ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 ஜனவரி, 2011

பொங்கலோ . . . பொங்கல் . . .

ராதேக்ருஷ்ணா

பொங்கல் . . .

இந்தப் பொங்கலில்
பக்தியை அரிசியாக இடுவோம் . . .


இந்தப் பொங்கலில்
ஞானத்தை பானையாக்குவொம் . . .


இந்தப் பொங்கலில்
வைராக்யத்தை தீயாகக் கொள்வோம் . . .


இந்தப் பொங்கலில்
நாமஜபத்தை பாலாக ஊற்றுவோம் . . .


இந்தப் பொங்கலில்
சத்சங்கத்தை மஞ்சள்கொத்தாகக் கட்டுவோம் . . .


இந்தப் பொங்கலில்
பரமானந்தம் பொங்கட்டும் . . .


பொங்கலோ . . .பொங்கல் . . .
பொங்கலோ . . .பொங்கல் . . .
பொங்கலோ . . .பொங்கல் . . .

இந்தப் பொங்கலில்
க்ருஷ்ணனோடு கரும்பு தின்போம் . . .

இந்தப் பொங்கலில்
ராதிகாவோடு பொங்கல் வைப்போம் . . .

இந்தப் பொங்கலில்
கோபர்களோடு மாடுகளைக் குளிப்பாட்டுவோம் . . .

இந்தப் பொங்கலில்
கோபிகைகளோடு கோலம் போடுவோம் . . .

இந்தப் பொங்கலில்
யசோதையோடு கூட்டாஞ்சோறு சமைப்போம் . . .

இந்தப் பொங்கலில்
நந்தகோபரோடு சோறு உண்போம் . . .

இந்தப் பொங்கலில்
ப்ருந்தாவனத்தில் வண்டியில் சுற்றுவோம் . . .
 
இந்தப் பொங்கலில்
பக்தர்களோடு கூடியிருந்து குளிர்வோம் . . .


இந்தப் பொங்கலில்
சத்குருவோடு யமுனையில் குளிப்போம் . . .

இந்தப் பொங்கலில்
பக்தர்களின் பாத தூளியில் புரளுவோம் . . .


இந்தப் பொங்கலில்
எல்லோரும் பக்தராக மாறுவோம் . . .

பொங்கலோ . . .பொங்கல் . . .
பொங்கலோ . . . பொங்கல் . . .
பொங்கலோ . . .பொங்கல் . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP