ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 மார்ச், 2011

இதுவல்லவோ அற்புதம் !

ராதேக்ருஷ்ணா

அதிசயம் !

என்னை உன்னி க்ருஷ்ணன்
குருவாயூருக்கு
அழைத்து வந்துவிட்டான் !
இதுவல்லவோ அற்புதம் !

எவ்வளவு ஆசையோடு
என்னை என் அப்பன்
தன்னுடைய குருவாயூருக்கு
கூப்பிட்டு வந்திருக்கின்றான் !
இதுவல்லவோ அற்புதம் !

எத்தனை நாள் ஆசை!
யாருக்கும் தெரியாத ஆசை !
அவனுக்கும் எனக்கும் மட்டுமே
தெரிந்த ஆசை !
அதை பூர்த்தி செய்துவிட்டான் !
இதுவல்லவோ அற்புதம் ! 

எனக்கு குருவாயூரப்பன்
அவனுடைய தரிசனத்தைத்
தந்துவிட்டான் !
இதுவல்லவோ அற்புதம் !

குட்டி க்ருஷ்ணன்
என்னைக் கூப்பிட்டு கூப்பிட்டு
தரிசனம் தந்தான் !
இதுவல்லவோ அற்புதம் !

வசுதேவர் தலையில்
வைத்துக்கொண்டு செல்லும்
அலங்காரத்தோடு
இந்தத் தோழனுக்குக் காட்சி தந்தான் !
இதுவல்லவோ அற்புதம் !

தான் சாப்பிடும் போது,என்னையும்
சாப்பிட வைத்து ஆனந்தமாக
தரிசனம் தந்தான் !
இதுவல்லவோ அற்புதம் !

ப்ரசேதசர்களுக்கு ருத்ரன்
வாசுதேவ மஹிமையைச்
சொன்ன நாராயண சரஸின்
கரையில் என்னை உட்கார வைத்தான் !
இதுவல்லவோ அற்புதம் !

இந்த ரஹஸ்ய பக்தனை
அவனுடைய ஊரில்
புதியதாக பாகவத ரஹஸ்யத்தை
சொல்லவைத்து விட்டான் !
இதுவல்லவோ அற்புதம் !

யானையின் மேல் ஊர்வலமாக
வந்து என்னை ஆனந்தத்தில்
திணறடித்து விட்டான் !
இதுவல்லவோ அதிசயம் !

இந்தக் கள்ளக் க்ருஷ்ணன்,
க்ருஷ்ணனே ஆராதனம் செய்த
கள்ளனல்லவா !
அதனால் கள்ளத்தனமாக
எனக்கு அனுக்ரஹம் செய்துவிட்டான் !
இதுவல்லவோ அற்புதம் !

எத்தனை விதமான ப்ரசாதங்களை
எனக்காக விசேஷமாக
இந்தக் குழந்தை தந்துவிட்டான் !
இதுவல்லவோ அற்புதம் !

குருவாயூருக்கு வருபவர்கள்,
எப்பொழுதும் அதிசயங்களையே
எதிர்பார்த்து வருகிறார்கள் !

என்னைப் பொறுத்தவரை
இங்கே வருவதே அற்புதம் !

உன்னிக்ருஷ்ணனைத் 
தரிசிப்பதே அற்புதம் !

அவன் ப்ரசாதத்தை
அனுபவிப்பதே அற்புதம் !

குருவாயூரில் ஒரு நாள்
தங்குவதே அற்புதம் !

வேறு என்ன அற்புதம் வேண்டும் ? ? ?

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP