !

 

Read more...

நான் கற்ற பாடம் !

ராதேக்ருஷ்ணா

போராடு . . .

உன்னால் முடியும்; போராடு !

உன்னிடம் பலமுண்டு; போராடு !

உனக்குள் சக்தியிருக்கிறது; போராடு !

உன்னுடன் க்ருஷ்ணன் இருக்கிறான்;
அதனால் போராடு !

வெற்றியைப் பற்றி யோசிக்காமல் போராடு !

தோல்வியைப் பற்றிப் பயப்படாமல் போராடு !

அவமானத்தை நினைக்காமல் போராடு !

எதற்கும் கலங்காமல் போராடு !

தைரியத்தை விடாமல் போராடு !

போராடாவிட்டால் வாழ்க்கையே போராட்டம் !

போராடிவிட்டால் வாழ்க்கை உன்னை மதிக்கும் !

போராடாமல் இந்த உலகில் வாழ்க்கையில்லை !

ஜனனம் ஒரு போராட்டம் !

பசி ஒரு போராட்டம் !

ஆரோக்கியம் ஒரு போராட்டம் !

அன்பு ஒரு போராட்டம் !

அதனால் போராடு !

முயற்சியோடு போராடு !

இங்கு போராட்டமில்லாவிடில்
வாழ்க்கை ஒரு நரகம் !

இங்கு போராடத் தயங்குபவருக்கு
வாழ்க்கை ஒரு பயங்கரம் !

இங்குப் போராடாதவர்கள்
சாதனை செய்யமுடியாது !

இங்கு போராட்டத்திலிருந்து
ஒதுங்குபவர்கள்,
வாழ்க்கையை ஒதுக்குகிறார்கள் !

இங்கு போராட பயப்படுபவர்களை
வாழ்க்கை ஒதுக்கிவைக்கிறது !

மரமும் செடியும் போராடுகிறது !

பறவையும்,மிருகமும் போராடுகிறது !

ஈயும், எறும்பும் போராடுகிறது !

ஹே மனிதா !
நீயும் போராடு !

முடிந்தவரை போராடு என்று
நான் சொல்லமாட்டேன் !

வாழ்க்கை முடியும் வரை
போராடு என்பதே நான் கற்ற பாடம் !

இதுவே என் வாழ்வின் பலம் !
இதுவே என் ஆனந்தவேதம் !
 
 

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP