ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நன்றாக வாழ்வோம் !

ராதேக்ருஷ்ணா

யாரும் நம்மைக்
கெடுக்கமுடியாது !
நாம் ஜாக்கிரதையாக
இருக்கும் வரை !

யாரும் நம்மை
அவமானப்படுத்தமுடியாது !
நாம் அவமானத்தை
கொண்டாடாதவரை !

யாரும் நம்மை
ஒதுக்கிவைக்கமுடியாது !
நாம் கடவுளின் குழந்தை
என்னும் நினைவிருக்கும்வரை !

யாரும் நம்முடைய
சொத்தை கொள்ளையடிக்கமுடியாது !
நம்முடையதெல்லாம்
க்ருஷ்ணனுடையது
என்று நாம் வைத்திருக்கும்வரை !

எவருமே நம்மை
ஏமாற்றமுடியாது !
நம் வாழ்க்கையின் பொறுப்பை
நாம் க்ருஷ்ணனிடம்
ஒப்படைத்திருக்கும்வரை !

யாராலும் நம்மை
அழிக்கமுடியாது !
நாம் உடலல்ல ஆத்மா,
என்னும் சிந்தனையிருக்கும்வரை !

எதிலும் நாம்
தோற்கவேமுடியாது !
நம் வாயில் க்ருஷ்ண
நாம ஜபம் உள்ளவரை !

எந்த நிலையிலும்
நாம் வீழமாட்டோம் !
நாம் குருவிடம்
திடமான நம்பிக்கை
கொண்டிருக்கும்வரை !

நிச்சயம் நன்றாக வாழ்வோம் !
வாழ்வை க்ருஷ்ணப் பிரசாதமாக
நாம் வைத்திருக்கும்வரை !


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP