ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 அக்டோபர், 2010

ராச பௌர்ணமி !

ராதேக்ருஷ்ணா



பௌர்ணமி . . .

முழுமதி அழகானது . . .

எல்லோரையும் மயக்குவது . . .

மனதை இதமாக வருடுவது . . .

ஜீவராசிகளுக்கு போகம் தருவது . . .

கவிஞனும் ரசிப்பது . . .

நாஸ்தீகனும் அனுபவிப்பது . . .

விஞ்ஞானியும் காண்பது . . .

மெய்ஞானியையும் வசீகரிப்பது . . .

மாதம் ஒரு பௌர்ணமி . . .

இருப்பினும் அழகானது . . .

ஆயினும் சரத்கால பௌர்ணமி
 மிக மிக விசேஷமானது . . .

இந்த பௌர்ணமியில்தான்
இரவு ஆரம்பிக்கும் சமயத்தில்
நம் கண்ணன் ப்ருந்தாவனத்தில்
எல்லாவித அலங்காரங்களுடனும்
குழலூதினது . . .


இந்த சரத்கால பௌர்ணமிக்காகவே
கோபிகைகள் மார்கழி மாதத்தில்,
காத்யாயனி விரதம் இருந்தது . . .

இந்த ரசமயமான பௌர்ணமியில்
கண்ணன் ப்ருந்தாவனத்தில் நுழைய
சந்திரனும் அவன் திருவடிகளில்
சரணாகதி செய்தது . . .

இந்த முத்துபோன்ற பௌர்ணமியில்
க்ருஷ்ணன் கோபிகைகளை
மயக்க ஆனந்தமாக குழலூதினது . . .


இந்த லீலா பௌர்ணமியில் தான்
உள்ளம் கவர் காதலன் கண்ணனின்
குழலோசையில் ராதையும் தன்னை
மறந்து,அவனிடம் தன்னை அர்ப்பித்தது . . .



இந்த புண்ணிய பௌர்ணமியில்தான்
கோபிகைகளும் தங்களின் வீடு வாசலைத் துறந்து,பந்துக்களையும் உதறித்தள்ளி,ஆனந்தத்தில்
இரவில் ப்ருந்தாவனத்தில் நுழைந்தது . . .


இந்த அற்புத பௌர்ணமியில்தான்
கோபிகைகளோடு,ராதிகாவும் கண்ணனும்
ராச லீலா ஆட முடிவுசெய்தது . . .


இந்த அம்ருத பௌர்ணமியில்தான்
க்ருஷ்ணன் கோபிகைகளோடு,
யமுனையில் ஆனந்தமாகக் குளித்து,
குள்ளக்குளிர ஜலக்ரீடை செய்தது . . .




இந்த ப்ரேம பௌர்ணமியில்தான்
கோபிகைகள் கண்ணனை அகம்பாவத்தினால்
இழந்துவிட்டு,ப்ருந்தாவனத்தில்
பரிதவித்தது . . .




இந்த விரஹ பௌர்ணமியில்தான்
கோபிகைகள் ராதிகாவின் திருவடிகளில்
சரணாகதி செய்தது . . .




இந்த ப்ருந்தாவன பௌர்ணமியில்தான்
ராதிகா க்ருஷ்ணனை விட்டு,
கோபிகைகளோடு சேர்ந்துகொண்டு,
அழகாக கோபிகாகீதம் பாடினது . . .


இந்த ஆனந்த பௌர்ணமியில்தான்
கோபிகைகளின் பக்தியும்,ராதையின்
க்ருஷ்ண ப்ரேமையும் தேவர்களையும்,
உலகையும் வசப்படுத்தியது . . .


இந்த க்ருஷ்ணலீலா பௌர்ணமியில்தான்
அழகன் கண்ணன் கோபிகைகளின்
ப்ரேமைக்கு தன்னையே கொடுத்தது . . .




இந்த நர்த்தன பௌர்ணமியில்தான்
ஒவ்வொரு கோபிக்கும் ஒரு க்ருஷ்ணனாக,
கண்ணன் பல கண்ணனாக அவதாரம்
எடுத்து அவர்கள் இஷ்டப்படி ஆடினது . . .


இந்த புண்ணிய பௌர்ணமியில்தான்
கண்ணன் ராதையிடம் தன்னையே
பூரணமாக சமர்ப்பித்தது . . .


இந்த பிடிவாத பௌர்ணமியில்தான் ராதிகாவின்
அழகிற்கும்,கடைக்கண் பார்வைக்கும்,
கண்ணன் தானே தோற்றது . . .

இந்த ரஹஸ்ய பௌர்ணமியில்தான்
கண்ணன் கோபிகைகள் வேஷமிட்டு,
கோபர்களுடன் அவர்கள் வீட்டிலிருந்தது . . .

இன்னும் எத்தனையோ உள்ளது . . .

அவையெல்லாம் பரம ரஹஸ்யம் . . .

உன்னதமான ப்ரேம பக்தி உள்ளவரே
அதற்கு அதிகாரிகள் . . .

உனக்கு அந்த அருகதை வர
விடாது இந்த பக்தி பௌர்ணமியிலிருந்து
ப்ரேம நாமமான "ராதேக்ருஷ்ணா"வை
அள்ளி அள்ளிப் பருகு . . .

அப்படியே செய்து வர
நிச்சயம் ஒரு நாள்,
ஒரு சரத் கால பௌர்ணமியில்,
நீயும்,நானும்,க்ருஷ்ணனும்,ராதையும்,
கோபிகைகளும்
ப்ருந்தாவனத்தில் ராசம் ஆடுவோம் . . .

ராச பௌர்ணமியே உனக்கு நமஸ்காரம் . . .

சரத் பௌர்ணமியே எங்களுக்கு 
ப்ரேம பிச்சையிடு . . .

ஜெய் ஸ்ரீ ராச பூர்ணிமா . . .
ஜெய் ஸ்ரீ ப்ருந்தாவன் பூமிக்கு . . .
ஜெய் ஸ்ரீ கோபிகா ஸ்த்ரீகளுக்கு . . .
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ண சந்த்ரனுக்கு . . .
ஜெய் ஸ்ரீ ராதிகா ராணிக்கு . . .
ஜெய் ஸ்ரீ ராசலீலாவுக்கு . . .

ராதே . . . ராதே . . .
க்ருஷ்ணாராதே . . .

க்ருஷ்ணா. . .க்ருஷ்ணா . . .
ராதேக்ருஷ்ணா . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP