ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 ஜனவரி, 2011

உன்னால் முடியுமா ? ! ?

ராதேக்ருஷ்ணா

உன்னால் முடியுமா ? . . .

இந்தக் கேள்வியே அபத்தமானது . . .

உன்னால் முடியும் . . .
உன்னாலும் முடியும் . . .
உன்னால் சத்தியமாக முடியும் . . .
உன்னால் எப்பொழுதும் முடியும் . . .
உன்னால் எல்லா இடங்களிலும் முடியும் . . .
உன்னால் எல்லா சந்தர்ப்பங்களிலும் முடியும் . . .

நம்பு . . .நம்பு . . .நம்பு . . .

நம்பிக்கையினால் வீணானவர்கள் எவருமில்லை . . .

ஆனால் அதற்கு முதலில்
உன்னைப் பற்றி நீ
நன்றாக அறிந்துகொள்வது மிக மிக அவசியம் . . .

கொஞ்சம் உன்னை ஆராய்வோம் . . .வா . . . 

நீ ஏன் எப்பொழுதும்
உன்னைப் பற்றி அதிகமாக
கற்பனை செய்துகொள்கிறாய் ?

உன்னைப் பற்றி நீ ஏன்
பல சந்தர்ப்பங்களில்
தாழ்வாக நினைத்துக்கொள்கிறாய் ?

உன்னிடம் நீ ஏன்
எப்பொழுதும் அதிகமாகவே
எதிர்பார்க்கிறாய் ?

உன்னைப் பற்றி
மற்றவர்கள் கொண்டாடினால்
ஏன் உன்னையே மறக்கிறாய் ?

மற்றவர் உன்னைக் கேவலப்படுத்தினால்
உன்னையே நீ ஏன் வெறுத்து
ஒதுக்கி, நொந்துபோகிறாய் ?

இவையெல்லாம் சரி செய்துகொள் !

நான் சொல்லாத,உனக்குள்ளிருக்கும்
தேவையில்லாத எண்ணங்களை தூர எறி ! 
 
போதும் . . .
இனியும் என்னால் முடியாது என்று நினைக்காதே !

மற்றவர்களால் எந்த உயர்ந்த
இடத்தை அடைய முடிந்ததோ,
அதை அடைய உனக்குள் சக்தி இருக்கிறது ! 

சாக்கடையில் வாழ்ந்துகொண்டு,
அசிங்கத்தைத் தின்னும் பன்றி கூட
தன்னைப் பற்றி தாழ்வாக நினைப்பதில்லை !

 உன்னால் முடியும்  . . .

இதுவே உனக்கு நீ சொல்லும் மந்திரம் . . .

இதையே ஜபித்துக்கொண்டு வா . . .

க்ருஷ்ணனின் ஆசி உனக்குப்
பூரணமாக இருக்கிறது . . .

முயன்று காட்டு . . .
வென்று காட்டு . . . 
வாழ்ந்து காட்டு . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP