ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 ஜனவரி, 2011

கவலையை மறக்க !



ராதேக்ருஷ்ணா


சிலர் கவலையை மறக்க
குடிப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
புகை பிடிப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
தொலைக்காட்சி பார்ப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
திரைப்படம் பார்ப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
செய்தித்தாள் வாசிப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
கதைபுத்தகம் படிப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
விளையாடுவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
வெளியிடங்களுக்குச் செல்வர் . . .

சிலர் கவலையை மறக்க
காலார சிறிது நேரம் நடப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
நன்றாக தூங்குவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
தூக்க மாத்திரை சாப்பிடுவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
 பெண்களிடம் செல்வார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
குழந்தைகளை கொஞ்சுவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
செடி,கொடிகளை வளர்ப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
ஜோஸ்யரிடம் வழி கேட்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
விளையாட்டை ரசிப்பார்கள் . . . 

சிலர் கவலையை மறக்க
செல்லப் பிராணிகளை வளர்ப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
பொது சேவை செய்வார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
எதையாவது எழுதுவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
வேலைக்குச் செல்வார்கள் . . .


 இதில் எதையெல்லாம் நீ
செய்கிறாய் என்று குறித்துக்கொள் . . .

அதில் எவையெல்லாம்
பைத்தியக்காரத்தனம் என்பதை தேர்வு செய் . . .

அவைகளை ஒவ்வொன்றாக
விட்டு விடு . . .

கடைசியில் எதுவுமே உன்னிடத்தில்
மிஞ்சாது . . .

இப்பொழுது இன்னும் சிலர்
செய்யும் விஷயங்களைச் சொல்கிறேன் . . .

சிலர் கவலையை மறக்க
கோயிலுக்குச் செல்வார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
பூஜை செய்வார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
பாராயணம் செய்வார்கள் . . . 

சிலர் கவலையை மறக்க
தியானத்தில் ஈடுபடுவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
  ப்ரார்த்தனை செய்வார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
பகவானின் நாமத்தை ஜபிப்பார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
சத்சங்கத்திற்கு செல்வார்கள் . . . 

சிலர் கவலையை பகவானுக்கு
அர்ப்பணம் செய்து விடுவார்கள் . . .

சிலர் கவலையை மறக்க
சத்குரு சொல்படி நடப்பார்கள் . . .

இதில் ஒன்றையோ அல்லது
பலவற்றையோ செய்து கொண்டே வா . . .

கவலையென்றால் என்னவென்று
உன் மனம் உன்னைக் கேட்க்கும் . . .

பிறகு நீ உன் மனதிற்கு பதில் சொல் . . .


 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP