ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

சில மணிநேரங்கள் !

ராதேக்ருஷ்ணா

வாழ்வில் எத்தனையோ
காரியங்கள் செய்துகொண்டேயிருக்கிறோம் !

பயனற்ற செயல்கள் பலகோடி . . .
முட்டாள்தனமான காரியங்கள் சிலகோடி  . . .

சில சமயங்களில் நமக்குத் தெரியாமலேயே,
நாம் மிக அற்புதமான சில காரியங்களில்,
ஈடுபடுகின்றோம். . .


தெய்வத்தின் அனுக்ரஹத்தால் மட்டுமே
நாம் தெய்வீக சக்தியால் உந்தப்பட்டு
உருப்படியான காரியங்களை செய்கின்றோம் . . .


 அப்படி நாம் செய்யும் காரியம்தான்
கோவிலுக்குச் செல்வது . . .


தெய்வம் நிச்சயம் நமக்கு
என்றும் நன்மையே செய்கிறது!


மலையப்ப ஸ்வாமியை மிஞ்சின
கலியுக தெய்வம் வேறொன்று உண்டோ ? ? ?


திருமலை ஸ்ரீநிவாசன் தான் எங்களை
திருமலைக்கு அழைத்துச்சென்றது  . . .


திருமலை பாலாஜியின் அருளல்லாமல்
ஒரு ஜந்துவும் திருமலையில் நுழையமுடியாது . . .


இந்த இரண்டு கால் ஜந்துக்களையும்,
அலர்மேல் மங்கா உறை மார்பன்,
தன் திருமலைக்கு வரவழைத்தான் . . .




திருமலை மிக அழகானது . . .
திருமலை மிக அற்புதமானது . . .
திருமலை மிக உயர்ந்தது . . .
திருமலை மிக விசேஷமானது . . .
திருமலை மிக ஆச்சரியமானது . . .


திருமலையில் இருக்கும் நேரம்,
நிச்சயம் வைகுண்டத்தில் வாழும் நேரமே. . .


நாங்கள் மலையேறி ப்ரபுவின்
பொன்னடியில் சரணாகதி செய்ய
ஆவலோடு வரிசையில் நின்றோம் . . .


பொதுவாக எல்லாவற்றிற்க்கும்,
 காத்திருக்கும் மக்கள் கூட்டம்,
கோயிலில் மட்டும் காத்திருக்க
பொறுமையோடு இருப்பதில்லை . . .


கோவிலில் எத்தனை நேரம்
காத்திருக்கிறோமோ அத்தனை
நேரம் நம் கர்ம வினை நம்மை
அணுகவே அணுகாது . . .


அதனால் எப்பொழுதும் கோயிலில்
நிறைய நேரம் காத்திருக்க,
தொடர்ந்து ப்ரார்த்தனை செய் . . .


நாங்களும் ஆனந்தமாக பொறுமையாக
ஆசையோடு காத்திருந்தோம் . . .
காத்திருக்க வைத்தான் ஸ்ரீநிவாஸன் . . .


அவன் மலையில் இருக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்,
வைகுண்ட வாசம் தானே . . .


பக்தர்கள் கூட்டத்தில் நாமும்,
அடியவரின் அடியவராக,
நிற்பதே பெரிய வரப்ரசாதம் . . .


கூடியிருந்து குளிர்ந்து என்று
ஆண்டாள் சொன்ன வாக்கியத்தின்
அர்த்தம் பக்த கூட்டத்தில் இடிபட்டுக்கொண்டு
பகவானுக்காக காத்திருத்தலே ஆகும் . . .


3 மணி நேரம் . . .180 நிமிஷங்கள் . . .
ஆஹா. . .இந்த சில மணி நேரங்கள் . . .
பணம் கொடுத்தாலும் கிடைக்காது . . .
பதவி இருந்தாலும் கிடைக்காது . . .
ராஜனாய் இருந்தாலும் நடக்காது . . .
எத்தனை படித்தாலும் கிடைக்காது . . .


வாழ்க்கையில் வைத்தியருக்காக
காத்திருந்தோம் . . .
இளவயதில் கல்யாணத்திற்க்காக
காத்திருந்தோம் . . .
ப்ரயாணம் செய்ய வண்டிக்காக
காத்திருந்தோம் . . ,
யாரோ வருவதற்காக கால்கடுக்க
காத்திருந்தோம் . . .
வெட்டியாய் பல விஷயங்களுக்காக
காத்திருந்தோம் . . .
 வங்கியில் நம் பணத்தை எடுக்க
காத்திருந்தோம் . . .
கல்யாண வீட்டில் சாப்பாட்டிற்க்காக
காத்திருந்தோம் . . .
தூங்குவதற்காக இரவு வர
காத்திருந்தோம் . . .
பல சமயங்களில் வேலைக்காரர்களுக்காக
காத்திருந்தோம் . . .
இன்னும் இது போல் பல காத்திருப்புகள் . . .


ஆனால் இவற்றினால் இதுவரை
ஆனந்தம் அடைந்ததேயில்லை . . .
ஆனந்தம் என்று மயங்கினோம் . . .


உண்மையில் ஆனந்தம் . . .
திருமலையில் ஸ்ரீநிவாஸனைக் காண
காத்திருப்பதேயாகும் . . .


வாழ்வில் எப்பொழுதோ நாம் சென்று
அவனைத் தொழ . . .அந்த நாளுக்காக,
அந்த சில மணித் துளிகளுக்காக...
ஸ்ரீநிவாஸனே நமக்காகவே 
காத்திருக்கும்போது ,
அல்ப மனிதக் கூட்டம்,
அழுக்குடம்பு,எச்சில்வாய்,அஹம்பாவிகள்
நாம் காத்திருக்கக்கூடாதே என்ன ?  ?  ?


ஸ்ரீநிவாஸன் எங்களுக்காக காத்திருக்கிறான்
என்ற சுகத்திலேயே மேனி சிலிர்க்க,
ஆனந்தத்தில் அவனுடைய வைபவத்தை
சத்சங்கமாய் அனுபவித்துக்கொண்டு,
நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க,
வரிசையும் நகர, ஸ்ரீநிவாஸனிடம்
கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டிருந்தோம் . . .


சிறிது சிறிதாக வரிசை நகர நகர,
பெரிய மலை போன்ற பாபங்கள்,
நெருப்பிலிட்ட பஞ்சாக எறிந்துபோக,
மனதில் சமாதானம் அதிகமாக,
வாயிலே நாமஜபம் திடமாக வந்தது . . .
 
தீபாவளி வந்துவிட்டது ...

முடிந்தவுடன் மீண்டும் திருமலை செல்வோம் . . .


Read more...

புதன், 27 அக்டோபர், 2010

திருமலை . . .

ராதேக்ருஷ்ணா

திருமலை !

எங்கள் ஸ்ரீநிவாஸன் வாழும் மலை !

அழகு வராஹமூர்த்தியின் சொந்த மலை !

அன்பு அலர்மேல்மங்காவின் லீலா மலை !

செடியாய வல்வினைகள்
தீர்க்கும் திருமாலின் திருமலை !  

ஸ்வாமி நம்மாழ்வார் மேனி
சிலிர்த்த உன்னத மலை !

குலசேகர ஆழ்வார் படியாய்
கிடந்து பவளவாய் காண 
ஆசைப்பட்ட மலை !

ஸ்ரீநிவாஸனின் தாயாராய்
யசோதாவும் வகுளமாலிகாவாக
கைங்கர்யம் செய்யும் மலை !

சகலவிதமான பாபங்களையும்
நாசம் செய்யும்
வேங்கடாத்ரி மலை !

பகவான் தங்குவதற்காக
ஆதிசேஷனும் தானே மலையான
சேஷாத்ரி மலை !

வேதங்கள் எல்லாம் மலையாய்
பகவானை ஸ்தோத்திரம் செய்யும்
வேதாத்ரி மலை !

திருமாலுக்காக கருடனும்
ஆசை ஆசையாய் தூங்கி வந்த
கருடாத்ரி மலை !

வ்ருஷபாத்ரனும் பெருமாளின்
அனுக்ரஹத்தில் மோக்ஷம் அடைந்த
வ்ருஷபாத்ரி மலை !

அஞ்சனாதேவியும் நல்ல புத்திரன்
வேண்டி தவமிருந்து ஆஞ்சனேயரைப் பெற்ற
அஞ்சனாத்ரி மலை !

ஆதிசேஷனும்,வாயு தேவனும்
பகவானின் அருளால் ஆனந்தமடைந்த
ஆனந்தாத்ரி மலை !


ரிஷிகளும்,ஞானிகளும்,
தேவர்களும் கைங்கர்யம் செய்யும் மலை ! 

 தொண்டைமான் சக்ரவர்த்தி
தொழுத புண்ணிய மலை ! 

பெரியதிருமலை நம்பிகள்
கைங்கர்யம் செய்த மலை ! 

காரேய் கருணை இராமானுஜன்
முட்டிக்கால்போட்டு ஏறின மலை !

இன்னும் மலை ஏறவில்லை . . .




அன்னமாச்சார்யாரும் விதவிதமாய்
பாடிப் பரவசப்பட்ட மலை !


புரந்தரதாசரும் தன்னை மறந்து
கதறி அழுது ஆனந்தப்பட்ட மலை !


 பலராமரும்,விதுரரும் தீர்த்தயாத்ரையாக
வந்து தவமிருந்து மெய்சிலிர்த்த மலை !


அனந்தாழ்வான் தனது கடப்பாறையினால்
ஸ்ரீநிவாஸனின் முகத்தை பதம்பார்த்த மலை !


அனந்தாழ்வானின் மனைவி நிறைமாத
கர்ப்பிணியாய் கைங்கர்யம் செய்ய ஏறின மலை !


நிகமாந்த மஹா தேசிகரும்
கண்ணன் அடியினை காட்டும்
என்று பாசுரமிட்ட ஏழுமலை !


ஹாதிராம் பாவாஜீயும் ஸ்ரீநிவாஸனோடு
சொக்கட்டான் ஆடின அற்புத மலை ! 


வானவரும்,மன்னவரும்,இல்லாதவரும்,
குழந்தைகளும்,முதியோர்களும்,ஆடவரும்,
பெண்டிரும்,பக்தரும்,மற்றவரும்
ஏறும் உன்னத மலை . . .


திருவேங்கடமாமலை ஒன்றுமே
தொழ நம் வினை ஓயுமே . . .


எங்களையும் ஸ்ரீநிவாஸன்
தொழவைத்தார் . . .
இன்னும் நம்பமுடியவில்லை . . .
திருமலை சென்றோம் . . .
திருமலையில் ஏறினோம் . . .
திருமலையில் இருந்தோம் . . . 
  
தொழுதோம் . . .தொழுதோம் . . . தொழுதோம் . . .
ஏழுமலையையும் தொழுதோம் . . .
ஏழுமலையானையும் தொழுதோம் . . . 


ஸ்ரீநிவாஸா ! கோவிந்தா !
ஸ்ரீவேங்கடேசா ! கோவிந்தா !


 இன்னும் முடியவில்லை . . .
திருமலை அனுபவங்களை
நான் சொல்லி முடியவில்லை . . .


ஆனால் அதற்கு அடுத்த
ஆனந்தவேதம் வரை காத்திரு . . .
அதுவரை
கோவிந்தா கோவிந்தா
என்று அழைத்துக்கொண்டேயிரு . . .

Read more...

வெள்ளி, 22 அக்டோபர், 2010

ராச பௌர்ணமி !

ராதேக்ருஷ்ணா



பௌர்ணமி . . .

முழுமதி அழகானது . . .

எல்லோரையும் மயக்குவது . . .

மனதை இதமாக வருடுவது . . .

ஜீவராசிகளுக்கு போகம் தருவது . . .

கவிஞனும் ரசிப்பது . . .

நாஸ்தீகனும் அனுபவிப்பது . . .

விஞ்ஞானியும் காண்பது . . .

மெய்ஞானியையும் வசீகரிப்பது . . .

மாதம் ஒரு பௌர்ணமி . . .

இருப்பினும் அழகானது . . .

ஆயினும் சரத்கால பௌர்ணமி
 மிக மிக விசேஷமானது . . .

இந்த பௌர்ணமியில்தான்
இரவு ஆரம்பிக்கும் சமயத்தில்
நம் கண்ணன் ப்ருந்தாவனத்தில்
எல்லாவித அலங்காரங்களுடனும்
குழலூதினது . . .


இந்த சரத்கால பௌர்ணமிக்காகவே
கோபிகைகள் மார்கழி மாதத்தில்,
காத்யாயனி விரதம் இருந்தது . . .

இந்த ரசமயமான பௌர்ணமியில்
கண்ணன் ப்ருந்தாவனத்தில் நுழைய
சந்திரனும் அவன் திருவடிகளில்
சரணாகதி செய்தது . . .

இந்த முத்துபோன்ற பௌர்ணமியில்
க்ருஷ்ணன் கோபிகைகளை
மயக்க ஆனந்தமாக குழலூதினது . . .


இந்த லீலா பௌர்ணமியில் தான்
உள்ளம் கவர் காதலன் கண்ணனின்
குழலோசையில் ராதையும் தன்னை
மறந்து,அவனிடம் தன்னை அர்ப்பித்தது . . .



இந்த புண்ணிய பௌர்ணமியில்தான்
கோபிகைகளும் தங்களின் வீடு வாசலைத் துறந்து,பந்துக்களையும் உதறித்தள்ளி,ஆனந்தத்தில்
இரவில் ப்ருந்தாவனத்தில் நுழைந்தது . . .


இந்த அற்புத பௌர்ணமியில்தான்
கோபிகைகளோடு,ராதிகாவும் கண்ணனும்
ராச லீலா ஆட முடிவுசெய்தது . . .


இந்த அம்ருத பௌர்ணமியில்தான்
க்ருஷ்ணன் கோபிகைகளோடு,
யமுனையில் ஆனந்தமாகக் குளித்து,
குள்ளக்குளிர ஜலக்ரீடை செய்தது . . .




இந்த ப்ரேம பௌர்ணமியில்தான்
கோபிகைகள் கண்ணனை அகம்பாவத்தினால்
இழந்துவிட்டு,ப்ருந்தாவனத்தில்
பரிதவித்தது . . .




இந்த விரஹ பௌர்ணமியில்தான்
கோபிகைகள் ராதிகாவின் திருவடிகளில்
சரணாகதி செய்தது . . .




இந்த ப்ருந்தாவன பௌர்ணமியில்தான்
ராதிகா க்ருஷ்ணனை விட்டு,
கோபிகைகளோடு சேர்ந்துகொண்டு,
அழகாக கோபிகாகீதம் பாடினது . . .


இந்த ஆனந்த பௌர்ணமியில்தான்
கோபிகைகளின் பக்தியும்,ராதையின்
க்ருஷ்ண ப்ரேமையும் தேவர்களையும்,
உலகையும் வசப்படுத்தியது . . .


இந்த க்ருஷ்ணலீலா பௌர்ணமியில்தான்
அழகன் கண்ணன் கோபிகைகளின்
ப்ரேமைக்கு தன்னையே கொடுத்தது . . .




இந்த நர்த்தன பௌர்ணமியில்தான்
ஒவ்வொரு கோபிக்கும் ஒரு க்ருஷ்ணனாக,
கண்ணன் பல கண்ணனாக அவதாரம்
எடுத்து அவர்கள் இஷ்டப்படி ஆடினது . . .


இந்த புண்ணிய பௌர்ணமியில்தான்
கண்ணன் ராதையிடம் தன்னையே
பூரணமாக சமர்ப்பித்தது . . .


இந்த பிடிவாத பௌர்ணமியில்தான் ராதிகாவின்
அழகிற்கும்,கடைக்கண் பார்வைக்கும்,
கண்ணன் தானே தோற்றது . . .

இந்த ரஹஸ்ய பௌர்ணமியில்தான்
கண்ணன் கோபிகைகள் வேஷமிட்டு,
கோபர்களுடன் அவர்கள் வீட்டிலிருந்தது . . .

இன்னும் எத்தனையோ உள்ளது . . .

அவையெல்லாம் பரம ரஹஸ்யம் . . .

உன்னதமான ப்ரேம பக்தி உள்ளவரே
அதற்கு அதிகாரிகள் . . .

உனக்கு அந்த அருகதை வர
விடாது இந்த பக்தி பௌர்ணமியிலிருந்து
ப்ரேம நாமமான "ராதேக்ருஷ்ணா"வை
அள்ளி அள்ளிப் பருகு . . .

அப்படியே செய்து வர
நிச்சயம் ஒரு நாள்,
ஒரு சரத் கால பௌர்ணமியில்,
நீயும்,நானும்,க்ருஷ்ணனும்,ராதையும்,
கோபிகைகளும்
ப்ருந்தாவனத்தில் ராசம் ஆடுவோம் . . .

ராச பௌர்ணமியே உனக்கு நமஸ்காரம் . . .

சரத் பௌர்ணமியே எங்களுக்கு 
ப்ரேம பிச்சையிடு . . .

ஜெய் ஸ்ரீ ராச பூர்ணிமா . . .
ஜெய் ஸ்ரீ ப்ருந்தாவன் பூமிக்கு . . .
ஜெய் ஸ்ரீ கோபிகா ஸ்த்ரீகளுக்கு . . .
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ண சந்த்ரனுக்கு . . .
ஜெய் ஸ்ரீ ராதிகா ராணிக்கு . . .
ஜெய் ஸ்ரீ ராசலீலாவுக்கு . . .

ராதே . . . ராதே . . .
க்ருஷ்ணாராதே . . .

க்ருஷ்ணா. . .க்ருஷ்ணா . . .
ராதேக்ருஷ்ணா . . .


Read more...

புதன், 20 அக்டோபர், 2010

பேச்சு . . .



ராதேக்ருஷ்ணா

பேச்சு . . .

வாய் ஓயாமல் பேச்சு . . .

சம்மந்தமில்லாமல் பேச்சு . . .

சம்மந்தமில்லாதவர்களைப் பற்றி பேச்சு . . .

பைத்தியக்காரத்தனமான பேச்சு . . .

எதைப்பற்றியாவது பேச்சு . . .

ஆனால் என்ன ப்ரயோஜனம் ?

யாரையாவது பற்றி உனக்கு
என்ன பேச்சு ?

உன் வாழ்க்கைக்கு வழி என்ன
என்பதை க்ருஷ்ணனுடன் பேசாமல்
மற்றவரைப் பற்றி என்ன பேச்சு ?

நீ எதைப்பற்றியோ பேசி
என்ன சாதித்தாய் ?

இன்னும் நிறைய உன்
குற்றங்களை களையவேண்டும் . . .
மீண்டும் வருவேன் . . .


பேசுவது குற்றமல்ல . . .
அனாவசியமான பேச்சு குற்றமே . . .
இதில் சந்தேகமில்லை . . .


எவனோ,எவளோடு ஓடிப்போனால்,
அதைப்பற்றி பேச
உனக்கு என்ன அவசியம் ?
நீ ஒழுங்காக வாழ வழி தேடு . . .


ஒரு திரைப்படம் கேவலமாக
இருந்தாலோ,அதை மற்றவர்
ரசித்தாலோ, அதைப்பற்றி பேசி
உனக்கு என்ன கிடைத்தது ?
உன் வாழ்க்கை திரைப்படமல்ல . . .


உருப்படாதவர்கள் என்று சிலர்
சிலரைச் சொல்ல,அதை ஆமோதித்தோ,
எதிராகவோ நீ பேச யார்
உனக்கு அனுமதி தந்தது ?
நீ உருப்படும் வழியைப்பார் . . .


பேச்சை குறை . . .
செயலில் இறங்கு . . .
வாழ்க்கை கை நழுவி ஓடிக்கொண்டிருக்கிறது . . .
ஜாக்கிரதை . . .


இன்னும் சொல்லுவேன் . . .


யாருடைய வீட்டில் எது
நடந்தால் உனக்கென்ன ?
முடிந்தால் உதவி செய் . . .
இல்லையேல் உன் வாயை மூடிக்கொள் !


சொந்தக்காரர்கள் யாரோடும்
எப்படிப் பேசினால் என்ன ?
நீ முடிந்தவரை யாரைப்பற்றியும் குறை கூறாதே !


விளையாட்டில், யார் தோற்றாலென்ன?
யார் ஜெயித்தாலென்ன?
அதைப் பற்றிப் பேசி
உனக்கு என்ன ப்ரயோஜனம் ?
நீ வாழ்வில் தோற்றுவிடாதே . . .


யாரோ ஒருவர் ஆடம்பர
செலவு செய்ய,அதைப் பற்றி
நீ பேசி என்னவாகப்போகிறது ?
நீ ஆடம்பர செலவு செய்யாதே . . .


நல்லதே பேசு . . .
நல்லவரைப் பற்றியே பேசு . . .
நன்மையே பேசு . . .
நாகரீகமாகப் பேசு . . .
நயமாகப் பேசு . . .
நாணயத்தோடு பேசு . . .
மரியாதையாகப் பேசு . . .
புன்முறுவலோடு பேசு . . .
அர்த்தத்தோடு பேசு . . .
அமைதியாகப் பேசு . . .
அன்போடு பேசு . . .
அழகாகப் பேசு . . .
சிரத்தையோடு பேசு . . .
நம்பிக்கையோடு பேசு . . .
நம்பிக்கை வரும்படி பேசு . . .
நிதானமாகப் பேசு . . .
புரியும்படியாகப் பேசு . . .
புரிந்துகொண்டு பேசு . . .
உள்ளதைப் பேசு . . .
உண்மையைப் பேசு . . .
உறுதியோடு பேசு . . .
உயர்வானதைப் பேசு . . .
உறுப்படியாய் பேசு . . .
உணர்ந்து பேசு . . .
ஒழுங்காகப் பேசு . . .
சுறுங்கப் பேசு . . .
சுறுசுறுப்பாய் பேசு . . .
சுயசிந்தனையோடு பேசு . . .
மரியாதையாய் பேசு . . .
மனதோடு பேசு . . .
மகிழ்ச்சியாய் பேசு . . .
பண்போடு பேசு . . .
பார்த்துப் பேசு . . .
பணிவோடு பேசு . . .
பாங்காய் பேசு . . .
பக்குவமாய் பேசு . . .
வரம்போடு பேசு . . .
அளந்து பேசு . . .
தைரியமாகப் பேசு . . .
தன்னம்பிக்கையோடு பேசு . . .
பொறுமையோடு பேசு . . .
பொறுப்போடு பேசு . . .
தெளிவாகப் பேசு . . .
தெரிந்ததைப் பேசு . . .
தெரிந்தவரை பேசு . . .
தன்மையோடு பேசு . . .
அறிவோடு பேசு . . .
ஆணித்தரமாய் பேசு . . .
நயமாய் பேசு . . .


வம்பு பேசாதே . . .
வெட்டியாய் பேசாதே . . .
வெறுப்பாய் பேசாதே . . .
வெறுப்பேற பேசாதே . . .
மட்டமாய் பேசாதே . . .
தெரியாததைப் பேசாதே . . .
ஆணவமாய் பேசாதே . . .
கோபமாய் பேசாதே . . .
கேவலமாய் பேசாதே . . .
கெட்டதைப் பேசாதே . . .
கெடுதலாய் பேசாதே . . .
கேலியாய் பேசாதே . . .
அவசரமாய் பேசாதே . . .
சம்மந்தமில்லாமல் பேசாதே . . .
புரியாமல் பேசாதே . . .
முட்டாள்தனமாய் பேசாதே . . .
முந்திரிகொட்டையாய் பேசாதே . . .
முடியாததைப் பேசாதே . . .
பைத்தியக்காரத்தனமாய் பேசாதே . . .
பிடிவாதமாய் பேசாதே . . .
பண்பில்லாமல் பேசாதே . . .
அநாகரீகமாய் பேசாதே . . .
அவசரப்பட்டு பேசாதே . . .
அடாவடியாய் பேசாதே . . .
நயவஞ்சகமாய் பேசாதே . . .
அர்த்தமில்லாமல் பேசாதே . . .
அசட்டுத்தனமாய் பேசாதே . . .
ஆதாரமில்லாமல் பேசாதே . . .
அதட்டிப் பேசாதே . . .
ஆபாசமாய் பேசாதே . . .
பொய்யாய் பேசாதே . . .
பொய் பேசாதே . . .
பொறுப்பில்லாமல் பேசாதே . . .
பொறாமையில் பேசாதே . . .
பொறாமையோடு பேசாதே . . .
அறுவறுப்பாய் பேசாதே . . .




உன் பேச்சு உன்னை ப்ரதிபலிக்கும் !
சொல்லாத வார்த்தைக்கு நீ எஜமான் !
சொன்ன வார்த்தை உனக்கு எஜமான் !
உன் பேச்சு உன்னை மாட்டிவிடும் . . .
உன் பேச்சு உன்னைக் காப்பாற்றும் . . .
உன் பேச்சு உனக்கு பகையுண்டாக்கும் . . .
உன் பேச்சு உனக்கு நண்பரைத் தரும் . . .
உன் பேச்சு உனக்கு பொல்லாப்பைத் தரும் . . .
உன் பேச்சு உனக்கு மரியாதையைத் தரும் . . .
உன் பேச்சு உன் வாழ்வை நாசமாக்கும் . . .
உன் பேச்சு உன் வாழ்வை வளமாக்கும் . . .
உன் பேச்சு உன்னை அழிக்கும் . . .
உன் பேச்சு உன்னை வாழவைக்கும் . . .
உன் பேச்சு உனக்கு துக்கத்தைத் தரும் . . .
உன் பேச்சு உனக்கு ஆனந்தத்தைத் தரும் . . .
உன் பேச்சு உறவை அறுக்கும் . . .
உன் பேச்சு உறவை பலப்படுத்தும் . . .
உன் பேச்சு சண்டையை வரவழைக்கும் . . .
உன் பேச்சு சமாதானம் செய்யும். . .


புரிந்து கொள் . . .
உன் வாயிலிருந்து வரும்
ஒவ்வொரு வார்த்தையும் ஒரு அஸ்திரம் . . .
உன் வாயிலிருந்து வரும்
ஒவ்வொரு வார்த்தையும் வாழ்வையே மாற்றும் !
உன் வார்த்தை,உன் பேச்சு 
உன் எண்ணங்களின் ப்ரதிபலிப்பு




வாயைத் திறக்குமுன் யோசி . . .
வாழ்க்கை முடியும் முன்பு,
வாழ்வை மாற்றிக்கொள் . . .
இல்லையில்லை . . .
வார்த்தையை மாற்றிக்கொள் . . .


வார்த்தையே வாழ்க்கை . . .
பேச்சே வாழ்விற்கு எமன் . . .
பேச்சே வாழ்வின் பலம் . . .


தவளை போல் தன் வாயால்
கெடுவதும்,
குயிலைப் போல் தன் வாயால்
இனிமையாயிருப்பதும்,
சிங்கம் போல் தன் வாயால்
பயமுறுத்துவதும்,
தெருநாய் போல் தன் வாயால்
அடிபடுவதும்,
இனி உன் பொறுப்பு . . .


தூங்கும்போது பேசாதிருப்பதால்
பலம் கூடுகிறது . . .
விழித்திருக்கும்போதோ
பேசிக்கொண்டேயிருப்பதால்
பலம் குறைகிறது . . .


இனி பேசுவதும்,
ஒழுங்காய் பேசுவதும்,
உளறிக்கொட்டுவதும்,
உன் வாயைப் பொறுத்த விஷயம் . . .




  

Read more...

செவ்வாய், 19 அக்டோபர், 2010

முதியோர்கள் . . .

ராதேக்ருஷ்ணா

முதியோர்கள் . . .
பாவப்பட்ட மனிதர்கள் . . .
அன்பிற்காக ஏங்கும் அனாதைகள் . . .
களைத்துப்போன பலமான அன்பர்கள் . . .
ஆசீர்வாதம் தரும் ஆதரவற்றவர்கள் . . .

ஆச்சர்யமான நறுமணம் தந்து,

இன்று நறுமணத்தை இழந்து,
வாடிக்கொண்டிருக்கும் அழகான மலர்கள் . . .


எல்லோரையும் வாழவைக்க,தன்னை
பலவிதமாய் உபயோகப்படுத்த அனுமதித்துவிட்டு 
இன்று விழுவதற்காகக் காத்திருக்கும் கட்டிடங்கள் . . .


அற்புதமான நெல்லையும்,நவ தானியங்களையும்
மூன்று போகம் விளைவித்து,அறுவடை முடிந்து
இன்று யாரும் கவனிக்காத தரிசான வயல்கள் . . .


ஓடி ஓடி உழைத்து எல்லாவற்றையும்
எல்லோருக்கும் தந்துவிட்டு,
இன்று ஓரத்தில் கிடக்கும் அடிமாடுகள் . . .

பலவிதமாய் சமைத்து பல வருஷங்கள்
 உபயோகமான,இன்று வீசியெறியப்பட்ட
நசுங்கிப்போனப் பாத்திரங்கள் . . .
  
இளமையில் தன் குடும்பத்திற்கு 
நிழலும் தந்து,பசிக்கு உணவும் தந்து,
இன்று வறட்சியாய் வெயிலில் காயும் மரங்கள் . . .

குழந்தைகளுக்காக அன்பை மழையாய்
பொழிந்து,இன்று தண்ணீருக்காக
ஏங்கும் பாவப்பட்ட மேகங்கள் . . .

அவரவர் ஆசைப்பட்டு தன் இஷ்டப்படி
பலவிதமாய் எழுதிவிட்டு,இன்று
கசக்கி எறியப்பட்ட காகிதங்கள் . . .

உறவினர்கள் தங்கள் ஆசைகளையெல்லாம் சாயமாய் ஏற்றிவிட்டு,ஆசை தீர உடுத்தித் தூரஎறிந்த நஞ்சுப்போன கிழிந்துகொண்டிருக்கும் பழைய விலைமதிப்பற்ற துணிகள் . . . 

தங்கள் குழந்தைகளின் எல்லா சுமைகளையும்,
சுகமாக சுமந்து,இன்று அவர்களுக்கு
சுமையாய் தெரியும் சுமைதாங்கிகள் . . .


வாரிசுகளை மார்பிலும்,தோளிலும்
தூக்கி தங்கள் தூக்கத்தை இழந்து,
இன்று சாயத் தோளில்லாது ஏங்கும்
தூங்காத வயதான குழந்தைகள் . . .


சம்பாதித்த காலத்தில்,உழைத்த நேரத்தில்
அனைவருக்கும் சோலையாய் தெரிந்து,
இன்று காய்ந்துகிடக்கும் வறண்ட
நீரில்லாத கேட்பாரற்ற பாலைவனங்கள் . . .



இன்னும் புலம்பவேண்டும்...
கனத்த நெஞ்சுடன் காத்திரு . . .

கனத்த நெஞ்சு இருப்பதால் தானே
முதியோரை இப்படி விட்டுவிட்டோம் ! ?

அவர்களின் வலி ஒரு நாள்,
நம்முடைய முதுமையில் சத்தியமாக
நமக்கும் புரியும் . . .

நாளும்,கிழமையும் பார்த்து,
தங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை
கொண்டு,இன்று அவர்களால்
பழைய பஞ்சாங்கம் என்று
பரிகசிக்கப்படும் வாயில்லா பூச்சிகள் . . .

உடலில் பலமிருக்கும் போது,
பிள்ளைகளின் வாழ்வில் அக்கறை கொண்டு,
இன்று பலவீனமாகி நிகழ்காலத்தில்
அக்கறையைத் தேடும் ஆதரவற்றவர்கள். . .

குழந்தைகள் தனிமையில் வாடக்கூடாது என்று அதற்காக தங்கள் வாழ்வைத் தொலைத்து,
இன்று தனிமையில் வாடும் அப்பாவிகள் . . .

சொத்தையும்,பலத்தையும்,புத்தியையும்
தந்து பிள்ளைகளுக்கு அன்று ஆலமரமாய்,
இன்றோ ஊன்று கோலே துணையாய் வாழும்,
வாழ்வே சுமையான நடைப்பிணங்கள் !

வாரிசுகளையும் வளர்த்து,வாரிசுகளின்
வாரிசுகளையும் வளர்த்துக்கொண்டு,
தன் வாழ்வை மறந்த பாசக்கைதிகள் !

குழந்தைகளின் இளவயதிலும் அவர்கள்
தேவைகளை கவனித்துக்கொண்டு,
அவர்கள் வாழ்வை தானே கவனித்துக்
கொள்ளும் வயதிலும் அவர்களின்
தேவையே வாழ்வாய் இருக்கும் அடிமைகள் !

இன்னும் என்னவெல்லாம் நான் சொல்ல ?

ஐயோ . . .
இளவயதுக்காரர்களே . . .
உங்களை வாழவைத்த,வாழவைக்கும்,
வயதானவர்களையும் தயவுசெய்து
கொஞ்சம் சந்தோஷமாக வாழவிடுங்களேன் !

வயதானவர்களிடத்தில் உங்கள்
கோபத்தையும்,உதாசீணமான வார்த்தைகளையும்
நெருப்பாய் கொட்டாதீர்கள் . . .

வயதானவர்கள் வாழ்வதால் என்ன லாபம்
என்று தயவுசெய்து யோசித்து,
பாவத்தைச் சம்பாதிக்காதீர்கள் . . .

உங்கள் உடலைப் பாதுகாத்த
வயதானவர்களின் உடலுக்கு ஒரு
மரியாதை தாருங்கள்  . . .

உங்கள் நலனில் அக்கறை கொண்ட
வயதானவர்களின் நலனில் கொஞ்சம்
அக்கறை காட்டுங்கள் . . .

இன்னும் சில வருஷங்களில்
நிரந்தரமாக தூங்கி ஓய்வெடுக்கப்போகும்
வயதானவர்களிடம் கொஞ்சம்
கருணை காட்டுங்கள் . . .

100 பிள்ளைகளையும் யுத்தத்தில் இழந்த,
தனக்கு தீங்கு மட்டுமே செய்த தன் பெரியப்பா திருதராஷ்டிரனையே தர்மர் மிகவும்
ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டார் . . .

அந்தப் பூமியில் பிறந்த நாம்
முதியோரை அழ விடலாமா ?

இது நியாயமா ?
இது தர்மமா ?
இது தெய்வத்திற்கும் அடுக்குமா ?

இந்த பாவத்தை நாம்
எங்கே போய் தொலைப்போம் ?

சத்தியமாக தொலையாது . . .
இந்தப் பாவம் இனியும் தொடரக்கூடாது . . .

முதியோர்களை மதியுங்கள் . . .
முதியோர்களை நேசியுங்கள் . . .
முதியோர்களை அரவணையுங்கள் . . .
முதியோர்களை கொண்டாடுங்கள் . . .
முதியோர்களை ரசியுங்கள் . . .

முதியோரை இனியாவது
நிம்மதியாக வாழவிடுங்கள் . . .
முதியோரை இனியாவது
ஆனந்தமாக சாகவிடுங்கள் . . .
முதியோரை இனியாவது
சந்தோஷமாக வைத்திருங்கள் . . .

முதியோரை வெறுப்பவர்
அரக்கரே . . .
முதியோரை அவமதிப்பவர்
பாபியே . . .
முதியோரை அழவைப்பவர்
பேயே . . .
முதியோரை கவனிக்காதவர்
கிருமியே . . .

முதியோரை நேசிப்பவரே
தேவர் . . .
முதியோரை மதிப்பவரே
மனிதர் . . .
முதியோரை சிரிக்கவைப்பவரே
உத்தமர் . . .
முதியோரை கவனிப்பவரே
மனித தெய்வம் . . .


நீ யார் . . ?

Read more...

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

விஜய தசமி !

ராதேக்ருஷ்ணா

விஜயதசமி !

நிஜமாகவே அடியேனுக்கு
இன்று விஜயம் தந்த தசமி தான் !

அடியேனுக்கு இன்று
திவ்ய தேச விஜயம் தந்த தசமி தான் !

திருவை இடமாகக் கொண்ட எந்தையை
தரிசித்த விஜயமான தசமிதான் !

இன்று அடியேனை லக்ஷ்மிவராஹர்
ஆட்கொண்ட விஜயதசமி !

நித்யகல்யாண பெருமாள் இன்று
அடியேனை ஏற்றுக்கொண்ட கல்யாணதசமி !

ஸ்ரீலக்ஷ்மிவராஹஸ்வாமி,திருவிடவெந்தை 
Sri lakshmivaraha murthy of Thiruvidavendhai

பூமியைப் பிரளயத்திலிருந்து மீட்ட
ஆதிவராஹர் என்னையும் மீட்டார்  !

இரண்யாக்ஷணை வதம் செய்த
பூவராஹர் என் அஹம்பாவத்தையும் வதைத்தார் !

லக்ஷ்மியை இடது பக்கம் கொண்ட
என் லக்ஷ்மிவராஹர் என்னையும்
தன் அருகில் வைத்துக்கொண்டார் !

ஒரு கையால் தாயாரைப் பிடித்திருக்கும்
ஸ்ரீவராஹர் என்னையும் பிடித்துக்கொண்டார் !

ஸ்ரீ லக்ஷ்மிதேவிக்கு உபதேசித்த அழகுவராஹர்
எனக்கும் வாழ்வை உபதேசித்தார் !

ஒரு கையில் சங்கும்,ஒரு கையில் சக்கரமும்
கொண்ட கருப்பு வராஹர்,
என் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார் !

திருமங்கையாழ்வாரை விரஹதாபத்தில்
புலம்ப வைத்த நித்ய கல்யாண பெருமாள்,
இந்த கோபாலவல்லியையும் புலம்பவைத்தார் !

கடலோரத்தில் அமைதியாக தாயாரோடு,
ஏகாந்தமாக உபதேச நிலையிலிருக்கும்
அழகிய வராஹமூர்த்தி இந்தக் குழந்தையை
அன்போடு விஜயதசமியன்று தன்னுடைய
சன்னிதானத்தில் அழைத்து அனுக்ரஹித்தார் . . .

திருவிடவெந்தை பிரானே !
உன் சரணகமலங்களில் சரணடைகிறேன் !
உன் பூமியில் இந்த ஜந்துவும் பக்தி செய்து
வாழ ஆசீர்வாதம் செய்தாயே . . .
இந்தக் கருணைக்கு நான் என்ன தவம் செய்தேன் ?

உன் கருணைக்கு முன் நான் ஒன்றுமில்லை ! ! !

என்றும் இந்த கருணைக்கு அடியேன் அடிமை . . .



Read more...

வியாழன், 14 அக்டோபர், 2010

தூது செல் !

ராதேக்ருஷ்ணா

செல்லக்கிளியே !
என் நாச்சியார் ஆண்டாளிடத்தில்
தூதுசெல் . . .

அழகுக்கிளியே !
எங்கள் ராஜாத்தி ஆண்டாளிடம்,
எங்களுக்கு ப்ரேம நிதியை
தானம் தரச் சொல் . . .

பசுங்கிளியே !
எங்கள் சூடிக்கொடுத்த சுடர்கொடியிடம்,
எங்களுக்கு க்ருஷ்ண பக்தியை
ஊட்டச் சொல் . . .

தெய்வக்கிளியே !
எங்கள் ப்ரேம ஸ்வரூபிணி கோதையிடத்தில்
எங்களுக்கு அஹம்பாவமில்லாத
மனதை ஆசிர்வதிக்கச் சொல் . . .

தங்கக்கிளியே !
எங்கள் பெரியாழ்வார் பெண்பிள்ளையிடம்,
எங்களை அவள் தோழிகளாக்கி
விளையாடச் சொல் . . .

பாக்கியக்கிளியே !
எங்கள் வில்லிபுத்தூர் ராணி ஆண்டாளிடம்,
எங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வாழ்க்கை
அருளச் சொல் . . .

பச்சைக்கிளியே !
எங்கள் ராமானுஜரின் தங்கையிடம்,
ரங்கமன்னாரிடம் மோக்ஷத்திற்கு
சிபாரிசு செய்யச் சொல் . . .

பைங்கிளியே !
எங்கள் திருப்பாவை பாடிய செல்வியிடம்,
அவளின் கோயிலில் ஒரு கைங்கர்யம்
தரச்சொல் . . .

பட்டுக்கிளியே !
எங்கள் ஞான ஸ்வரூபிணி கோதாவிடம்,
எங்களை ப்ருந்தாவனத்திற்கு
அழைத்துப் போகச்சொல் . . .

காதல்கிளியே !
எங்கள் பட்டர்பிரான் கோதையிடம்,
எங்கள் அறிவை அழித்து, எங்களுக்கு
அறிவொன்றில்லாத ஆயர்குலத்தில்
வாழ அதிகாரம் தரச்சொல் . . .

சமத்துக்கிளியே !


காத்திரு  . . .

கோமளக்கிளியே !
143 திருமொழியாக தன் ப்ரேமையைச்
சொன்ன க்ருஷ்ணனின் காதலியிடம்,
எங்களை அவளின் அடிமையாக்கி
வாழவைக்கச் சொல் . . . 

சமத்துக்கிளியே !
உன்னைப்போல் நாங்களும்
திருப்பாவை பாடிய செல்வியின்
திருக்கைகளில் வாழ ஒரு வரம் தரச் சொல் . . .

ஹே ஆண்டாளின் கிளியே !
உன்னை தூது போகச் சொல்ல
எங்களுக்கு ஒரு அதிகாரம் இல்லை . . .
நாங்கள் அதற்கு தகுதியானவர்களுமில்லை . . .
ஏதோ ஆசையில் உளறிவிட்டோம் . . .
மன்னித்துவிடு . . .

நீ எங்களுக்கு ஆசிர்வாதம் செய் !
நீ எங்களுக்காக ஆண்டாளிடம் சிபாரிசு செய் !
நீ எங்களை ஆண்டாளின் திருவடிகளில் சேர்த்துவிடு !

தெய்வக்கிளியே ! 
உனக்கு அடியோங்களின்
கோடி கோடி வந்தனம்  . . . 




   

Read more...

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

சரணாகதி !

ராதேக்ருஷ்ணா

கதி இல்லாதவர்களுக்கு
ஒரே கதி
சரணாகதி . . .

உலகில் மிகச் சுலபமான
ஒரு வழி
சரணாகதி . . .

எல்லோராலும் செய்ய முடிந்த 
ஒரு உபாயம்
சரணாகதி . . .

எந்த இடத்திலும், எந்த சமயத்திலும்
நிச்சயம் பலன் தரும்
சரணாகதி . . .

நிச்சயம் எல்லா விஷயங்களிலும்
நன்மை மட்டுமே செய்யும்
பலமுடையது சரணாகதி . . .

எனக்கு ஒன்றும் தெரியாது
என்று பகவான் க்ருஷ்ணனிடம்
ஒத்துக்கொள்வதே சரணாகதி . . .

உன்னை பரிபூரணமாக
நம்புகிறேன் என்று பகவான் க்ருஷ்ணனிடம்
நம்மை ஒப்படைப்பதே
சரணாகதி . . .

இன்னும் தெளிவாகச் சொல்லுவேன் . . .
காத்திரு . . .

ஒரு குழந்தை தன்னை எப்படி
பூரணமாகத் தாயினிடத்தில் ஒப்படைக்குமோ
அது போலே பகவான் க்ருஷ்ணனிடத்தில்
உன்னை ஒப்படைப்பதே
சரணாகதி !

ஒரு பதிவிரதை எப்படி தன்னுடைய
எல்லா தேவைகளுக்கும் தன் கணவனையே
சார்ந்திருப்பாளோ அதுபோலே
பகவான் க்ருஷ்ணனை மட்டுமே
எல்லாவற்றிற்கும் சார்ந்திருத்தலே
சரணாகதி !

எப்படி ஒரு நாற்காலியில்
உட்காரும்போது அதை திடமாக
நம்புகிறோமோ அதுபோலே,
க்ருஷ்ணனை திடமாக நம்புவதே
சரணாகதி !

உலகில் நீ எத்தனை நம்பிக்கை,
யார்யாரிடம் வைக்கிறாயோ,
அதையெல்லாம் சேர்த்து,
அதைவிட பலமடங்கு ஸ்ரீக்ருஷ்ணனிடம்
நம்பிக்கை வைப்பதே
சரணாகதி !

எதைப்பற்றியும் கவலைப்படாமல்
இருக்கவே சரணாகதி !

எதிர்கால கவலையில்லாமல்
வாழவே சரணாகதி !

பூர்வ ஜன்ம கர்மவினையை
நினைத்துப் பயப்படாமல்
வாழவே சரணாகதி !

மனதில் ஒரு பாரமில்லாமல்,
எப்பொழுதும் ஆனந்தமாக
இருப்பதற்கே சரணாகதி !

பால்ய வயதில் எப்படி
எந்த ஒரு கவலையுமில்லாமல்
வாழ்ந்தோமோ அதுபோலே
எப்பொழுதும் இருக்கவே
சரணாகதி !

நமக்கு க்ருஷ்ணனைத் தவிர
வேறு யாரும் நெருங்கிய பந்துயில்லை
என்பதை உணர்ந்து,
அவனிடம் நம் வாழ்க்கையின்
பொறுப்பைக் கொடுப்பதே
சரணாகதி !

எது நடந்தாலும்,எது வந்தாலும்,
எல்லாம் என் க்ருஷ்ணனுக்குத் தெரியும்;
அவன் என்னை நிச்சயம் காப்பாற்றுவான்;
எதற்காகவும் என்னைக் கைவிடமாட்டான்
என்று மனதில் விசுவாசம் கொள்வதே
சரணாகதி !

என் வாழ்க்கையைப் பற்றி
எனக்கு ஒரு குழப்பமில்லை !
எனக்கு ஒரு கவலையில்லை !
எனக்கு ஒரு சிந்தனையில்லை !
எனக்கு ஒரு பயமுமில்லை !
என்று ஸ்ரீஹரியான க்ருஷ்ணனை
நம்முடைய நலம்விரும்பியாக
ஏற்றுக்கொள்வதே சரணாகதி !

ஒரு சட்டையோ,கைகடிகாரமோ,
செருப்போ அல்லது வேறு ஏதேனும்
நம்முடைய பொருளோ, தனக்கென்று
ஒரு இஷ்டத்தை வைத்துக்கொள்ளாமல்,
எஜமானனின் இஷ்டப்படி இருப்பதுபோல்,
நாமும் நம் எஜமானாக க்ருஷ்ணனை ஏற்று,
அவனிஷ்டப்படி இருப்பதே சரணாகதி !




சரணாகதி செய்து பார் . . .
உன் வாழ்க்கை ஸ்வாரஸ்யமாகயிருக்கும் !
உன் வாழ்க்கை நிம்மதியாயிருக்கும் !
உன் வாழ்க்கை பத்திரமாயிருக்கும் !
உன் வாழ்க்கை குதூகலமாயிருக்கும் !
உன் வாழ்க்கை உனக்குப் பிடிக்கும் !
உன் க்ருஷ்ணனிடம் மட்டும் சரணாகதி செய் !
 வேறு எவரிடம் செய்தாலும் வம்புதான்  . . .




Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP