ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 ஜனவரி, 2011

க்ருஷ்ணன் ஒரு நாளும் . . .

ராதேக்ருஷ்ணா

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
கைவிடமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
ஒதுக்கமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
ஏமாற்றமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
தோற்கவிடமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
நஷ்டப்படவிடமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
வீண் போகவிட மாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
துரோகம் செய்யவிடமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
நீங்கமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
வெறுக்கமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
பயமுறுத்தமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
அவமானப்படுத்தமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
நொந்துபோக விடமாட்டான் . . .

என்னை க்ருஷ்ணன் ஒரு நாளும்
நாஸ்தீகனாக விடமாட்டான் . . .

இத்தனையையும் அடியேன்
என் பக்தியையும், நாமஜபத்தையும் கொண்டு
சொல்லவில்லை . . .

அவனுடைய அற்புதமான கருணையை
நம்பியே சொல்கிறேன் . . .

அவன் கருணையையும்,
அவனையும் நம்பினார் கெடுவதில்லை . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP