ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 ஜனவரி, 2011

நான் ஒரு கருவி . . .

ராதேக்ருஷ்ணா

நான் ஒரு கருவி . . .

நிச்சயம் நான் ஒரு கருவி மட்டுமே . . .

இதில் துளியும் சந்தேகம் இல்லை . . .

இந்த உடம்பிலிருந்து நடக்கும்
அத்தனை விதமான நல்லவைகளுக்கும்
ஒரே காரணம் க்ருஷ்ணன் மட்டுமே. . .

இந்த மனதில் உண்டாகும்
சகல விதமான அற்புதமான எண்ணங்களுக்கும்
ஒரே காரணம் க்ருஷ்ணன் மட்டுமே . . .

இந்த வாயிலிருந்து வரும்
உத்தமமான அன்பு வார்த்தைகள் அனைத்திற்க்கும்
ஒரே காரணம் க்ருஷ்ணன் மட்டுமே . . .

இந்த கைகள் செய்யும் அற்புதமான
காரியங்களுக்கும்,உதவிகளுக்கும்
ஒரே காரணம் க்ருஷ்ணன் மட்டுமே . . .

இந்த மூளையின் அற்புதமான
நல்ல சிந்தனைகள் அனைத்திற்கும்
ஒரே காரணம் க்ருஷ்ணன் மட்டுமே . . .

சத்தியம் . . .
எல்லா நல்லவைக்கும் கண்ணனே காரணம் . . .
 நான் ஒரு கருவி மட்டுமே . . .

அதனால் மனமே .  .  ,
நீ என்னை ஏமாற்றப்பார்க்காதே . . .

என்னால் நடைபெறும் 
எல்லா கெட்டவைகளுக்கு மட்டுமே
நான் பொறுப்பாளி . . .

அதனால் ஹே மனமே !
 என்னை ஏமாற்றி
அகம்பாவக்குழியில் இட்டு
புதைத்துவிடாதே . . .

நான் ஒரு கருவி மட்டுமே . . .
இதை கண்ணன் எனக்குப் புரியவைத்துவிட்டான் . . .
நிச்சயம் நான் உன்னிடம் ஏமாறவேமாட்டேன் . . .

கண்ணன் நிச்சயமாக என்னை
உன்னிடம் ஏமாறவிடமாட்டான் . . .

நான் ஒரு கருவி . . .
நான் ஒரு கருவி மட்டுமே . . .

நான் ஒரு கருவி தான் . . .
இந்தக் கருவி ஒழுங்காகயில்லை என்றால்
கண்ணன் வேறு ஒரு கருவியைக் கொண்டு
நல்லவைகளை செய்துமுடிப்பான் . . .

நான் கண்ணன் கையில்
நல்ல கருவியாக இருக்கும் வரை
எனக்கு நல்லதே . . .

கண்ணா . . .
என்றும் உனக்கு ஏற்ற
நல்ல கருவியாக என்னை வைத்துக்கொள் . . .

இந்தக் கருவி சரியில்லையென்றால்
சரி செய்து வைத்துக்கொள் . . .

மனமே . . .
மீண்டும் சொல்கிறேன் . . .
நான் ஒரு கருவி . . .
கர்த்தா கண்ணனே . . .
நான் அல்லவே அல்ல . . .

நான் ஒரு கருவி மட்டுமே . . .

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP