ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 5 நவம்பர், 2010

தீபாவளி . . .தீபாவளி . . .

ராதேக்ருஷ்ணா


தீபாவளியைத் தெரிந்துகொள் !


பகவான் ஸ்ரீ ராமன்,
ராவண வதம் செய்துவிட்டு,
அயோத்யாவிற்குத் திரும்பின நாள்
தீபாவளி . . .

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்,
ப்ராக்ஜ்யோதிஷபுரத்திற்கு சென்று,
நரகாசுரனை வதம் செய்த நாள்
தீபாவளி . . .

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்,
16100 ஸ்த்ரீகளுக்கு திவ்யமான
தரிசனம் தந்து அவர்களை
விடுவித்த நாள்
தீபாவளி . . .


16100 ராஜகுமாரிகளும்,
அழகன் ஸ்ரீ க்ருஷ்ணனையே
தங்களின் ஸ்வாமியாக
ஏற்றுக்கொண்டு, சரணாகதி
செய்த நாள் தீபாவளி . . .


ஆச்சரியமாக அதிதி மாதாவின்
குண்டலங்களை நரகனிடமிருந்து மீட்டு
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்
அவளுக்கு திரும்பிக்கொடுத்த நாள்
தீபாவளி . . .


நரகாசுரனிடமிருந்து வருணனின்
குடையை மீட்டு பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்
அவனுக்கு அதைக் கொடுத்து
ஆசிர்வதித்த நாள்
தீபாவளி . . .


தேவலோகத்தில் தேவர்களுக்கு
மட்டுமே சொந்தமான பாரிஜாத
மரத்தை வேரோடு பிடுங்கி
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் பூமிக்காக
கொண்டு வந்த நாள்
தீபாவளி . . .


திருப்பாற்க்கடலை தேவர்களும்,
அசுரர்களும் கடைய அதிலிருந்து,
லக்ஷ்மிதேவி அவதரித்த
புண்ணிய நாள் தீபாவளி . . .


வாமன மூர்த்திக்கு தன்னிடமிருந்த
அனைத்தையும் தானம் தந்து
பாதாள லோகத்திலிருக்கும்
ப்ரஹ்லாதனின் பேரனான 
மஹாபலி சக்ரவர்த்தி பூமியை
தரிசிக்க வரும் நாள்
தீபாவளி . . .


லக்ஷ்மிதேவி நம்முடைய
க்ருஹங்களுக்கு வந்து
நம்மை நீங்காத செல்வமான
பக்தியில் திளைக்க வைக்கும் நாளே
தீபாவளி . . .


ஆதலால் தீபாவளியை
அனுபவிப்போம் . . .


தீபாவளிக்கு அடுத்த நாள்
மிகவும் விசேஷமானது . . .


ரொம்ப ரொம்ப விசேஷமானது . . .


நிச்சயம் நாம் அனைவரும்
கொண்டாடவேண்டியது . . .


நம் க்ருஷ்ணனின்
வீரசாகசத்தை கொண்டாடும்
உன்னதமான நாள் நாளை . . .


அது என்ன . . ?


நாளை சொல்கிறேன் . . .


ஆனால் கொண்டாடியே ஆகவேண்டும் !


தயாராக இரு . . .


இல்லை . . .
இப்பொழுதே சொல்கிறேன் . . .


நாளை என்ன விசேஷம் தெரியுமா ?


"கோவர்தன பூஜை"


கொண்டாட வேண்டிய
உன்னத நாள் தானே . . .


வா . . .கொண்டாடுவோம் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP