ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 ஜனவரி, 2011

யாரால் முடியும் ?

ராதேக்ருஷ்ணா

விவேகம் இருந்தால் அறிவு வளரும் . . .

விவேகம் இருந்தால் பக்தி வரும் . . .

விவேகம் இருந்தால் தைரியம் வரும் . . .

விவேகம் இருந்தால் பலம் அதிகமாகும் . . .

விவேகம் இருந்தால் பண்பு வரும் . . .

விவேகம் இருந்தால் உலகம் உன்னிடம் மயங்கும் . . .

விவேகம் இருந்தால் உலகம் உனக்கு அடிமையாகும் . . .

விவேகம் இருந்தால் நீ வானையும் வளைக்கலாம் . . .

விவேகம் இருந்தால் உன்னை ஜெயிக்கலாம் . . .

விவேகம் இருந்தால் விரோதியும் அடிபணிவான் . . .

விவேகம் இருந்தால் உயிர்கள் உன்னை வணங்கும் . . .

விவேகம் இருந்தால் தெய்வம் நீ சொல்லக் கேட்க்கும் . . .

விவேகம் இருந்தால் உன் வார்த்தை வேதமாகும் . . .

விவேகம் இருந்தால் உலகை நீ மாற்றலாம் . . .

விவேகம் இருந்தால் உன்னைத் தேடிப் புகழ் வரும் . . .

விவேகம் இருந்தால் நீ தெய்வமாகலாம் . . .

விவேகம் இருந்தால் நீ ஆனந்தமாவாய் . . .

உனக்கு விவேகமில்லை என்பது
உனக்கே நன்றாகத் தெரியும் . . .

பிறகு இவையெல்லாம் எப்படி நடக்கும் ?

கவலையே வேண்டாம் . . .
ஒரே வழி . . .

 விவேகானந்தனைப்பிடி . . .

ஸ்வாமி விவேகானந்தரின் வழியைக் கடை பிடி . . .
 
ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையைப் படி . . .

விவேகமில்லாதவரைக்
காப்பாற்ற
விவேகானந்தரைத் தவிர
யாரால் முடியும் இந்த புவிதனில் ? ? ?

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP