ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 ஜனவரி, 2011

திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

ராதேக்ருஷ்ணா



திருமழிசை ஆழ்வார்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

சுதர்சன சக்கரத்தின் அம்சமாக வந்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !
  
தை மகத்தில் பிண்டாரூபமாய் அவதரித்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !
 
பார்கவ முனி குமாரரின்
 திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

கனகாங்கியின் செல்லக் குமாரனின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

திருமழிசையின் தலைவன்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

ஜகந்நாதனின் கருணைக் குழந்தையின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

திருவாளனின் தத்துப் பிள்ளையின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

கணிகண்ணனின் சதாசார்யரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

பேயாழ்வாரின் சத்சிஷ்யரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

திருவல்லிக்கேணியில் யோகத்திலிருந்த யோகியின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

சிவபெருமானால் பக்திசாரரான பக்தரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

முதலாழ்வார்களுக்கு எதிரொலி தந்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் ! 

கிழவிக்கும் யௌவனம் தந்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

பெருமாளை சொன்ன வண்ணம் செய்வித்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

பிராமணர்களுக்கு வேதத்தை புரியவைத்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் ! 

இதயத்தில் திருப்பாற்கடலை காட்டியவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

  குடந்தையுள் கிடந்தவனை எழவைத்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

திருச்சந்தவிருத்தம் தந்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

நான்முகன் திருவந்தாதி பாடினவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

  திருக்குடந்தையில் பரமபதித்தவரின்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

திருமழிசை ஆழ்வார்
திருவடிகளே சரணம் ! சரணம் ! சரணம் !

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP