ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 மார்ச், 2011

அனுபவிக்க வா !

ராதேக்ருஷ்ணா
த்வாரகா செல்கிறேன் !
என் பத்மநாபனின்
பிறந்த ஊரிற்கு செல்கிறேன் !

ஸ்ரீ கிருஷ்ணனின் லீலா
பூமிக்கு செல்கிறேன் !
ருக்மிணி பிராட்டியின் கல்யாணம்
நடந்த ஊரிற்கு செல்கிறேன் !
16108 பட்ட மஹிஷிகளின்
ஆனந்த பூமிக்கு செல்கிறேன் !
குசேலரும் அவல் கொடுத்த
சுக பூமிக்கு செல்கிறேன் !
16108 கிருஷ்ணனை நாரதர்
தரிசித்த பூமிக்கு செல்கிறேன் !
கிருஷ்ணன் அப்பாவாக
லீலை செய்த பூமிக்கு செல்கிறேன் !
கிருஷ்ண தாத்தாவின்
அந்தப்புர பூமிக்கு செல்கிறேன் !
உத்தவரும் ஆனந்தமாய்
தன்னை மறந்த பூமிக்கு செல்கிறேன் !
வசுதேவர், தேவகியின் கிருஷ்ண
தரிசன பூமிக்கு செல்கிறேன் !
சந்தான கோபால லீலா
நடந்த பூமிக்கு செல்கிறேன் !
அர்ஜுனனும், பிராமணனும்
வைகுந்தம் சென்ற பூமிக்கு செல்கிறேன் !
ஓணானுக்கும் கண்ணன்
கிடைத்த பூமிக்கு செல்கிறேன் !
கிருஷ்ணன் தான் சத்தியவான்
என்று நிரூபித்த பூமிக்கு செல்கிறேன் !

மீரா மாதாவை தன்னுள்
வைத்துக்கொண்ட பூமிக்கு செல்கிறேன் !

த்வாரகா !
எங்கள் ஆழ்வார்களின் பிரபந்தத்தில்
திளைக்கும் த்வாரகாவிர்க்கு செல்கிறேன் !
நீயும் வா !
என்னோடு வா !
கண்ணனை அனுபவிக்க வா !
உன்னை அர்ப்பணிக்க வா !
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP