ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 நவம்பர், 2010

வாழ்ந்து பார் . . .

ராதேக்ருஷ்ணா...


உனக்கு தோள் கொடுக்க
கண்ணன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது சுமையைத் தாங்க
கோபாலன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனக்கு ஆறுதல் சொல்ல
க்ருஷ்ணன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனக்கு தைரியம் தர
கோவிந்தன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

 உன் கண்ணீரை துடைக்க
கிரிதாரி இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உன்னை சிரிக்க வைக்க
முரளீதரன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனக்கு வாழ்வை சொல்லித்தர
கீதாசார்யன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது கஷ்டங்களை சரி செய்ய
புண்டரீகாக்ஷன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உன்னை எப்போதும் காப்பாற்ற
அச்சுதன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனக்கு வேண்டியதைத் தர
நவநீத சோரன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது பாபங்களை வாங்கிக்கொள்ள
முகுந்தன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது எண்ணங்களை புரிந்துகொள்ள
ஜகந்நாதன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உன்னை புரிந்துகொண்டு
 உலகில் வாழ உனக்கு அருகதை உண்டு . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உலகைப் புரிந்துகொண்டு
உலகோடு ஒத்துவாழ அதிகாரம் உண்டு . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது திறமைகளை உபயோகப்படுத்தி,
எல்லோர் முன்பும் வாழ்ந்து காட்ட
உனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது லக்ஷியங்களை அடைய
கண்ணன் உனக்கு உதவுகின்றான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

கடைசி மூச்சு வரை
சிரத்தையோடு வாழ்ந்து பார் . . .

கடைசி நிமிடம் வரை
முயற்சியோடு வாழ்ந்து பார் . . .

வாழ்ந்து பார் . . .
உன் வாழ்க்கையை பலபேர்
பாடமாகக் கொள்வர் . . .
வாழ்ந்து பார் . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP