ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 8 ஜனவரி, 2011

பொறாமை ? ! ?

ராதேக்ருஷ்ணா

பொறாமை  . . .

இந்த பொறாமைக்குச் சமமான
பயங்கரமான ராக்ஷசன்
உலகில் எவருமில்லை . . .

இந்த பொறாமை ஒன்றே
மனிதனின் நிம்மதியைக்
குலைக்கப் போதுமானது . . .

இந்தப் பொறாமையினால் தானே
துரியோதனன் குருக்ஷேத்திர
யுத்தத்திற்கு தயாரானான் . . .

இந்தப் பொறாமையினால் தானே
யாதவப்ரகாசர் ஸ்வாமி இராமானுஜரைக்
கொல்ல முயற்சித்தார் . . .

இந்தப் பொறாமை எத்தனை பேரை
தின்று தீர்த்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை சகோதரர்களை
பிரித்துவைத்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை குடும்பங்களை
நடுத்தெருவில் நிற்க வைத்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை முறை
நம்முடைய மனதை நோகடித்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை முறை
மற்றவரை அவமானப்படுத்த
நம்மைத் தூண்டியிருக்கிறது . . .

இந்தப் பொறாமை எவ்வளவு தடவை
நம்மை அடுத்தவரின் கஷ்டத்தைப் பார்த்து
சந்தோஷமாக சிரிக்கவைத்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை பலமாக
பலமுறை நம்முடைய ஞானத்தை
அழித்துப்போட்டிருக்கிறது . . .

ஹே பொறாமையே !
என்னை விட்டு ஓடி விடு . . .

ஹே பொறாமையே !
தயவு செய்து என்னை வாழ விடு . . .

ஹே பொறாமையே !
என் நிம்மதியைத் திருடாதே . . .

ஹே பொறாமையே !
என் மனதைக் கெடுக்காதே . . .

ஹே பொறாமையே !
என்னை ராக்ஷசனாக்காதே . . .

ஹே பொறாமையே !
எனது நல்ல சிந்தனைகளைக் கொல்லாதே . . .

ஹே பொறாமையே !
என்னைக் கெடுக்காதே . . .

ஹே பொறாமையே !
என்னை அழித்துவிடாதே . . .

ஹே க்ருஷ்ணா . . .
இந்தப் பொறாமையிடமிருந்து
என்னைக் காப்பாற்றிக்கொள்ள
என்னால் முடியவில்லை . . .

ஹே க்ருஷ்ணா . . .
இந்தப் பொறாமையின்
தீயிலிருந்து என்னை மீட்டு
உன் அருகில் வைத்துக்கொள் . . .

ஹே க்ருஷ்ணா . . .
எனக்கு நன்றாகத் தெரியும் . . .
உனக்கு இந்தப் பொறாமை
துளிகூடப் பிடிக்காது . . .

எனக்கும் இந்தப் பொறாமை
துளிகூடப் பிடிக்கவில்லை . . .

ஆனால் இந்தப் பொறாமைக்கு
என்னை ரொம்பப் பிடித்திருக்கிறது . . .

அதனால் என்னை பூரணமாக
அனுபவித்துக்கொண்டிருக்கிறது . . .

தயவு செய்து நீ என்னை அநுபவி . . .

ஐயோ . . .
இந்தப் பொறாமையை கொன்றுவிடு . . .

என் க்ருஷ்ணா. . .
என்னைக் காப்பாற்று . . .
என்னைக் கரையேற்று . . .

பலகோடி ஜன்மாக்கள்
பொறாமையினால் வீணாகிவிட்டது . . .

இனியும் எனக்கு ஒரு பொறாமை
வேண்டவே வேண்டாம் . . .

பொறாமை இல்லாத மனம்
எனக்கு அருள் செய் இறைவா . . .

 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP