ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 டிசம்பர், 2011

கரையேற்றுவீராக . . .

ராதேக்ருஷ்ணா
 
தவறி விழுந்தால் . . .
வாழ்க்கையில்
நல்ல பாதையிலிருந்து
தவறி விழுந்துவிட்டால் . . .
 
மீண்டும் அந்தப் பாதையை
அடைய முடியுமா ?
 
அதற்குத் தானே பக்தி . . .
 
பக்தி செய்பவர் வாழ்வில்
தவறு செய்து விட்டால் . . .
அவர்கள் மீண்டும்
வாழ்வில் ஜெயிக்க முடியுமா ?
அதற்குத் தானே பகவான் . . .
 
பெண்ணாசையில் வீணாய்
போய்விட்டால் ?

அவர்களால் மீண்டும்
உலகில் தலை நிமிரமுடியுமா ?

சத்தியமாய் முடியும் . . .

யாரேனும் அப்படி உண்டா . . .

ஆமாம் . . .

நம்முடைய
தொண்டரடிப்பொடி ஆழ்வார் உண்டு . . .

வாழ்வில் பெண்ணாசையினால்
வீணாகித் தவறி விழுந்து
ரங்கனின் கருணையினால்
அவனை அடைந்த
நம் தொண்டரடிப்பொடி உண்டு . . .

மார்கழி கேட்டையான இன்று
அவதரித்த தொண்டரடிப்பொடியே,
என்னையும் வாழ்வில்
தலை நிமிர வைப்பீராக . . .

திருமாலை அடைய திருமாலை
சொன்னவரே . . .
எனக்காக ரங்கனிடம் சிபாரிசு செய்வீரா ? ! ?

திருப்பள்ளியெழுச்சியால் ரங்கனை
பள்ளியுணர்த்தினவரே . . .
எனக்காக ரங்கனிடம் கொஞ்சம் பேசுவீரோ ? ! ?

இந்த வாழ்வில் விழுந்தவனை
தயவு செய்து காப்பாற்றும் . . .
ஊரிலேன் காணியில்லை . . .
உறவும் யாருமில்லை . . .
கண்ணனின் திருவடியும் அருகிலில்லை . . .
பக்தியோ துளியுமில்லை . . .
வைராக்யம் இல்லவேயில்லை . . .

அதனால் விப்ரநாராயணா . . .
தொண்டர் அடிப் பொடியே . . .

உனக்குப் புரியும் என் நிலைமை . . .

கரையேற்றுவீராக . . .
சம்சார சாகரத்திலிருந்து
கரையேற்றுவீராக . . .



Read more...

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

காதலைக் கொண்டாடு . . .


ராதேக்ருஷ்ணா

மார்கழி. . .

கோபிகைகள்
காத்யாயனி விரதம் இருந்தார்கள் !
ஆண்டாள்
திருப்பாவை விரதம் இருந்தாள் !

மார்கழி க்ருஷ்ணனின் ரூபம் . . .

கோபிகைகள்
யமுனையில் நீராடினர் !
ஆண்டாள்
திருமுக்குளத்தில் நீராடினாள் !

மார்கழி காதல் மாதம் . . .

கோபிகைகள்
ப்ருந்தாவனத்தில் விரதம் இருந்தனர் !
ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் விரதம் இருந்தாள் !

மார்கழி கருணையின் மாதம் . . .

கோபிகைகள்
க்ருஷ்ண லீலைகளைப் பாடினர் !
ஆண்டாள்
திருப்பாவை பாடினாள் !

மார்கழி நலம் தரும் மாதம் . . .

கோபிகைகள்
அடைந்தது ராசலீலா !
ஆண்டாள்
அனுபவித்தது ரங்கலீலா !

மார்கழி பெருமையுடைய மாதம் . . .

வீணாக்கிவிடாதே . . .
திருப்பாவை பாடு . . .
கண்ணனைத் தேடு . . .
காதலைக் கொண்டாடு . . .

க்ருஷ்ணனின் காதலைக் கொண்டாடு ! ! !

Read more...

திங்கள், 5 டிசம்பர், 2011

ஏறுவாயா ? ! ? பார்ப்பாயா . . .


ராதேக்ருஷ்ணா

தென்னை மரத்தில் ஏறுவியா . . .
தேங்காயைப் பறிப்பாயா ?


மாமரத்தில் ஏறுவியா . . .
மாங்காயைப் பறிப்பாயா ?


கொய்யாமரத்தில் ஏறுவியா . . .
கொய்யாக்காய் பறிப்பாயா ?


ஆத்துல விழறியா . . .
சேத்துல விழறியா . . .
குளத்துல விழறியா . . .

இது உனக்கும் தெரியும் !
எனக்கும் தெரியும் !

சிறிய வயதில்
நம் தாய்/தந்தை காலில்
ஏறிக்கொண்டு
அவர்கள் பாட
நாம் அனுபவித்தது . . .



கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன் !
இந்த வார்த்தைகளில்
என்ன பிரயோஜனம் ? ? ?

என் பிள்ளைக்கு
இதைச் சொல்லிக்கொடுக்க
நான் தயாராகயில்லை . . .


க்ருஷ்ணனிடம் கேட்டேன் !
அவன் புதியதாக ஒன்றைச்
சொல்லிக்கொடுத்தான் . . .

அதை நான் உனக்கும்
சொல்கிறேன் . . .
நீயும் அனுபவி ! ! !


திருப்பதி ஏறுவாயா ? ! ?
ஸ்ரீநிவாசனைப் பார்ப்பாயா . . .

பத்ரிகாஸ்ரமம் ஏறுவாயா ? ! ?
நாராயாணனைப் பார்ப்பாயா . . .

அத்திகிரி ஏறுவாயா ? ! ?
வரதராஜனைப் பார்ப்பாயா . . .

கோவர்தனகிரி ஏறுவாயா ? ! ?
கோவிந்தனைப் பார்ப்பாயா . . .

பத்ராசலம் ஏறுவாயா ? ! ?
ராமனைப் பார்ப்பாயா . . .

பர்சானா ஏறுவாயா ? ! ?
ராதிகாவைப் பார்ப்பாயா . . .

கோகுலம் போறாயா . . .
 ப்ருந்தாவனம் போறாயா . . .
வைகுந்தம் போறாயா . . .

எத்தனை சுகமல்லவா இது . . .

பாடு . . .பாடு . . .பாடு

எதிர்கால சந்ததிக்கு
இதையே பாடுவோம் . . .


Read more...

புதன், 30 நவம்பர், 2011

என்னை மறப்பாயா ? ? ?

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா . . .
தூங்கும் போது
நான் உன்னை நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?

க்ருஷ்ணா . . .
மகிழ்ச்சியில் நான்
திளைத்திருக்கும்போது உன்னை
நினைப்பதேயில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?  

க்ருஷ்ணா . . .
காமத்தில் மயங்கிக்கிடக்கையில்
நான் உன்னை நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ? 

க்ருஷ்ணா . . .
கோபத்தில் புத்தியிழக்கும் போது
நான் உன்னை நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ? 

க்ருஷ்ணா . . .
உலகம் என்னைப் புகழும்போது
நான் உன்னை நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ? 

க்ருஷ்ணா . . .
நான் அஹம்பாவத்தில் இருக்கும்போது
உன்னை துளி கூட நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ? 

க்ருஷ்ணா . . .
நான் ஆசையில் உழலும்போதும்
உன்னை மறந்தும் நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ? 

க்ருஷ்ணா . . .
என் பிரச்சனைகள் தீர்ந்தபின்
உன்னை நான் நினைப்பதேயில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?

எனக்குத் தெரியாது க்ருஷ்ணா . . .

நான் உன்னை ஒழுங்காக
நினைக்கிறேனா இல்லையா
என்று எனக்குப் புரியவில்லை . . .

ஆனால் நீ சொல் . . .
என்னை மறப்பாயா ? ? ?

இல்லை . . . இல்லை . . .
நீ என்னை மறப்பதேயில்லை . . .

நானே உன்னை மறந்தாலும்
நீ என்னை மறக்கவேமாட்டாய் . . .

அதனால் தானே நான்
இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறேன் . . .


Read more...

செவ்வாய், 29 நவம்பர், 2011

மதிப்பதிகம் . . .

ராதேக்ருஷ்ணா


ரோஜாச்செடியில்
மலர்கள் கொஞ்சம் தான் . . .
முட்கள்தான் அதிகம் ! ! !

அதனால் தான் ரோஜாப்பூவிற்கு
மதிப்பதிகம் . . .


பாலைவனத்தில்
தண்ணீர் கொஞ்சம் தான் . . .
மணல் தான் அதிகம் ! ! !

அதனால் தான் அங்கே தண்ணீருக்கு
மதிப்பதிகம் . . .


நல்லவர்கள்
இந்த உலகில் கொஞ்சம் தான் . . .
கெட்டவர்களே அதிகம் ! ! !

அதனால் தான் இங்கே
நல்லவர்களுக்கு மதிப்பதிகம் . . .


வாழ்க்கையில்
வெற்றிகள் குறைவு தான் . . .
போராட்டங்கள் அதிகம்தான் . . .

அதனால் தான் வாழ்வில்
வெற்றிக்கு மதிப்பதிகம் ! ! !


நீ வெற்றி பெறுவாய் . . .
நீ நிம்மதி அடைவாய் . . .
நீ கோடியில் ஒரு அற்புத ஜீவன் . . .

அதனால் க்ருஷ்ணனுக்கு
உன் மேல் என்றுமே
மதிப்பதிகம் . . .


Read more...

ஞாயிறு, 27 நவம்பர், 2011

ஏமாறுவாயா ? ? ?.

ராதேக்ருஷ்ணா

ஏமாறாதே . . .

ஏமாற்றுக்காரர்களிடம்
விட்டுக்கொடுக்காதே . . .

ஏமாற்றுக்காரர்களிடம்
பயப்படாதே . . .

ஏமாற்றுக்காரர்களிடம்
பணிந்துபோகாதே . . .



ஏமாற்றுக்காரர்களிடம்
தோற்றுப்போகாதே . . .




ஏமாற்றுக்காரர்களை
அடையாளம் கண்டு கொள் . . .




ஏமாற்றுக்காரர்களுக்கு
உதவாதே . . .




ஏமாற்றுக்காரர்களை
நம்பாதே . . .




ஏமாற்றுக்காரர்களை
வென்று காட்டு . . .




நீ ஏமாறாதே . . .
ஒரு நாளும் ஏமாறாதே . . .
ஒருவரிடமும் ஏமாறாதே . . .




நீ ஏமாறக்கூடாது . . .


இனி நீ ஏமாறாமாட்டாய் . . .


யோசி . . .
தெளிவாக யோசி . . .


உன் வாழ்வைத்
தெளிவாக யோசி . . .


எல்லாவற்றையும்
ஜெயிக்க யோசி . . .



Read more...

செவ்வாய், 22 நவம்பர், 2011

எழுதியே தீருவேன் . . .

ராதேக்ருஷ்ணா
இத்தனை நாள்
ஏன் ஆனந்தவேதம்
எழுதவில்லை . . .

பெருமைக்காக
எழுதவில்லை . . .
அதனால் இதுவரை
எழுதவில்லை . . .



எழுதித்தான் ஆகவேண்டுமென்ற
கட்டாயமில்லை . . .
அதனால் இதுவரை
எழுதவில்லை . . .



என் எழுத்தினால் யாரையும்
வசப்படுத்தவேண்டிய அவசியமில்லை . . .
அதனால் இதுவரை
எழுதவில்லை . . .



சில நாள் தினமும்
எழுதினேன் . . .
என் கண்ணன் சொன்னான் . . .
எழுதினேன் . . .



பல நாள் எழுதவில்லை . . .
என் கண்ணன் எனக்காக மட்டுமே
சொன்னான் . . .
அதனால் எழுதவில்லை . . .



இன்று எழுதச் சொல்கிறான் . . .
எழுதுகிறேன் . . .



பக்தி என்பதும்,பகவான் என்பதும்
உலகில் நம்மை நிரூபிக்க இல்லை . . .



என் பக்தி எனக்காக . . .
என் கண்ணன் எனக்காக . . .



உலகில் நான் பக்தன்
என்று என்னை நிரூபிக்க
எனக்கு அவசியமில்லை . . .



ஏன் ! உனக்கும் கூடத்தான் . . .

நான் என் கண்ணனை
அனுபவிக்கவேண்டும் . . .

நீ உன் கண்ணனை
அனுபவிக்கவேண்டும் . . .



நாம் உலகிற்க்காக
இதைச் செய்தால்
பக்தி வியபசாரம் ஆகிவிடும் . . .



யாரையும் திருப்திபடுத்த
நாம் பக்தி செய்யவேண்டாம் . . .



நாம் நம்மை புரிந்துகொள்ளவும்,
கண்ணனை அனுபவிக்கவுமே
பக்தி . . .



பக்தி நிர்பந்தமல்ல . . .
பக்தி வெளிவேஷமல்ல . . .
பக்தி கட்டாயமல்ல . . .



மீரா தனக்குத் தோன்றும்போதே
பாடல்கள் பாடினாள் . . .



தியாகராஜர் தான் ராமனை
அனுபவிக்கும்போதே
பாடல்கள் எழுதினார் . . .



அதுபோல் என் மனதில்
கண்ணன் தூண்டும்போதே
நானும் ஆனந்தவேதம்
எழுதுகிறேன் . . .


நீ என்ன பெரிய மீராவா ?
நீ என்ன உயர்ந்த தியாகராஜரா ?
என்று நீ நினைக்கலாம் . . .


அதுபற்றி எனக்குத் தெரியாது . . .
தெரிந்து நான் என்ன செய்யப் போகிறேன் ?


எனக்குத் தெரிந்தது ஒன்றுதான் . . .


நான் க்ருஷ்ணனின் குழந்தை . . .
இந்த நினைவு எனக்குப் போதும் . . .



இது அஹம்பாவமல்ல . . .
சத்தியம் . . .

கண்ணன் எழுதச் சொல்லும் வரை
எழுதியே தீருவேன் . . .


Read more...

புதன், 2 நவம்பர், 2011

வேட்டையாடத் தயார் . . .

ராதேக்ருஷ்ணா
வேட்டைக்கு தயார் . . .

என் பத்மநாபன்
வேட்டைக்குத் தயாராகிவிட்டான் !

கெட்டவர்களின் பாவத்தை
வேட்டையாடத் தயார் . . .

பக்தர்களின் கஷ்டங்களை
வேட்டையாடத் தயார் . . .
ஏழைகளின் தரித்திரத்தை
வேட்டையாடத் தயார் . . .

பணக்காரர்களின் அஹம்பாவத்தை
வேட்டையாடத் தயார் . . .

பதவியிலிருப்பவரின் சுயநலத்தை
வேட்டையாடத் தயார் . . .

தற்பெருமையாளர்களின் பெருமையை
வேட்டையாடத் தயார் . . .

கயவர்களின் கயமையை
வேட்டையாடத் தயார் . . .

தேசத்துரோகிகளின் துரோகத்தை
வேட்டையாடத் தயார் . . .

பயந்தாங்கொள்ளிகளின் பயத்தை
வேட்டையாடத் தயார் . . .
அறிவிலிகளின் அஞ்ஞானத்தை
வேட்டையாடத் தயார் . . .
வேட்டையாடப் போகிறான் . . .
விளையாடப் போகிறான் . . .

இதோ கிளம்பிவிட்டான் . . .

என் அனந்தபத்மநாபன் . . .

திருவனந்தபுரத்தில் . . .


உலகைக் காக்க ஒரு வேட்டை . . .

உன்னதமான ஒரு வேட்டை . . .

உத்தமனின் வேட்டை . . .

Read more...

புதன், 26 அக்டோபர், 2011

தீபாவளி வாழ்த்துக்கள் . . .

ராதேக்ருஷ்ணா

தீபாவளி . . .

இந்த தீபாவளி எல்லோருக்கும்
விதவிதமான தீபாவளி . . .



சிஷ்யர்களுக்கு
அனுக்ரஹ தீபாவளியாகட்டும் . . .

பயந்தாக்கொள்ளிகளுக்கு
தைரிய தீபாவளியாகட்டும் !

பெற்றோர்களுக்கு
பொறுப்பு தீபாவளியாகட்டும் !

குழந்தைகளுக்கு
குதூகல தீபாவளியாகட்டும் !

அஹம்பாவிகளுக்கு
வினய தீபாவளியாகட்டும் !

வியாபாரிகளுக்கு
லாப தீபாவளியாகட்டும் !

தாய்மார்களுக்கு
வாஞ்சை தீபாவளியாகட்டும் !

தந்தைமார்களுக்கு
கடமை தீபாவளியாகட்டும் !

ஏழைகளுக்கு
நீங்காத செல்வ தீபாவளியாகட்டும் !

பணக்காரர்களுக்கு
நிம்மதி தீபாவளியாகட்டும் !

வியாதியஸ்தருக்கு
ஆரோக்கிய தீபாவளியாகட்டும் !


முதியோருக்கு
மரியாதை தீபாவளியாகட்டும் !

ஆதரவற்றோருக்கு
அன்பு மயமான தீபாவளியாகட்டும் !

படிக்கும் குழந்தைகளுக்கு
அறிவு தீபாவளியாகட்டும் !

படிப்பற்றவருக்கு
அனுபவ தீபாவளியாகட்டும் !

குடும்பத்தினருக்கு
கொண்டாட்ட தீபாவளியாகட்டும் !


புதுமண தம்பதியருக்கு
தலை தீபாவளியாகட்டும் !

ப்ரும்மசாரிகளுக்கு
வைராக்ய தீபாவளியாகட்டும் !

வயது வந்த பெண்களுக்கு
ஜாக்கிரதை தீபாவளியாகட்டும் !

ஊனமுற்றோருக்கு
உற்சாக தீபாவளியாகட்டும் !

முட்டாள்களுக்கு
ஞான தீபாவளியாகட்டும் !

முயல்பவருக்கு
திருவினை தீபாவளியாகட்டும் !

இந்துக்களுக்கு
வீர தீபாவளியாகட்டும் !



பாரதத்திற்கு
சுதந்திர தீபாவளியாகட்டும் !

உலகத்திற்கு
சாந்தி தீபாவளியாகட்டும் !

எல்லோருக்கும்
நிம்மதி தீபாவளியாகட்டும் !



தீபாவளி வாழ்த்துக்கள் . . .

Read more...

செவ்வாய், 25 அக்டோபர், 2011

நானின்றி அவனில்லை . . .

ராதேக்ருஷ்ணா

தீபாவளி . . .
உற்சவ தீபாவளி . . .
அனந்தனுக்கு தீபாவளி . . .
அனந்தபுர ராஜனுக்கு தீபாவளி . . .

அனந்தபுரி அழகன்
விசேஷமான அலங்காரத்தில்
ஆனந்தமாய் பவனி வருகிறான் !

அனந்தபுரி ராஜன்
விண்ணோரும் மண்ணோரும்
வியக்க பவனி வருகிறான் !

அனந்தபுரி நாயகன்
பக்தர்களின் ப்ரேம வெள்ளத்தில்
உற்சாகமாய் பவனி வருகிறான் !


அனந்தபுரியின் ஆனந்தன்
தீப ஒளியில் தீபாவளி இரவில்
ஜொலிப்பாய் பவனி வருகிறான் !


அனந்தபுரி அன்பன்
திருவிதாங்கூர் ராஜனோடு
அன்பாய் பவனி வருகிறான் !


அனந்தபுரி தேவாதி தேவன்
அனல் விழி, ப்ரஹ்லாத நரசிம்மரோடு
நன்றாக பவனி வருகறான் !

அனந்தபுரியின் செல்லம்
குறும்பன் க்ருஷ்ணனோடு
குதூகலமாய் பவனி வருகிறான் !


அனந்தபுரியின் ரக்ஷகன்
சப்தரிஷிகளின் வேதசப்தத்தோடு
ரமணீயமயமாய் பவனி வருகிறான் !



அனந்தபுரியின் காதலன்
கோபாலவல்லியின் மனதோடு
காதலில் பவனி வருகிறான் !


அவனன்றி நானில்லை . . .
நானின்றி அவனில்லை . . .

Read more...

திங்கள், 24 அக்டோபர், 2011

காரணம் யாரோ ? ? ?

ராதேக்ருஷ்ணா


கண்களிலே ஆனந்த பாஷ்பம் . . .
காரணம் யாரோ ? ? ?

உடலெல்லாம் மயிர்கூச்சல் . . .
காரணம் யாரோ ? ? ?

மனம் முழுக்க சந்தோஷம் . . .
காரணம் யாரோ ? ? ?

நினைக்க நினைக்க இனிக்கிறது . . .
காரணம் யாரோ ? ? ?

வாயெல்லாம் சிரிப்பு . . .
காரணம் யாரோ ? ? ?

வார்த்தைகளிலெல்லாம் குதூகலம் . . .
காரணம் யாரோ ? ? ?

நடையெல்லாம் துள்ளல் . . .
காரணம் யாரோ ? ? ?

பேச்செல்லாம் ஆனந்தமயம் . . .
காரணம் யாரோ ? ? ?

காரியங்களிலெல்லாம் நம்பிக்கை . . .
காரணம் யாரோ ? ? ?

வாழ்வெல்லாம் பரமானந்தம் . . .
காரணம் யாரோ ? ? ?

சொல்லமுடியாத சுகம் . . .
காரணம் யாரோ ? ? ?

மறைக்கமுடியாத அனுபவம் . . .
காரணம் யாரோ ? ? ?

காரணம் யாரோ . . .?

என் பத்மநாபனைத் தவிர
வேறு யார்தான் காரணம் . . .

என் காதலா . . .
என் அழகா . . .
என் கணவா . . .

பத்மநாபா . . .

என்றும் உன் கோபாலவல்லி . . .



Read more...

வெள்ளி, 21 அக்டோபர், 2011

மறக்காதே . . .

ராதேக்ருஷ்ணா


மறக்காதே . . .

சில விஷயங்களை
ஒருபோதும் மறக்கவே கூடாது . . .

நாமஜபத்தை மறக்காதே . . .

க்ருஷ்ணனை மறக்காதே . . .

வினயத்தை மறக்காதே . . .

அன்பை மறக்காதே . . .

நன்றியை மறக்காதே . . .

பெற்றோரை மறக்காதே . . .

வாங்கின கடனை மறக்காதே . . .

உன் கடமையை மறக்காதே . . .

நல்லவைகளை மறக்காதே . . .

நல்லவர்களை மறக்காதே . . .

உழைப்பை மறக்காதே . . .

உதவியவை மறக்காதே . . .

உதவியவரை மறக்காதே . . .

தெய்வத்தின் அருளை மறக்காதே . . .

தாய்மொழியை மறக்காதே . . .

தாய்நாட்டை மறக்காதே . . .

பக்தர்களை மறக்காதே . . .

பக்தியை மறக்காதே . . .

பஜனையை மறக்காதே . . .

சத்சங்கத்தை மறக்காதே . . .

சத்குருவை மறக்காதே . . .

மறக்காதே . . .

இதில் ஒன்றை மறந்தாலும்
நீ மனிதரில்லை . . .


Read more...

வியாழன், 20 அக்டோபர், 2011

மறந்து பார் . . .

ராதேக்ருஷ்ணா

வாழ்வில் பல
விஷயங்களை
நீ மறந்துவிட்டாய் . . .

சில விஷயங்களை
மறக்க முயற்சிக்கிறாய் . . .

சில விஷயங்களை
மறப்பதேயில்லை . . .

இப்பொழுது நான்
சொல்லப்போவதையெல்லாம்
மறந்து பார் . . .

உன் அஹம்பாவத்தை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .

உன் சுயநலத்தை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .

உன் பொறாமையை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .

உன் அதிகப்பிரசங்கித்தனத்தை
மறந்துவிட்டு வாழ்வைப் பார் . . .

உன் கோபத்தை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .

உன் விரோதத்தை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .

உன் கெட்ட எண்ணங்களை
மறந்துவிட்டு வாழ்வைப் பார். . .

இவையெல்லாவற்றையும்
வைத்துக்கொண்டு
நீ வாழ்வைப் பார்ப்பதால்தான்
உன் வாழ்க்கை நரகமாய்த் தெரிகிறது !

இவையெல்லாவற்றையும்
நீ மறந்துவிட்டால் உன் வாழ்க்கை
க்ருஷ்ணனின் வரம் என்பது
உனக்குப் புரியும் !

இவைகளை நித்தியம்
நீ மறக்கத்தான் செய்கிறாய் !

எப்பொழுது . . .?

தூங்கும்போது . . .

முழித்திருக்கும்போதும்
நீ இவைகளை மறந்துவிட்டால் . . .

ஆஹா . . .
சீக்கிரம் மறந்துவிடேன் . . .

இந்த மறதி உனக்கு வர
நான் க்ருஷ்ணனிடம் ப்ரார்த்திக்கிறேன் . . .


Read more...

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

பிரச்சனைகள் . . .

ராதேக்ருஷ்ணா
 
பிரச்சனைகள் . . .
பிரச்சனைகள் இல்லாத
மனிதரில்லை . . .
 
பிரச்சனைகள் இல்லாமல்
ஒரு வாழ்க்கையில்லை . . .
பிரச்சனைகள் இல்லாமல்
உலகின் சுழற்சி இல்லை . . .

பிரச்சனைகள் நம்
வாழ்வில் ஓர் அங்கம் . . .

பிரச்சனைகள் நம்
வாழ்வின் ஓர் ஆதாரம் . . .

பிரச்சனைகள் நம்மை
பக்குவப்படுத்தும் ஒரு ஆசான் . . .
 
பிரச்சனைகளை அணுக
நமக்குத்தான்  தெரியவில்லை . . .

நானும் பிரச்சனைகளோடு
போராடிக்கொண்டே இருக்கிறேன் . . .
பல வருடங்களாக
பிரச்சனைகளிடமிருந்து
நான் கண்டறிந்த உண்மை இதுவே !

பிரச்சனைகளைக் கண்டு
நான் பயந்தால் அது என்னை
இன்னும் பயமுறுத்தும் . . .

பிரச்சனைகளைக் கண்டு
நான் அழுதால் அது என்னை
இன்னும் அழவைக்கும் . . .

பிரச்சனைகளைக் கண்டு
நான் ஓடினால் அது என்னை
பயங்கரமாகத் துரத்தும் . . .

பிரச்சனைகளைக் கண்டு
நான் புலம்பினால் அது என்
நிம்மதியைக் கெடுக்கும் . . .

பிரச்சனைகளைப் பற்றி
நான் அடுத்தவரிடம் பேசினால்
அது என்னைப் பரிகசிக்கும் . . .

பிரச்சனைகளைக் கண்டு
நான் மனம் புழுங்கினால்
அது என்னை அசிங்கப்படுத்தும் . . .

பிரச்சனைகள் என்று தீரும்
என்று நான் ஏங்கினால் அது
என் முதுகில் சவாரி செய்யும் . . .

பிரச்சனைகள் தீராது என்று
நான் முடிவு செய்தால் அது
என் வாழ்வை சீரழிக்கும் . . .

ஆனால் இதுதானே நாம்
எல்லோரும் செய்கின்றோம் . . .

அதனால் பிரச்சனைகள்
பிரச்சனைகளல்ல . . .
நாம் அணுகும் முறைதான்
பிரச்சனை . . .

இது நான் கண்ட முதல் உண்மை . . .

அடுத்தது . . .

பிரச்சனைகளைக் கண்டு
நாம் சிரித்தால் அது நமக்கு
பலவித நன்மைகள் செய்யும் !

பிரச்சனைகளை தைரியமாகக்
கையாண்டால் அது நமக்கு
அடிமையாகிச் சேவகம் செய்யும் !

பிரச்சனைகளை எதிர்கொள்ள
நாம் காத்திருந்தால் அது நம்மைக்
கண்டு விலகி ஓடி விடும் !

பிரச்சனைகளை நாம்
புரிந்துகொண்டுவிட்டால் அது
நம் வாழ்வை வளமாக்கும் !

அதனால் பிரச்சனைகள்
எனக்கு நல்லவையே . . .

உனக்கு எப்படி ? ? ?



Read more...

செவ்வாய், 4 அக்டோபர், 2011

நீயில்லாமல் நானில்லை . . .

ராதேக்ருஷ்ணா 


என்னை நான் தேடுகிறேன் !


காமத்தில் மூழ்கிவிட்ட
என்னைத் தேடுகிறேன் !

கோபத்தில் மாட்டிக்கொண்ட
என்னைத் தேடுகிறேன் !

பயத்தில் ஒளிந்துகொண்டிருக்கும்
என்னைத் தேடுகிறேன் !

அஹம்பாவத்தில் சிக்கிகொண்டிருக்கும் 
என்னைத் தேடுகிறேன் !

சுயநலத்தில் சுழன்றுகொண்டிருக்கும்
என்னைத் தேடுகிறேன் !

குழப்பத்தில் கரைந்துவிட்ட
என்னைத் தேடுகிறேன் !

திடீரென நான் எனக்கு
கிடைக்கிறேன் . . .

பல சமயங்களில் நான்
எனக்குக் கிடைப்பதில்லை . . .

சில சமயங்களில் நான்
எனக்கு ரொம்ப அழகாகக் கிடைக்கிறேன் !

அந்த சில சமயங்கள்
நான் நாமத்தை ஜபிக்கும் நேரங்கள் . . .

கிருஷ்ணனின் நாமத்தை
நா ஜபித்தால் நான் எனக்குக்
கிடைக்கிறேன் . . .

கிருஷ்ணனின் நாமத்தை
நான் மறந்தால் என்னை
நான் தேடவேண்டி உள்ளது . . .

எவ்வளவு தேடினாலும்
நான் எனக்குக் கிடைப்பதில்லை . . .

திரும்பவும் நா நாமத்தை
ஜபித்தால் கிடைக்கிறேன் . . .

என்ன அதிசயம் இது . . .

நான் எனக்குக் கிடைக்கும்போது
எத்தனை சந்தோஷம் . . .

நான் என்னைத் தேடும்போது
எத்தனை துக்கம் . . .

கிருஷ்ணா . . .
ஒன்று தெளிவாய் புரிந்தது . . .

நீயில்லாமல் நானில்லை . . .

நீயில்லாத நான் கொடுமை . . .

நீயில்லாத நான் அசிங்கம் . . .

நீயில்லாத நான் கேவலம் . . .

நீயில்லாத நான் பயங்கரம் . . .

நீயில்லாத நான் அழுக்கு . . .

நீயில்லாமல் நான் நானில்லை . . .

நீயில்லாத நான் தேவையில்லை . . .




Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP