ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 நவம்பர், 2010

மனமே . . .ஓ . . .மனமே !

ராதேக்ருஷ்ணா . . . 

மனமே . . .கலங்காதிரு !
நல்லதே நினை . . .

மனமே . . .குழம்பாதிரு !
நல்லதே நடக்கும் . . .

மனமே . . .சோர்ந்துபோகாமலிரு !
நல்லதே நடக்கிறது . . .

மனமே . . .தெளிவாக இரு !
 நல்லதே நடந்தது . . .

மனமே . . . அசராமலிரு !
நன்மை தானாக வரும் . . .

மனமே . . .அழாமலிரு !
க்ருஷ்ணன் பலம் தருகிறான் . . .

மனமே . . . துவண்டு போகாமலிரு !
 சவால்களை சமாளிக்கலாம் . . .

மனமே . . .நம்பிக்கையோடு இரு !
பிரச்சனைகளை தீர்க்கலாம் . . .

மனமே . . .நிம்மதியாக இரு !
தனியாய் நின்று வெல்லலாம் . . .

மனமே . . .புலம்பாமலிரு !
தீர்வுகள் வரிசையில் நிற்கின்றன . . . 
 
மனமே . . .பொறுமையாய் இரு !
எதிர்காலம் உன்னிடம் வருகிறது . . .

மனமே . . .அதைரியப்படாதே !
உலகமே உனக்கு வசப்படும் . . .

மனமே . . .எதிர்பார்க்காதே !
எல்லாம் உன்னிடமே இருக்கிறது . . .

மனமே . . . ஏமாறாதே !
இவ்வளவு தான் உலகம் . . .

மனமே . . .ஓ . . . மனமே !

நீ....உலகை நம்பி இல்லை !

மனமே . . .ஓ . . . மனமே !

நீ....மனிதர்களை நம்பி இல்லை !

மனமே . . . ஓ . . . மனமே !

நீ....செல்வத்தை நம்பி இல்லை !

மனமே . . . ஓ . . . மனமே !

நீ....சொந்தங்களை நம்பி இல்லை !

மனமே . . . ஓ . . . மனமே !
உனக்கு யாரும் சமாதானம் சொல்லவேண்டாம் !
உனக்கு யாரும் தைரியம் தரவேண்டாம் !
உனக்கு யாரும் நம்பிக்கை தரவேண்டாம் !

நீ தான் உலகிற்கே எல்லாம் தரவேண்டும் !

மனமே . . . ஓ . . . மனமே !

என்னிடம் உள்ள ஒரே சொத்து நீயே . . .
என்னை விட்டு நீங்காத பந்தமும் நீயே . . . 

நீ போதும் . . .

நான் வாழ நீ போதும் . . .

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP