ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 மார்ச், 2011

உன் பொறுப்பு !

ராதேக்ருஷ்ணா

கண்ணா!
எனக்கு எது நல்லதென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
எனக்கு எது சுகமென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
எனக்கு எது தேவையென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
எனக்கு எது தேவையற்றது என்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
எனக்கு எது கெடுதல் என்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
என் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எங்கு இருக்கவேண்டுமென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எப்படி இருந்தால் சரியென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் யாரோடு பழகினால் இதமென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எதைப் பேசினால் சரியென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எதை, எப்படிச் செய்தால் நல்லதென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எதைச் சாப்பிட்டால் உத்தமமென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எந்த ஆடையை உடுத்தினால்
அழகென்று உனக்கு நன்றாகத் தெரியும் !

கண்ணா !
நான் எப்படி காரியங்களைச் செய்தால்
அற்புதமாக இருக்குமென்று
உனக்கு நன்றாகத் தெரியும் !

உனக்கு நன்றாகத் தெரியும் ;
அதனால் உன்னையே சரணடைந்தேன் !

கண்ணா ! 
 எனக்கு ஒன்றும் ஒழுங்காகத் தெரியாது !

கண்ணா ! 
அடியேன் உன்னையே நம்புகிறேன் !

கண்ணா !
நீ தான் என் வாழ்வை நடத்தவேண்டும் !

தயவு செய்து என் வாழ்வை
என் பொறுப்பில் விட்டுவிடாதே !

என் வாழ்க்கையை
உன் பொறுப்பிலேயே வைத்துக்கொள் !

பல கோடி ஜன்மங்களாக
என் வாழ்க்கை என் பொறுப்பிலிருந்து
சீரழிந்தது மட்டும் தான் மிச்சம் !

இந்த வாழ்க்கையாவது உருப்படட்டும் !

அதனால் கண்ணா !
என் வாழ்க்கை உன் பொறுப்பு !

myLot User Profile

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP