ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 மார்ச், 2011

அன்புள்ள த்வாரகாநாதனுக்கு!

ராதேக்ருஷ்ணா

அன்புள்ள த்வாரகாநாதனுக்கு !
கோபாலவல்லி எழுதுவது . . .

த்வாரகாநாதா . . .
எப்படி இருக்கிறாய் ! ? !

த்வாரகாதீசா . . .
உன் ஸ்மரணையே சுகம் !

மீரா ப்ரபோ கிரிதாரி . . .
உன் திருமேனி சுகம்தானே ! ? !

தேவகி நந்தனா . . .
உன் ராஜதானி சௌக்கியம்தானே ! ? !

வசுதேவ புத்திரா . . .
ஹோலி நன்றாக விளையாடினாயா ! ? !

பலராம சகோதரா . . .
மாடுகள் எல்லாம் நலம்தானே ! ? !

ப்ரேம ஸ்வரூபா . . .
ருக்மிணியை படுத்தாமலிருக்கிறாயா ! ? !

ரண சோட் நாதா . . .
பலராமன் சொல்படி கேட்கிறாயா ! ? !

நவநீதசோரா . . .
தேவகி மாதா நலம் தானே ! ? !

கோமதீ நதி தீர லோலா . . .
மீன்களோடு விளையாடுகிறாயா ! ? !

சுதாமா சகா . . .
அவல் சாப்பிட்டாயா ! ? !

நரசிம்ம மேத்தா சேவகா . . .
யாருக்கு என்ன கொடுத்தாய் ! ? !

பண்ஹாஜி ரஜபுத்ர நாதா . . .
பீதாம்பரம் ஜாக்கிரதை தானே ! ? !

ராமதாஸ ஸ்வாமி . . .
த்வாரகையில் தானே இருக்கிறாய் ! ? !

ருக்மிணீ காந்தா . . .
துர்வாசர் வம்பேதும் செய்யவில்லையே ! ? !

உத்தவ ராஜா . . .
யாருக்காவது கடிதம் எழுதினாயா ! ? !

வல்லபரின் செல்லமே . . .
சமத்தாகச் சாப்பிடுகிறாயா ! ? !

கருடக் கொடியோனே . . .
எத்தனை கொடிகளை கிழித்தாய் ! ? !

பார்த்தனுக்கு சாரதியே . . .
யாரை அக்னியிலிருந்து காப்பாற்றினாய் ! ? !

சந்தான கோபாலா . . .
சமீபத்தில் வைகுண்டம் போனாயா ! ? !

மோக்ஷ த்வாரிகா ராஜனே . . .
கிணற்றிலிருந்து யாரை மீட்டாய் ! ? !

சம்சார சாகர ரக்ஷகா . . .
உன் குழந்தைகள் சுகம்தானே ! ? !

புராண புருஷா . . .
பேரன் பேத்திகள் நலம் தானே ! ? !

அழகு மன்மதா . . .
ஆண்டாள் அங்கே வந்தாளோ ! ? !

பக்த ஹ்ருதய சஞ்சாரி . . .
நாரதரை திணறடித்தாயா ! ? !

அனாத நாதா . . .
சத்யபாமா படுத்தாமலிருக்கிறாளா ! ? !

தீன பந்தோ . . .
சாம்பன் சாபம் வாங்காமலிருக்கிறானா ! ? !

ரஹஸ்ய மானுஷ வேஷதாரி . . .
ப்ரபாச க்ஷேத்திரம் போகவில்லையே ! ? !

ஸ்ரீ க்ருஷ்ண ராமா. . .
ஆஞ்சனேயர் வந்தாரா ! ? !

சீக்கிரம் பதில் அனுப்பு . . .

ருக்மிணியின் காதல் கடிதத்தை
தினமும் வாசிப்பது போல்
இந்தக் கோபாலவல்லியின்
கடிதத்தையும் தினமும் வாசி ! ! !

என்னை அழைத்துப் போக
சீக்கிரமே வா ! ! !

வரவில்லையென்றால்,
உயிரை விடமாட்டேன் ! ! !
உன்னைப் பற்றி ஊரில்
அவதூறு சொல்வேன் ! ! !

என்ன சொல்வேன் தெரியுமா ?

த்வாரகை போனேன் . . .
பைத்தியமானேன் . . .
பக்தர்களிடம் சொல்வேன் !
நீங்கள் யாரும் போகவேண்டாமென்று !

இப்படிக்கு உன்னுடைய . . .
கோபாலவல்லி . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP