ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 ஜூன், 2010

நினைத்தாலே சிலிர்க்கும் !

ராதேக்ருஷ்ணா


வாழ்க்கையின் மிகப்பெரிய
வரப்ரசாதம் நினைவுகள் !


வாழ்க்கையின் மிகப்பெரிய
துன்பமும் நினைவுகள்தான் !


வாழ்க்கையின் ஆதாரம் நினைவுகள் ! 


ஒவ்வொரு நாளும்,
நிச்சயம் ஏதோ நினைவுகளின்
தாக்கத்தில் தான் வாழ்கிறோம் !


நினைவுகள் பாரமாகவும் இருக்கும் !
நினைவுகள் பயங்கரமாகவும் இருக்கும் !
நினைவுகள் சுகமாகவும் இருக்கும் !
நினைவுகள் கசப்பாகவும் இருக்கும் !
நினைவுகள் இனிப்பாகவும் இருக்கும் !
நினைவுகள் ஆதரவாகவும் இருக்கும் !
நினைவுகள் பலவீனமாகவும் மாற்றும் !
நினைவுகள் நிறைய பலத்தையும் தரும் !
நினைவுகள் இன்றைய பொழுதை சுகமாக்கலாம் !
நினைவுகள் இன்றைய பொழுதை சுமையாக்கலாம் !
நினைவுகள் உன்னை சமாதானப்படுத்தும் !
நினைவுகள் உன்னை பயமுறுத்தும் !
நினைவுகள் உன்னை குழப்பலாம் !
நினைவுகள் உனக்குத் தெளிவையும் தரலாம் !


ஆகமொத்தத்தில் நினைவுகள்,
நம் வாழ்க்கையின் ஜீவாதாரமாக இருக்கிறது !


நீ எதை நினைக்கிறாயோ,
அதையே அடைகின்றாய்
என்று கண்ணன் கீதையில் கூறுகிறான் !


எப்படியும் எதையோ நினைக்கப்போகிறோம் !
நல்லதாக நினைத்துப் பார்க்கலாமே !


ஒவ்வொரு நாளும் எத்தனையோ
விஷயங்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறோம் !


அதில் ஒளிந்திருக்கும் ரஹஸ்யங்களை
சொல்கிறேன்...கேள் !



ஆலமரத்தைப் பார்த்தால்,
ஆலிலைக் கண்ணனை நினைத்துக்கொள் !

வேப்பமரத்தைப் பார்த்தால்
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரை நினைத்துக்கொள் !

புறாக்களைப் பார்த்தால்
திருக்கோஷ்டியூர் நம்பியை நினைத்துக்கொள் !

பூனைக்குடும்பத்தைப் பார்த்தால்
ராகா கும்பரை நினைத்துக்கொள் !

மயிலைப் பார்த்தால்
உன் க்ருஷ்ணனை நினைத்துக்கொள் !

துளசியைப் பார்த்தால்
ப்ருந்தாவனத்தை நினைத்துக்கொள் !

மானைப் பார்த்தால்
சீதாபிராட்டியை நினைத்துக்கொள் !

மலையைப் பார்த்தால்
திருப்பதி ஏழுமலையை நினைத்துக்கொள் !

பானைகளைப் பார்த்தால்
கோராகும்பரை நினைத்துக்கொள் !

விசிறியைப் பார்த்தால்
திருக்கச்சி நம்பியை நினைத்துக்கொள் !

புளிய மரத்தைப் பார்த்தால்
ஸ்வாமி நம்மாழ்வாரை நினைத்துக்கொள் !

பாலத்தைப் பார்த்தால்
அணில்களை நினைத்துக்கொள் !

கழுதையைப் பார்த்தால்
ஏகநாதரை நினைத்துக்கொள் !

புடவையைப் பார்த்தால்
த்ரௌபதியை நினைத்துக்கொள் !

அவலைப் பார்த்தால்
குசேலரின் பத்னி சுசீலாவை நினைத்துக்கொள் !

நாயைப் பார்த்தால்
திருக்கண்ணமங்கை ஆண்டானை நினைத்துக்கொள் !

காகத்தைப் பார்த்தால்
ஸ்ரீராமனை நினைத்துக்கொள் !

மழைமேகங்களைப் பார்த்தால்
ஸ்ரீ ஜயதேவரை நினைத்துக்கொள் !

பாம்பைப் பார்த்தால்
ஆதிசேஷனை நினைத்துக்கொள் !

குதிரையைப் பார்த்தால்
கள்ளழகரை நினைத்துக்கொள் !

கரும்பைப் பார்த்தால்
சந்த் துகாராமை நினைத்துக்கொள் !

வெண்ணையைப் பார்த்தால்
கோபிகளை நினைத்துக்கொள் !

செருப்பைப் பார்த்தால்
பரதனை நினைத்துக்கொள் !

கிளியைப் பார்த்தால்
சுகப்ரும்ம மஹரிஷியை நினைத்துக்கொள் !

கழுகைப் பார்த்தால்
ஜடாயுவை நினைத்துக்கொள் !

தாமரையைப் பார்த்தால்
ஸ்ரீ அனந்தபத்ம நாபரை நினைத்துக்கொள் !

யானையைப் பார்த்தால்
கஜேந்திரனை நினைத்துக்கொள் !

செங்கல்லைப் பார்த்தால்
பாண்டுரங்கனை நினைத்துக்கொள் !

மீசையைப் பார்த்தால்
பார்த்தசாரதியை நினைத்துக்கொள் !

தாடியைப் பார்த்தால்
கூரத்தாழ்வானை நினைத்துக்கொள் !

மழையைப் பார்த்தால்
ப்ரேமநிதியை நினைத்துக்கொள் ! 

ஓடத்தைப் பார்த்தால்
குகனை நினைத்துக்கொள் !

தம்பூராவைப் பார்த்தால்
மீராவை நினைத்துக்கொள் ! 

குந்துமணியைப் பார்த்தால்
குருவாயூரப்பனை நினைத்துக்கொள் !

 தயிர்கடையும் மத்தைப் பார்த்தால்
உடுப்பி க்ருஷ்ணனை நினைத்துக்கொள் !

நாவல் பழத்தைப் பார்த்தால்
முதலியாண்டானை நினைத்துக்கொள் !

மாங்காயைப் பார்த்தால்
பில்வமங்களரை நினைத்துக்கொள் !

வாழைப்பழத்தைப் பார்த்தால்
விதுரபத்னியை நினைத்துக்கொள் !

வில்லைப் பார்த்தால்
 அர்ஜுனனை நினைத்துக்கொள் !

பாம்புப்புற்றைப் பார்த்தால்
வால்மீகி மஹரிஷியை நினைத்துக்கொள் !

கல்லைப் பார்த்தால்
அகலிகையை நினைத்துக்கொள் !

மணலைப் பார்த்தால்
அணில்களை நினைத்துக்கொள் !

சமுத்திரக்கரையைப் பார்த்தால்
விபீஷணரை நினைத்துக்கொள் ! 

தாம்புக்கயிற்றைப் பார்த்தால்
யசோதா மாதாவை நினைத்துக்கொள் !

தொட்டிலைப் பார்த்தால்
பெரியாழ்வாரை நினைத்துக்கொள் ! 

கட்டிலைப் பார்த்தால்
மாமா ப்ரயாக தாஸரை நினைத்துக்கொள் !

பூமாலையைப் பார்த்தால்
ஆண்டாளை நினைத்துக்கொள் !

நந்தவனத்தைப் பார்த்தால்
தொண்டரடிப்பொடி ஆழ்வாரை நினைத்துக்கொள் !

கடப்பாரையைப் பார்த்தால்
திருமலை அனந்தாழ்வானை நினைத்துக்கொள் !

 எருமையைப் பார்த்தால்
ஞானேஸ்வரரை நினைத்துக்கொள் !

துடைப்பத்தைப் பார்த்தால்
பூரி ஜகந்நாதனை நினைத்துக்கொள் ! 

தூணைப் பார்த்தால்
நரசிம்மரை நினைத்துக்கொள் !

 கிணற்றைப் பார்த்தால்
கூபா கும்பரை நினைத்துக்கொள் !

வாளைப் பார்த்தால்
திருமங்கையாழ்வாரை நினைத்துக்கொள் !

பழங்களைப் பார்த்தால்
க்ருஷ்ணனுக்கு பழம்தந்த பழக்காரியை நினைத்துக்கொள் !

மொட்டைத்தலையைப் பார்த்தால்
திருப்பதி பெருமாளை நினைத்துக்கொள் !

மூக்குத்தியைப் பார்த்தால்
புரந்தரதாஸரின் மனைவி சரஸ்வதியை நினைத்துக்கொள் !

தம்பூராவைப் பார்த்தால்
தியாகராஜரை நினைத்துக்கொள் !

தராசைப் பார்த்தால்
த்வாரகா ராமதாஸரை நினைத்துக்கொள் !

காய்கறிகளைப் பார்த்தால்
சாருகாதாஸரை நினைத்துக்கொள் !

முடியைப் பார்த்தால்
சேனா நாவிதரை நினைத்துக்கொள் !

கிழிந்த உடையைப் பார்த்தால்
குசேலரை நினைத்துக்கொள் !

சாவியைப் பார்த்தால்
மன்னார்குடி ராஜகோபாலனை நினைத்துக்கொள் !

சந்தனத்தைப் பார்த்தால்
ஸ்ரீமன் மாதவேந்திரபுரியை நினைத்துக்கொள் !

அரிசையைப் பார்த்தால்
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின் மனைவி
ஸ்ரீமதி விஷ்ணு ப்ரியா தேவியை நினைத்துக்கொள் !

குத்துவிளக்கைப் பார்த்தால்
திருவிளக்குப்பிச்சனை நினைத்துக்கொள் !

பாலைப் பார்த்தால்
வடுகநம்பியை நினைத்துக்கொள் !

நாமக்கட்டியைப் பார்த்தால்
திருக்குறுங்குடி நம்பியை நினைத்துக்கொள் !

குடையைப் பார்த்தால்
கோவர்தன மலையை நினைத்துக்கொள் !

ஜன்னலைப் பார்த்தால்
கனகதாசரை நினைத்துக்கொள் !

சிறையைப் பார்த்தால்
தேவகி,வசுதேவரை நினைத்துக்கொள் !

அழுக்குத் துணிகளைப் பார்த்தால்
நம் பெருமாள் என்று சொன்ன வண்ணானை நினைத்துக்கொள் !

உப்பைப் பார்த்தால்
ஒப்பிலியப்பனை நினைத்துக்கொள் !

கோமணத்தைப் பார்த்தால்
குரூரம்மையை நினைத்துக்கொள் !

காதைப் பார்த்தால்
குரு உனக்குத் தந்த 
மந்திர உபதேசத்தை நினைத்துக்கொள் !

மோதிரத்தைப் பார்த்தால்
பூரி ஜகந்நாதனின் 
பூக்காரியை நினைத்துக்கொள் !

மாம்பழங்களைப் பார்த்தால்
ஸ்ரீநாத்ஜீயை நினைத்துக்கொள் !

படுக்கையைப் பார்த்தால்
 எம்பார் கோவிந்தரை நினைத்துக்கொள் !

தோள்களைப் பார்த்தால்
பிள்ளை உறங்காவில்லிதாஸரை 
நினைத்துக்கொள் !

ஏர்கலப்பையைப் பார்த்தால்
பலராமரை நினைத்துக்கொள் !

இன்னும் இதுபோல்
உன் வாழ்க்கையில்
அன்றாடம் பார்க்கும்
நிகழ்ச்சிகளில் பக்தி பூர்வமான
கோடி கோடி விஷயங்கள்
பின்னிப் பினைந்துகிடக்கிறது !

நான் சொன்னது
பெரிய கடலில் ஒரு துளியே !

இப்படியே நினைத்துக்கொண்டிருந்தாலே,
ஒரு நாள் சத்தியமாக,
உனக்கு க்ருஷ்ணனின் தரிசனமும்,
மஹா பாகவதர்களின் தரிசனமும்
நிச்சயம் கிடைக்கும் !

விடா முயற்சி செய் !
நிச்சயம் உன்னால் முடியும் !
வீண் போகவே போகாது !

நீ என்னிடம் கூட சொல்லவேண்டாம் !
நீ அனுபவித்தாலே எனக்குப் போதும் !

Read more...

வியாழன், 24 ஜூன், 2010

அருகதையில்லை !

ராதேக்ருஷ்ணா !

பரதா !
தாசரதியின் செல்லத் தம்பியே ! 
உத்தமி கைகேயி பெற்ற ரத்தினமே !
சுமைதாங்கி வார்த்தையின் அர்த்தமே !
தியாக வாழ்க்கையின் உருவமே ! 


ஆசைவயப்பட்டு
மனதில் ப்ரார்த்தனையோடு
அலையும் நாங்கள் எங்கே ?
ஆசையை அழித்த நீ எங்கே . . . !

அடுத்தவரின் சொத்துக்கு
ஆளாய் பறக்கும்
நாங்கள் எங்கே ?
உனக்கென கிடைத்ததையும்
வேண்டாமென்ற நீ எங்கே . . . !

சுகபோகமே வாழ்க்கையின்
உண்மையான ப்ரயோஜனமென்று
நாயாய் திரியும்
நாங்கள் எங்கே ?
14 வருஷங்கள் மரவுரி
தரித்து,தரையில் படுத்த நீ எங்கே . . . !

தேவைக்காகத் தெய்வத்தைக்
கொண்டாடும்
சுயநலப்பிசாசுகளான
நாங்கள் எங்கே ?
தெய்வமே தேவையென்று
எல்லாவற்றையும் தவிர்த்த நீ எங்கே . . . !

செய்த பாவத்திற்கு உலகில் பழி வர,
அதை மறுத்து வாதாடும்,
நாங்கள் எங்கே ?
பாவமே செய்யாமல்
பழியைச் சுமந்த நீ எங்கே . . . !

அகம்பாவத்தினால் உளறி, 
சிறிது அவமானம் ஏற்பட்டாலே
தெய்வத்தை நிந்தனை செய்யும்
நாங்கள் எங்கே ? 
ஊரே அவமதித்த போதும்
பக்தியை நிரூபித்த நீ எங்கே . . . !

தன் தவற்றை அடுத்தவர் தலையில்
போட்டு தப்பிக்கும் நாங்கள் எங்கே ?
கூனியின் சதி,கைகேயிமாதாவின் வரம்,
தசரதரின் மரணம்,ஸ்ரீ ராமனின் வனவாசம்
என எல்லாவற்றிற்கும் தன்னுடைய
பாபமே காரணம் என்ற நீ எங்கே . . . ! 

நினைத்த காரியம் நடக்கவிட்டால்,
அழுது புரண்டு நடித்து வேஷமிடும்
நாங்கள் எங்கே ?
ராமன் சொன்ன வார்த்தையை மதித்து
அவன் வைத்த இடத்தில்
14 வருஷம் வாழ்ந்து காட்டிய நீ எங்கே . . . !

சோம்பேறித்தனத்தால் 
 தினமும் பூஜை செய்யாமல், சாக்கு
சொல்லி தப்பிக்கும் நாங்கள் எங்கே ?
ஸ்ரீ ராமனின் பாதுகையே கதி என்று
14 வருஷம் அதையே பூஜை செய்து
கொண்டாடின நீ எங்கே . . . ! 

 ஸ்ரீராமனைப் பார்க்கும் ஆசையே
இல்லாமல்,மிருக ஜாதி போல்,
சாப்பாடு,தூக்கம்,காமம் என்று
அலையும் நாங்கள் எங்கே ?
15வது வருஷத் தொடக்கத்தில்
ஸ்ரீ ராமனைப் பார்க்கவில்லையென்று,
அக்னியில் குதிக்கச்சென்ற நீ எங்கே . . . !

 பரதா. . .
ஸ்ரீ மான் நீ . . .
உத்தம ராம தாஸன் நீ . . .  

உன்னோடு கொஞ்சம்
எங்களை உரசிப்பார்த்தோம் . . .
அதில் ஒரு உண்மை
தெளிவாகப் புரிந்தது . . .

உன் பெயரைச் சொல்லக்கூட
எங்களுக்கு அருகதையில்லை . . .

இதுவே அந்த உண்மை . . .

Read more...

திங்கள், 21 ஜூன், 2010

க்ருஷ்ணா..எடுத்துக்கொள் !

ராதேக்ருஷ்ணா

ஹே க்ருஷ்ணா !
நீ எத்தனையோ நல்லதை
எனக்குக் கொடுத்திருக்கிறாய் . . .

ஆனால் நான் அவை எதையுமே
ஏற்றுக்கொள்ளவில்லை . . .
கொண்டாடவில்லை . . .
மதிக்கவில்லை . . .

இப்பொழுது என்னிடம்
என்ன
இருக்கிறது ?

என் மனதின் விகாரங்களை
உன்னிடம் மட்டுமே
என்னால் சொல்லமுடியும் . . .

நீ மட்டுமே என்னை புரிந்துகொள்வாய் . . .

நீ மட்டுமே எனக்கு சமாதானம் சொல்லமுடியும். . .

என்னிடமிருக்கும் சிலவற்றை
பலர்
விரும்புகிறார்கள்  . . .

என்னிடமிருக்கும் பலவற்றை
யாரும் கவனிக்கவில்லை . . .
அப்படியே கவனித்தாலும்
நிச்சயமாக யாரும் அதை
விரும்பப்போவதுமில்லை . . .
வாங்கிக்கொள்ளப்போவதுமில்லை . . .

எனக்கு மட்டுமே தெரிந்த நான் . . .
எனக்கு மட்டுமே புரிந்த நான். . .
எனக்கு மட்டுமே பரிச்சயமான நான் . . .
எனக்கே பிடிக்காத நான் . . .
யாருக்கும் தெரியாத நான் . . .
என்னிடம் நானே தோற்ற நான் . . .
என்னால் ஜெயிக்கமுடியாத நான் . . .
என்னால் மறக்கமுடியாத நான் . . .
என்னால் மறுக்கமுடியாத நான் . . .
என்னால் மறைக்கமுடியாத நான் . . .

அந்த என்னிடம் உள்ள நான் . . .
உன்னிடம் தருகிறேன் . . .

என்னிடம் நிறைய 
நிறைய காமம் உள்ளது ...
அதை எடுத்துக்கொள் !

என்னிடம் கோபம் 
குறைவில்லாமல் உள்ளது ...
அதை எடுத்துக்கொள் !

என்னிடம் பொறாமை
கொட்டிக்கிடக்கிறது ...
அதை எடுத்துக்கொள் !

என்னிடம் அளவுக்கதிமாகவே
அகம்பாவம் இருக்கிறது... 
அதை எடுத்துக்கொள் !

என்னிடம் கணக்கிடமுடியாத
சுயநலம் நிறைந்திருக்கிறது...
அதை எடுத்துக்கொள் !

என்னிடம் தேவையற்ற 
பயம் நீக்கமற நிறைந்திருக்கிறது...
 அதை எடுத்துக்கொள் !

என்னிடம் சந்தேகம்
நிரந்தரமாக குடிகொண்டிருக்கிறது !
அதை எடுத்துக்கொள் !

என் மனது முழுவதும்,
குழப்பம் ஆட்சி செய்கிறது !
அதை எடுத்துக்கொள் !

என் உடல் முழுவதும்,
பழி வாங்கும் எண்ணம்,
வெறியாட்டம் போடுகிறது !
அதை எடுத்துக்கொள் !

எனக்கு ஆசைகளின் மேல்
அலாதியான அபிமானம்
நிரந்தரமாக இருக்கிறது !
அதை எடுத்துக்கொள் !

என் ஹ்ருதயத்தில்,
அடுத்தவரை அவமரியாதை
செய்யும் வித்தைகள்
மலை போலிருக்கிறது !
அதை எடுத்துக்கொள் !

எல்லோரையும் ஏமாற்றும்
வித்தை என் மீது
சுகமாகச் சவாரி செய்கிறது ! 
அதை எடுத்துக்கொள் !
 
என்னோடு பாபம்
ஆனந்தமாக குடித்தனம் 
நடத்திக்கொண்டிருக்கிறது !
அதை எடுத்துக்கொள் !

என்னுடைய பூர்வ ஜன்ம
கர்மவினைகள்,
என் வாழ்க்கையோடு
இரண்டற கலந்திருக்கிறது !
அதை எடுத்துக்கொள் ! 

இன்னும் தரவேண்டியது
நிறைய இருக்கிறது . . .
எடுத்துக்கொள்....

எல்லாவற்றையும் எடுத்துக்கொள் !
 எனக்கென்று எதுவும் மிச்சம் வைக்காதே !

நான் எனக்குத் தெரிந்தவரை
நான் சொல்லிவிட்டேன் !
எனக்குத் தெரியாத இன்னும்
பலகோடி எனக்குள் இருந்துகொண்டு
என் வாழ்க்கையில்
விளையாடிக்கொண்டிருக்கிறது !

இவைகளைப்பற்றி
யாருக்கும் கவலையில்லை !
அவரவரோடு நான் எப்படி
இருக்கிறேன் என்பது மட்டுமே,
எல்லோருக்கும் முக்கியம் !

நான் என்னிடத்தில் எப்படி
வாழ்கிறேன் என்பதைப்பற்றி
யாருக்கும் அக்கறையில்லை !

இது அவர்களின் குற்றமல்ல !
நானும் அடுத்தவரிடம் இப்படித்தானே
இருக்கிறேன் !

உனக்கு எதைஎதையோ
தரவேண்டும் என்று
ஆசைப்பட்டேன் . . .
ஆனால் என்ன செய்வேன் !
நான் என்னுள் தேடிப்பார்த்ததில்
இவைகள்தான் எனக்குக்
கிடைத்தன !

தயவு செய்து வாங்கிக்கொள் !
ஆசையோடு எடுத்துக்கொள் !

 க்ருஷ்ணா !
நீ தானே ஆசையோடு கொடுப்பது
எதுவாயினும்
ஏற்றுக்கொள்வேன் என்று
பகவத்கீதையில் சொன்னாய் !

நான் இவைகளை,
மிக ஆசையோடு,
மிக மரியாதையோடு,
உனக்கு ஆத்மார்த்தமாகச்
சமர்ப்பிக்கின்றேன் !

இவைகளை எடுத்துக்கொண்டு
எனக்கு ஒன்றே ஒன்றை மட்டும் தா...

அந்த ஒன்று,
எந்த நிலைமையிலும்,
எந்த சமயத்திலும்,
எந்த ஜன்மத்திலும்,
உன்னை மறவாதிருக்க வரம் தா . . .

உன்னை மறந்தால்,
கோடி,கோடி ஜன்மாக்கள்
நரகத்திலேயே உழன்று,
படாதபாடு பட
ஆசீர்வாதம் செய் ! 
 
 

Read more...

செவ்வாய், 8 ஜூன், 2010

தொலைத்துவிடாதே !

ராதேக்ருஷ்ணா

வம்பு !

உலகின் மிகப்பெரிய கிருமி !
அடுத்தவரை அழவைக்கும் கிருமி !
பேசுபவரை அழிக்கும் கிருமி !

யாரைப் பற்றியும் வம்பு பேச

யாருக்கும் உரிமை இல்லை !

யார் வேண்டுமானாலும் எப்படி

வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்
போகட்டும் !
உன்னிடம் யார் கேட்டார்கள் . . .?
க்ருஷ்ணன் உன்னைக் கேட்டானா ?

யார் வேண்டுமானாலும் எதை

வேண்டுமானாலும் செய்யட்டும் !
உன்னை யார் கவனிக்கச்சொன்னார்கள் . . .?
க்ருஷ்ணன் உன்னை நியமித்தானா ?

எங்கு வேண்டுமானாலும் என்ன

வேண்டுமானாலும் நடக்கட்டும் !
உன்னை யார் பார்க்கச் சொன்னார்கள் . . .?
க்ருஷ்ணன் உன்னைப் பார்க்கச்சொன்னானா ?

யாருக்கும் யாரோடு வேண்டுமானாலும்

சண்டை இருக்கட்டும் !
நீ சண்டை போட்டதேயில்லையா . . .?
க்ருஷ்ணன் உன்னைப் பரப்பச்சொன்னானா ?

யாருக்கும் யாரோடு வேண்டுமானாலும்

என்ன உறவு வேண்டுமானாலும்
இருக்கட்டும் !
நீ ரொம்ப ஒழுங்கோ . . .?
க்ருஷ்ணன் உன்னை தூதுபோகச்சொன்னானா ?

யாருக்கு என்ன பொருள்

வேண்டுமானாலும் நஷ்டமாகட்டும் !
உனக்கு என்ன பெரிய வருத்தம் . . .?
க்ருஷ்ணன் உன்னை சரிசெய்யச் சொன்னானா ?

யாருக்கோ எதோ வியாதி

வரட்டும் !
உனக்கு வியாதியே இல்லையா. . .?
க்ருஷ்ணன் உன்னை கஷ்டப்படுத்தினானா ?

எந்தக் குடும்பத்திலும் எது வேண்டுமானாலும்

நடக்கட்டும் !
உன் குடும்பத்தில் எல்லாம் சரியோ . . .?
க்ருஷ்ணன் உன்னை திட்டினானா ?

யார் வேண்டுமானாலும் எவ்வளவு

பொய் வேண்டுமானாலும் பேசட்டும் !
நீ என்ன ஹரிச்சந்திரனா . . .?
க்ருஷ்ணன் உன்னிடம் கணக்கு கேட்டானா ?

யார் வேண்டுமானாலும் யாரிடமும்

ஏமாறட்டும் !
நீ என்ன ஏமாந்ததே இல்லையா . . .?
க்ருஷ்ணன் உன்னை கேட்க்கச் சொன்னானா ?

யாரும் எந்த சமயத்திலும், எப்படி

வேண்டுமானாலும் தூங்கட்டும் !
நீ என்ன தூக்கத்தை ஜெயித்துவிட்டாயோ . . .?
க்ருஷ்ணன் உன் தூக்கத்தைப் பறித்தானா ?

யார் வேண்டுமானாலும்,யாரோடும்,

எங்கோ,என்ன வேண்டுமானாலும்
சாப்பிடட்டும் !
நீ யாரோடும் சாப்பிட்டதே இல்லையா . . .?
க்ருஷ்ணன் உன் சாப்பாட்டைக் கெடுத்தானா ?

யாரோ, யாரிடமோ

அவமானப்படட்டும் !
நீ யாரையும் அவமானப்படுத்தியதே இல்லையா . . .?
க்ருஷ்ணன் உன்னை அவமானப்படுத்தினானா ?

யார் வீட்டு குழந்தைகளும்

என்ன தவறு வேண்டுமானாலும் செய்யட்டும் !
உன் குழந்தைகள் மிகவும் சமத்தோ . . .?
க்ருஷ்ணன் உன் குடும்பத்தைக் கெடுத்தானா ?

எவருடைய மனைவி எப்படி

வேண்டுமானாலும் வாழட்டும் !
உன் கணவனிடம் நீ ஒழுங்காக இருக்கிறாயோ . . . ?
க்ருஷ்ணன் உன் கணவனைக் குழப்பினானா ?

யாருடைய கணவன் எவ்வளவு

மோசமாக வேண்டுமானாலும் இருக்கட்டும் !
உன் கணவன் என்ன மிகவும் உத்தமனோ . . . ?
க்ருஷ்ணன் உன் மனதைக் கெடுத்தானா ?

போதும் ...

இதற்கு மேல் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை ...
நீ யார் ? உன் வேலை என்ன ?
அதைப் பார் !

ஒவ்வொரு நிமிடமும்

உன்னை உயர்த்திக்கொள் !
ஒவ்வொரு நிமிடமும்
உன் குடும்பத்திற்காக ப்ரார்த்தனை செய் !
ஒவ்வொரு நிமிடமும்
உன்னை சரிசெய்து கொள் !

தயவு செய்து

வம்பிற்கு மயங்கி
நீ வம்பில் மாட்டிக்கொள்ளாதே !

உன் வாழ்க்கையை தொலைத்துவிடாதே !

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP