ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 ஆகஸ்ட், 2010

நான் பரிசுத்தமானேன் . . .

ராதேக்ருஷ்ணா

ஸ்ரீ ரங்கா . . .
ஸ்ரீ ரங்கநாதா . . .
ஸ்ரீ ரங்கராஜா . . .
பெரிய பெருமாளே . . .
நம் பெருமாளே . . .
ஆபரணத்திற்கு அழகு
சேர்க்கும் பெருமாளே . . .
பதின்மர் பாடிய அழகா . . .
   

பூலோக வைகுண்டமான 
ஸ்ரீ ரங்கம் வாழ்க . . .

என் அரங்கத்து இன்னமுதர் 
ஸ்ரீ ரங்கநாதன் வாழ்க . . .

படிதாண்டா பத்தினி,புருஷ கார பூதை 
ஸ்ரீ ரங்கநாயகி வாழ்க . . .

தானான திருமேனி,உடையவர், 
ஸ்ரீ யதிராஜன் வாழ்க . . .

பெரிய பெருமாளின்,பெரிய திருவடி 
ஸ்ரீ கருடாழ்வார் வாழ்க . . .

கம்பனின் ராமாயணத்தை ஏற்ற 
ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் வாழ்க . . .

பக்தர்களை வசீகரிக்கும் 
 ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வாழ்க . . .

ஜனங்களின் வியாதிகளைத் தீர்க்கும்
ஸ்ரீ தன்வந்திரி வாழ்க . . .

அமைதியாய் அனுக்ரஹிக்கும்
அம்ருத கலச கருடன் வாழ்க . . .

விஸ்வரூப தரிசனத்திற்கு,
ஸ்ரீ ரங்கராஜன் தரிசிக்கும் கோமாதா வாழ்க . . .

 காலையில் ஸ்ரீ ரங்கராஜனை எழுப்ப
வீணைவாசிப்பவர் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜன் என்னும் யானையின்
செல்ல யானை வாழ்க . . .

ஸ்ரீ ரங்க விமானத்தில் வாசம் செய்யும்
பரவாசுதேவர் வாழ்க . . .

தினமும் ஸ்ரீ ரங்கராஜனுக்கு பூஜைகள்
செய்யும் பட்டர்கள் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனின் கோயிலின்
கைங்கர்ய பரர்கள் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனின் திருக்கோயிலின்
வாயில் காப்போர்கள் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனின் திருமாளிகையை
சுத்தம்செய்யும் பாக்கியவதிகள் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனே கதி என்றிருக்கும்
பக்தகோடிகள் வாழ்க . . .

ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளோடு
விளையாடும் காவிரித்தாய் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனுக்காக அழுத
ஸ்வாமி நம்மாழ்வார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனுக்கு மாமனரான
ஸ்ரீ பெரியாழ்வார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனோடு ஐக்கியமான
திருப்பாணாழ்வார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனுக்கு மதில் கைங்கர்யம்
செய்த திருமங்கையாழ்வார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனே என் தெய்வம் என்ற
தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனுக்காக ராஜ்ஜியத்தையும் துறந்த
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனிடத்தில் மனதைக் கொடுத்த
முதலாழ்வார்கள் மூவரும் வாழ்க . . .

இவளை நான் கரம் பிடிக்கப் போகிறேன்
என்று ஸ்ரீ ரங்கராஜனையே சொல்ல வைத்த
எங்கள் ராஜாத்தி ஆண்டாள் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனை முகம்மதிய வழக்கப்படி
லுங்கி (சாரம்) அணிய வைக்கும்
அழகு துலுக்க நாச்சியார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனை தன் கணவனாக
வரித்த குலசேகரவல்லி வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனுக்குப் புஷ்பங்கள் தரும்
திருநந்தவனம் வாழ்க . . .


ஸ்ரீரங்கராஜனின் செல்லக் குளியல் தொட்டி
சந்திர புஷ்கரினி வாழ்க . . .


ஸ்ரீ ரங்கராஜனின் கோயிலில் வசிக்கும்
குரங்கினமும்,புறாக்களும்,கிளிகளும்,
குயில்களும்,பூனைகளும்,
மற்ற ஜந்துக்களும் வாழ்க . . .


ஸ்ரீ ரங்கராஜனின் ஸ்ரீ ரங்க வீதிகளில்
வசிக்கும் பாக்கியவான்கள் வாழ்க . . .


ஸ்ரீ ரங்கம் வாழ்க . . .
என் மணிவண்ணன் ஸ்ரீ ரங்கன் வாழ்க  . . .


பல்லாயிரம், பல்லாயிரம்,
பலகோடி நூறாயிரம் ஆண்டுகள்
வாழ்க . . . வாழ்க . . , வாழ்க . . .


ஸ்ரீ ரங்க ஐஸ்வர்யத்திற்கு
திருக்காப்பு . . .


ஸ்ரீ ரங்கராஜனுக்கு திருக்காப்பு . . .
ஸ்ரீ ரங்கநாயகிக்கு திருக்காப்பு . . .
ஸ்ரீ யதிராஜனுக்கு திருக்காப்பு . . .


ஹே ரங்கா . . .ஸ்ரீ ரங்கா . . . ரங்க ரங்கா  . . .


ஆனந்தம் . . .பரமானந்தம் . . .ப்ரும்மானந்தம் . . .


போதும் . . .
இனி வேறென்ன வேண்டும் . . .
ஆஹா . . . என் ஆணவம் அழிந்தது . . .
என் கௌரவம் ஒழிந்தது . . .
என் சுயநலம் ஓடி ஒளிந்தது . . .


நான் பரிசுத்தமானேன் . . .


இனி ஒரு குறையில்லை . . .


மணிவண்ணா . . .
ரங்கா . . . நீ வாழ்க . . .





  

Read more...

புதன், 25 ஆகஸ்ட், 2010

பார்க்கப் போகிறேன் . . .

ராதேக்ருஷ்ணா

ஸ்ரீரங்கம் போகின்றேன் . . .

நீண்ட நாள் கனவு . . .

பார்த்து பல வருஷங்கள் ஆகிவிட்டது . . .

காரேய் கருணை இராமானுஜனைப்
பார்க்கப் போகிறேன் . . .

என் தாயார் ரங்கநாயகியைப்
 பார்க்கப் போகிறேன் . . .

குழலகர்,வாயழகர்,கொப்பூழில்
எழு கமலப் பூவழகர்,
ராஜாதி ராஜன் ரங்கராஜனைப்
பார்க்கப் போகிறேன் . . .

ஸ்வாமி நம்மாழ்வார் அழுது அழுது
பார்க்கத் துடித்த
ஸ்ரீ ரங்கநாதனைப்
பார்க்கப் போகிறேன் . . .

ஸ்ரீ பெரியாழ்வார் அப்போதைக்கு
இப்போதே சொல்லிவைத்த
பெரிய பெருமாளைப்
பார்க்கப் போகிறேன் . . .

எங்கள் ஆண்டாளையும்
மயக்கிய புராண புருஷனான,
என் அரங்கத்து இன் அமுதரான
நம்பெருமாளைப்
பார்க்கப் போகிறேன் . . .

தொண்டரடிப் பொடி ஆழ்வாரை
தேவதேவியிடமிருந்து மீட்டு
தன் பக்கம் அழைத்துக்கொண்டு,
திருமாலை பாடவைத்த,
அரங்கமா நகருளானைப்
பார்க்கப் போகிறேன் . . .

 திருமங்கையாழ்வாரை
மதில் கைங்கர்யம் செய்ய வைத்து,
மோக்ஷத்திற்கு தன் தெற்கு வீடான,
திருக்குறுங்குடிக்குப் போகச் சொன்ன,

சீக்கிரம் போகிறேன் . . .
நேரமாகிவிட்டது . . .
கீழே சிஷ்யர்கள் காத்திருக்கிறார்கள் . . . 
மீண்டு வந்து சொல்கிறேன் . . . 
 
இதோ வந்துவிட்டேன் . . .
ஸ்ரீரங்கத்திற்குள் வந்துவிட்டேன் . . .
என் யதிராஜன் ராமானுஜர்
அழைத்து வந்தார் . . .



திருமங்கையாழ்வாரை
மதில் கைங்கர்யம் செய்ய வைத்து,
மோக்ஷத்திற்கு தன் தெற்கு வீடான,
திருக்குறுங்குடிக்குப் போகச் சொன்ன,
அரங்கமா கோயில் கொண்ட
என் கரும்பினைக் காண
வந்துவிட்டேன் . . .

திருப்பாணாழ்வாரை,
லோக சார்ங்க முனிவரின் தோளில்
சுமக்கச் செய்து ஸ்ரீரங்கத்திற்க்குள்,
அழைத்து வந்த அமலனாதிபிரானை,
என் அமுதனைக் காண வந்துவிட்டேன் . . .

எவருடைய இராஜ்ஜியத்தில்,
தினமும் ஸ்ரீ ரங்க யாத்திரை என்று
பறை அறிவிக்கப்பட்டதோ,
அந்த குலசேகர ஆழ்வாரின்
கருமணியை,கோமளத்தைக் காண
ஸ்ரீ ரங்கம் வந்துவிட்டேன் . . .

கருஅரங்கத்துள் இருந்து,
திருவரங்கத்தைத் தொழுதேனோ
தெரியாது . . .

ஆனால் இன்று,இப்பொழுது,
பூலோக வைகுண்டமான,
ஸ்ரீரங்கத்தில் அடியேனும்
இருக்கின்றேன் . . .

ஆஹா !
நம்ப முடியவில்லை . . .
யதிராஜரின் தானான திருமேனியைப்
பார்க்கப் போகிறேன் . . .

காவேரியில் குள்ளக்குளிர
குடைந்து நீராடப் போகிறேன் . . .

ஹே ரங்கா . . .
பொழுது புலர்கின்றது . . .
மஹாத்மாக்கள் மண்டிக்கிடந்த
புண்ணிய பூமியில்,
இதோ இந்த எளியவனும்
இருக்கின்றேன் . . .

ரங்கா . . . ரங்கா . . . ரங்கா . . .

எங்கள் இந்து தர்மம் வளம் பெற வரம் தா . . .
எங்கள் பாரத தேசம் செழிக்க வரம் தா . . .
எங்கள் குழந்தைகள் பக்தி செய்ய வரம் தா . . .

ரங்கா . . . ரங்கா . . . ரங்கா . . .

ஸ்ரீரங்கா ...ஸ்ரீரங்கா ... ஸ்ரீரங்கா...

நீயும் வா . . .
அழகனைப் பார்க்கலாம் வா . . .
சயன அழகனைப் பார்க்கலாம் வா . . .
காரேய் கருணை இராமானுசனைப்
பார்க்கலாம் வா . . .

இந்த நாள் வாழ்வின் மிகச்சிறந்த நாள் . . .

என் அமங்களங்கள் இதோடு
முடிந்தது . . .
உனக்கும் இதுவே நல்ல நாள் . . .

இன்றைய காலை
மங்களகரமான காலை . . .

ரங்கா ! ரங்கா ! ரங்கா !


 

Read more...

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

கிணறு . . .


ராதேக்ருஷ்ணா

தண்ணீர் . . .

நா வறண்ட சமயத்தில்,
தொண்டை காய்ந்த சமயத்தில்,
எல்லா ஜீவராசிகளும் 
தண்ணீருக்கு ஏங்கும் . . .


வாழ்க்கையில் தினமும்
நாம் பல சமயம்,
தண்ணீரைக் குடிக்கிறோம் . . .

தண்ணீர் இல்லாமல் வாழ
நம் யாருக்குமே தெரியாது . . .
வாழவே முடியாது . . .

இனி ஒவ்வொரு முறையும்
நீ தண்ணீர் குடிக்கும்போதும்
நினைத்துக்கொள்ள
அருமையான ஒரு நிகழ்ச்சியைச்
சொல்லவா . . .?

கிணறு . . .
அந்தக் காலத்தில் எல்லா
வீடுகளிலும் இருந்த ஒன்று . . .
இன்று காண அரிதான ஒன்று . . .
ஆனாலும் கிராமங்களில்
இன்றும் இருக்கும் ஒன்று . . .

அந்தக் கிணற்றுத்தண்ணீரின்
மரியாதையே தனிதான்...
கோடையில் சில்லென்று இருக்கும்...
குளிர் காலத்தில் வெதுவெதுப்பாக இருக்கும் . . .

கிணற்றோடு ஒரு தெய்வசம்மந்தம் உண்டு !
ஒரு தெய்வத்திற்க்கு சம்மந்தம் உண்டு !
ஒரு குருவோடு சம்மந்தம் உண்டு !

இன்றும் காஞ்சீபுரத்தில் ஒரு
கிணற்றுக்கு விசேஷ மரியாதை உண்டு !

இன்றும் அந்தக் கிணற்றில் இருந்துதான்
தேவராஜனான வரதராஜப் பெருமாளுக்கும்,
பெருந்தேவித் தாயாருக்கும் தினமும்
திருமஞ்சனத்திற்க்கு ஜலம்
எடுத்துச்செல்கிறார்கள் . . .

அதற்கு காரணம் ஒரு பக்தன் . . .
அந்த பக்தன் ஒரு சதாசார்யன் . . .
அந்த சதாசார்யன் நம் ஸ்வாமி இராமானுஜர் . . .

ஸ்வாமி இராமானுஜர்,திருக்கச்சியில்
யாதவப்ரகாசரிடம் வேதம் பயின்ற சமயம் . . .

யாதவப்ரகாசருக்கு, ஸ்வாமி இராமானுஜரிடத்தில்
பொறாமை உருவான சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜரை கொன்று போட,
யாதவப்ரகாசரும்,மற்ற மாணவர்களும்
சூழ்ச்சி செய்த சமயம் . . .

கங்கா யாத்திரை என்று சொல்லி,
கங்கையில் ஸ்வாமி இராமானுஜரைத்
தள்ளிவிட திட்டம் தீட்டின சமயம் . . .

இந்தச் சூழ்ச்சியை அறியாத,
உன்னத வரதனின் பக்தனான
ஸ்வாமி இராமானுஜர் இவர்களோடு
பயணப்பட்ட சமயம் . . .

எல்லாம் அறிந்த வரதராஜன்,
யாருக்கும் தன் லீலை தெரியாதபடி,
ஸ்வாமி இராமானுஜரின் தம்பி
கோவிந்தரையும் இவர்களோடு
யாத்திரை அனுப்பின சமயம் . . .

வரதராஜனின் கருணையால்,
கோவிந்தருக்கு இவர்களின்
சூழ்ச்சி தெரிந்து பரிதவித்த சமயம் . . .

எல்லாம் வல்ல வரதராஜனிடம்
கோவிந்தர் ஸ்வாமி இராமானுஜரைக் காக்க,
ப்ரார்த்தனை செய்த சமயம் . . .

விந்தியமலைக் காட்டில்,
கோவிந்தர், இந்த சூழ்ச்சியைப் பற்றி,
ஸ்வாமி இராமானுஜருக்கு மணலில்
எழுதி வைத்த சமயம் . . .

ஸ்வாமி இராமனுஜரும், வரதராஜனின்
அனுக்ரஹத்தால், அதைப் படித்து,
அவர்களை விட்டு விலகின சமயம் . . .

விந்தியமலைக் காட்டில் எங்கும் ஓடி, 
ஒரு வழியும் புலப்படாமல்,
 ஸ்வாமி இராமானுஜர் கதறி அழுது,
வரதா என்று அலறின சமயம் . . .

தூரத்தில் ஒரு வேடுவனும், வேடுவச்சியும்,
ஸ்வாமி இராமானுஜரை நோக்கி,
ஒய்யாரமாக நடந்து வந்த சமயம் . . .

இந்த வேடுவத் தம்பதியரை,
ஸ்வாமி இராமானுஜர் கவனித்து
 ஆனந்தத்தில் திளைத்த சமயம் . . .

 ஆளில்லாத காட்டில்,
திக்குத் தெரியாதக் காட்டில்,
ஒரு தம்பதியைப் பார்த்து,
ஸ்வாமி இராமானுஜர் குழந்தையாக
குதூகலித்த சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜர் அவர்களை
"எந்தப் பக்கம் செல்கிறீர்கள்" என்று
கேட்க்க அவர்களும் காஞ்சீபுரம்
என்று சொல்ல அதிசயித்த சமயம் . . .

தானும் அவர்களோடு வரலாமா
என்று ஸ்வாமி இராமானுஜரும்,
வினயத்தோடு கேட்ட சமயம் . . .

வேடுவத்தம்பதியரும் மகிழ்ந்து,
ஆனந்தமாக தலையசைத்து,
எங்களோடு வாரும் என்று
அழைத்த சமயம் . . .

மூவரும் விந்தியமலைக்காட்டில்,
நெடுந்தூரம் நடக்க,அந்தியும் சாய,
உடலும் களைக்க,இருளும் சூழ
ஒரு மரத்தடியில்
இளைப்பாறின சமயம் . . .

வேடுவனும்,வேடுவச்சியும்,
ஸ்வாமி இராமானுஜரைக் குழந்தையாகப்
பாவித்து, தங்கள் இருவர் மத்தியில்,
படுக்கவைக்க சமயம் . . .

வேடுவச்சி,வேடுவனிடம்,
நா வறண்டு தண்ணீர் வேண்டும்,
என்று கேட்ட சமயம் . . .

வேடுவனும், "இருள் சூழ்ந்தது,
பொழுது விடியட்டும்,
அருகில் ஒரு கிராமத்தில்,
சாலையில் நல்ல கிணறு உண்டு"
விடிந்தவுடன் குடிக்கலாம் என்ற சமயம் . . . 

தனக்கு இத்தனை உபகாரம்
செய்த இந்தத் தம்பதியருக்குத்
தான் இந்த சிறு உதவியைக்கூடச் செய்ய
முடியவில்லையே என்று
ஸ்வாமி இராமானுஜர் பரிதவித்த சமயம் . . .


உடல் அசதியால்,இதே தியானத்தோடு,
ஒரு கவலையில்லாமல், குழந்தைபோல்
ஸ்வாமி இராமானுஜரும் அயர்ந்து தூங்கிய சமயம் . . .


பறவைகளின் குதூகல சப்தத்தில்,
ஆதவனின் செங்கிரணங்கள் பூமிப்பந்தில்
வந்து விழ,ஸ்வாமி இராமானுஜரும்,
ஆனந்தமாக கண்விழித்த சமயம் . . .


 இன்னும் பல விஷயங்கள்
பாக்கியிருக்கிறது . . .


அதுவரை இதை நினைத்துக்கொண்டு
தாகமெடுக்கும்போதெல்லாம்
தண்ணீரைக் குடி . . .


உன் பக்தி தாகம் தீரும் முன்பு
வேகமாய் வருவேன் . . .



இதோ வந்துவிட்டேன் . . .

என்னை க்ருஷ்ணன் உட்காரவிட்டால்தானே !
உன் தாபத்திற்கு வசப்பட்ட அவன்
என்னைப் படுத்தி,
உனக்காக எழுத அழைத்து வந்துவிட்டான் . . .



தாகம் எடுத்ததா ?
தண்ணீர் குடித்தாயா ?
இதுவரை சொன்னவற்றை நினைத்தாயா ?
இல்லையென்றால் இனிமேல் நினை . . . 
அவ்வளவுதான் . . .
பக்தி என்பது சுதந்திரம் . . .
இங்கே கட்டாயப்படுத்துதல் என்பதேயில்லை . . .

அதுதானே நம் இந்துமதத்தின் விசேஷம் . . .



பறவைகளின் ஆனந்த சப்தத்தில்,
ஸ்வாமி இராமானுஜர் கண் விழித்து,
உடனே வேடுவச்சித் தாய்க்கு,
தண்ணீர் கொண்டுவர,
வேடுவன் சொன்ன கிராமத்துக்கு,
வேகமாய் கிளம்பின சமயம் . . .



சிறிது தூரம் நடந்தவுடனேயே,
அழகான ஒரு கிராமம் தெரிய,
அங்கே ஒரு சாலையும்,கிணறும் தெரிய,
ஸ்வாமி இராமானுஜரும் மேனி சிலிர்த்த சமயம் . . .

அங்கே சாலைக் கிணற்றில்,
சிலரும் தண்ணீர் இறைத்துக்
கொண்டிருந்த சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜரும்,
தாமரை இலையை கிண்ணமாக்கி,
அதிலே தண்ணீரை முகந்து கொண்டு,
வேகமாக வேடுவச்சியைப் பார்க்க
அவசரமாய் வந்த சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜரின் வருகைக்காக,
காத்திருந்த வேடுவனும்,வேடுவச்சியும்,
ஆனந்தமாய் அவரின் பரிதவிப்பை
ரசித்துக்கொண்டிருந்த சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜர்,அன்போடும்,
ஆசையோடும்,பணிவோடும்,
வேடுவச்சியின் கைகளில்,
தண்ணீரைக் கொடுத்த சமயம் . . .

வேடுவச்சியும் ஆவலோடு,
தாகம் தீர தண்ணீரைப் பருகி,
இன்னும் கொஞ்சம் தண்ணீர்
வேண்டும்,தாகம் தீரவில்லை என்ற சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜரும் வேகமாக,
சாலைக் கிணற்றுக்கு ஓடி,
திரும்பவும் தண்ணீர் கொண்டு,
வேகமாக நடந்து வந்த சமயம் . . .


வேடுவச்சி அதையும் நன்றாகப் பருகி,
திரும்பவும் தாகம் தீரவில்லை என,
மீண்டும் ஸ்வாமி இராமானுஜரும்,
3வது தடவையும் ஓடி, தண்ணீர்
கொண்டு வந்த சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜர் மீண்டும்
தண்ணீர் கொண்டு ஓடி வர,
வேடுவனையும்,வேடுவச்சியையும்,
அவ்விடம் காணாத சமயம் . . .

எல்லாப்பக்கமும் தேடியும்,
அவ்வழி வருவோரையும்,போவோரையும்
விசாரித்தும் காணாததால்,
ஸ்வாமி இராமானுஜரும்,
யோசனையில் ஆழ்ந்த சமயம் . . .

திரும்பவும் சாலைக்கிணற்றின் அருகில் வந்து,
அங்கிருப்பவரைக் கண்டு,
இது எந்த ஊர் என்று
ஸ்வாமி இராமானுஜரும்,
ஆவலாகக் கேட்ட சமயம் . . .

அங்கிருந்த பெண்களும்,
தூரத்தில் கோயில் கோபுரத்தைக் காட்டி,
புண்யகோடி விமானம் இருக்கும் இது
காஞ்சீபுரம் என்று தெரியவில்லையா என
கோபத்துடன் கேட்ட சமயம் . . .

இந்தப் பெண்களின் வார்த்தையைக் கேட்ட
ஸ்வாமி இராமானுஜரும்,ஒரு ராத்திரியில்
750மைல் தூரமுடைய விந்தியமலையிலிருந்து,
இரவு தூங்கி எழுந்தபோது காஞ்சீபுரத்தில்,
வந்து சேர்ந்ததை நினைத்து அதிசயித்த சமயம் . . .

salai kinaru, kanchipuram
ஒரு ராத்திரியில் இத்தனை தூரம்,
எப்படி வரமுடியும் ? என்று
ஸ்வாமி இராமானுஜர் கண்களில்
கண்ணீர் வழிய வரதனை நினைத்து,
புண்ணிய கோடி விமானத்தை,
அங்கிருந்தே சேவித்த சமயம் . . .

அப்பொழுது வேடுவன்,வேடுவச்சியின்
நினைவு வர,அவர்களை எங்கேயோ,
எப்பொழுதோ பார்த்திருக்கிறோம் என்ற
தோணல் வர, அடுத்த நிமிடம்,
ஸ்வாமி இராமானுஜர் வரதா என்று அலறி,
வேகமாக வரதராஜன் கோயிலுக்கு ஓடின சமயம் . . .

அங்கே வரதராஜனின் சன்னிதியில்,
திருக்கச்சி நம்பிகள் ஆலவட்ட கைங்கர்யத்தில்
திளைத்துக்கொண்டிருக்க,ஸ்வாமி இராமானுஜரின்
திருமேனியில் பக்திப் பரவச நிலையைக் கண்டு,
அவரும் அதிசயித்து ப்ரமித்துப்போன சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜரும் எல்லாவற்றையும்
திருக்கச்சிநம்பிகளிடம் உள்ளபடி சொல்ல,
அவரும் வரதனைப் பார்த்து நீரோ வேடுவன்,
பெருந்தேவி வேடுவச்சியோ? என வினவ,
புன்னகை மன்னன் ஆம் என்று தலையசைத்து,
புன்முறுவல் பூத்த சமயம் . . .

திருக்கச்சி நம்பிகளிடம்,
ஸ்வாமி இராமானுஜர் 3வது முறை,
தாயார் தண்ணீர் வாங்காமல் சென்றாரே,
என்று கதறி அழ,
திருக்கச்சி நம்பிகளும் தினமும் நீர்
தாயார்,பெருமாள் திருமஞ்சனத்திற்கு,
அந்தக் கிணற்றிலிருந்து தீர்த்தம்
கொண்டு வாரும் என உத்தரவிட்டார் . . .

இத்தனை உயர்ந்த சாலைக் கிணற்றை
எப்போது தரிசிப்பேன்,
அந்த நீரை என்று குடிப்பேன்,
அங்கிருந்து புண்ய கோடி விமானத்தை
எப்படிப் பார்ப்பேன் என்று
நான் ஏங்கிக்கொண்டிருந்த சமயம் . . .

என் புன்னகை மன்னன் வரதராஜன்,
காஞ்சிபுரம் சென்று திரும்பும் வழியில்,
திடீரென என்னை அந்தக் கிணற்றுக்கு
ஒரு ப்ராம்மணரைக் கொண்டு,
அழைத்துச் சென்றான் . . .

கண்டேன். . .கண்டேன் . . .
ஸ்வாமி இராமானுஜரையும் கண்டேன் . . .
சாலைக்கிணற்றையும் கண்டேன் . . .
அங்கிருந்து புண்யகோடி விமானத்தையும்
கண்டேன். . . கண்டேன் . . .

சாலைக்கிணற்றுத் தண்ணீரையும் குடித்தேன் !
என் ஜன்மா பயணடைந்தது . . .
பெருந்தேவித் தாயார் அனுபவித்த
தண்ணீரை நானும் குடித்தேன் . . .
ஸ்வாமி இராமனுஜரின் ஸ்பரிசம்
பெற்ற தண்ணீரை நானும் குடித்தேன் . . .
வரதனின் திருமேனியில் விளையாடும்
தண்ணீரை நானும் குடித்தேன் . . .
குடித்தேன் . . .குடித்தேன். . .குடித்தேன் . . . 

காரேய் கருணை இராமானுசன் வாழ்க . . .
சாலைக்கிணறு வாழ்க . . .
என்னை அழைத்துச் சென்ற
ப்ராம்மணர் வாழ்க . . .
என்னோடு கிணற்றைத் தரிசித்த
பக்தர்கள் வாழ்க . . . 
அந்த கிணற்றுத் தண்ணீரை
வரதனின் திருமஞ்சனத்திற்கு கொண்டு
செல்லும் ஸ்ரீ வைஷ்ணவர் வாழ்க . . .
அந்தக் கிணற்றை அழகாய் பராமரிக்கும் 
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஸ்வாமிகள்
பொன்னடி வாழ்க . . .
இதையெல்லாம் அனுபவிக்கும்
புன்னகை அரசன் வரதராஜன் வாழ்க . . .
தான் குடித்த தேனினும் இனிய
தண்ணீரை என்னையும் குடிக்கவைத்த
எங்கள் படி தாண்டா பத்தினி,
பெருந்தேவித்தாயார் வாழ்க . . .

இந்த ஆனந்தவேதத்தை படித்த நீ வாழ்க . . .
உன் குலம் வாழ்க . . .
உன் பக்தி வாழ்க . . .
உன் சிரத்தை வாழ்க . . .
உன் ஞானம் வாழ்க . . .
உன் வைராக்யம் வாழ்க . . .
உன் ஆனந்தம் வாழ்க . . .
உன் வாழ்க்கை சிறக்க . . .

வாழ்க ... வாழ்க ... வாழ்க ...

 

Read more...

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

இன்று நீ பிறந்த திருவோணம் . . .

ராதேக்ருஷ்ணா

இன்று நீ பிறந்த திருவோணம் . . .

ஹே உத்தமா !

இன்று நீ பிறந்த திருவோணம் . . .

இந்த ஜீவர்களை
ஒட்டு மொத்தமாக,
பரிசுத்தப்படுத்த,
எத்தனை யுகங்கள்,
எத்தனை அவதாரங்கள் எடுத்தாய் . . .

எடுக்கின்றாய் . . .

எடுக்கப்போகிறாய் . . .

ஆயினும் ஹே குட்டைப் பயலே . . .

நீ மிகவும் பெரியவன் . . .

கச்யபருக்கும்,அதிதி தேவிக்கும்,
திருவோண நக்ஷத்திரத்தில்,
உலகை அளக்க அவதரித்த,
உத்தமனே நீ வாழி . . .  

யாரையும் உருவத்தைக் கொண்டு
எடைப் போடக்கூடாது என்ற
பெரிய தத்துவத்தை நிரூபித்த
உத்தமனே நீ வாழி . . .

உன்னை நம்பிய இந்திரனுக்காக,
 உன் மரியாதையையும் விட்டு,
அஹம்பாவியான மஹாபலி ராஜனிடமும்,
3 அடி நிலம் பிச்சைக் கேட்ட,
உத்தமனே நீ வாழி . . .

யாரையும் அழிக்காமல்,
நம்பின இந்திரனுக்கும்,
பரிஹஸித்த மஹாபலிக்கும்,
பொதுவான நன்மை செய்த,
உத்தமனே நீ வாழி . . .

ப்ரஹ்லாதனின் பேரன் மஹாபலி,
உனக்கு 3 அடி நிலம் தர சம்மதிக்க,
அதில் குஷியாகி ஆகாசத்தை
அடைத்துக்கொண்டு நின்ற,
உத்தமனே நீ வாழி . . . 

இன்றும் மஹாபலிக்கு
காவல்காரனாக நின்று கொண்டிருக்கும்,
திரிவிக்ரமனே,உலகளந்த பெருமாளே,
உத்தமனே நீ வாழி . . . 

வா . . .
எங்களையும் அள . . .
எங்கள் உள்ளங்களை அள . . .
 எங்கள் கூட்டங்களை அள . . .

எங்கள் தலையும் வீணாய் போகிறது . . .
வா . . . மீண்டும் வா . . .

மீண்டும் ஒரு முறை,
இந்தக் குழந்தைகளின்,
அஹம்பாவத் தலைகளின் மேல்,
உன் பொன்னடியைச் சாற்றி,
உருப்பட வைப்பாயாக . . .

இன்று நீ பிறந்த திருவோணம் . . .

அதனால் எங்களுக்கு எல்லாம் பரிசு தா . . .
உன் திருவடியைப் பரிசாகத் தா . . .

நாங்களும் தருவோம் . . .
எதைத் தருவோம் . . .
எங்களையே தருவோம் . . .
இனி குள்ளர்களைப் பார்த்தால்,
உன்னை மட்டுமே நினைப்போம் . . . 

வா . . .
திருவோணம் முடியும் முன் வா. . .

உத்தமனே வா . . .
உலகளந்தவனே வா . . .
வாமனனே வா . . .
திரிவிக்ரமனே வா  . . .

துயரறு சுடரடியை
எங்கள் தலையில் இட்டு,
எம்மைக் காப்பாற்றும் . . .

வா . . . வா . . . வா. . .


 

Read more...

சனி, 21 ஆகஸ்ட், 2010

சொன்னால் செய்வாயா ?

ராதேக்ருஷ்ணா


சொன்னால் தெரியாதா ?
எத்தனை தடவை சொல்வது ?
சொன்னால் செய்யமாட்டாயா ?


எத்தனை முறை நாம்
பலரைக் கேட்ட கேள்வி . . .


எத்தனை முறை பலர்
நம்மைக் கேட்ட கேள்வி ?


சொன்னால் செய்வான் என்று
எத்தனை பேரிடம் நமக்கு நம்பிக்கை
இருக்கிறது ?


"சொன்னால் செய்வேன்"
என்று ஒரு அற்புதன்
இருக்கிறான் . . .


வா . . . அவனைப் பார்ப்போம் . . .

வரதராஜனை அனுபவித்த
நாங்கள் அடுத்து
அனுபவித்த
அற்புதனைப் பற்றி
சொல்லவேண்டுமே . . .

வாழ்வில் ரொம்ப நாளாக
பார்க்க ஆசைப்பட்ட
ஒரு அற்புதன் அவன் . . .

வாயால் அவனைப் பற்றி
பல தடவை, பல ஊர்களில்,
சொல்லிச் சொல்லி
அனுபவித்திருக்கிறேன் . . .

ஆனால் ஒரு தடவை கூட
அவன் சன்னிதானத்திற்க்குச்
சென்றதில்லை . . .

அன்று அவனைப் பார்ப்போமா,
இல்லையா என்ற சந்தேகத்தில்,
இதயத்தில் பரபரப்போடு
அந்த அற்புதனின்
திருக்கோயிலுக்கு ஓடினோம் . . .

சரஸ்வதி தேவியின் செருக்கை
அடக்க நதியின் குறுக்கே
அணையாகப் படுத்து,
ப்ரும்மனின் யாகத்தைக் காத்த
அற்புதனாயிற்றே அவன் . . .

திவ்யப்ரபந்தத்திற்கு அடியிட்ட,
முதலாழ்வார்களில் முதல்வரான,
பொய்கை ஆழ்வாரைத் தந்த
அற்புதனாயிற்றே அவன் . . .

யார் அந்த அற்புதன் . . .
தெரிந்தால் தியானம் செய்து கொண்டிரு . . .
தெரியாவிட்டால் யோசித்துக்கொண்டிரு . . .

சீக்கிரத்தில் வருகிறேன் . . .


இதோ வந்துவிட்டேன் . . .


உன்னைக் காக்கவைத்து
மகிழ நான் தயாராகயில்லை . . .


நான் காலம் கடந்து வந்தால்
அதுவும் ஸ்ரீ க்ருஷ்ணனின் லீலையே . . .


சரி . . .அற்புதன் யாரென்று கண்டுபிடித்தாயா ?


வேறு யார் அற்புதன் . . .


நம்முடைய
சொன்ன வண்ணம் செய்த
பெருமாள்தானே . . .


சத்தியமாக அற்புதன் அவனே . . .


அற்புதன் ஆழ்வார்
சொன்ன வண்ணம் செய்த
அழகைக் கூறுகிறேன் . . . கேள் !


திருமழிசை பிரானின் சிஷ்யனான
கணிகண்ணனை,
 தன்னைப் பற்றிப் பாட,
காஞ்சி ராஜன் உத்தரவிட,
நாக்கொண்டு என் பெருமாளையும்,
என் குருவையும் தவிர
வேறு யாரையும் பாடமாட்டேன்
என்றான் உத்தம சிஷ்யன் . . .


கணிகண்ணன் காஞ்சிபுரத்தைவிட்டு
வெளியேற அரசன் ஆணை பிறப்பிக்க,
அவனும் தன் குரு திருமழிசை ஆழ்வாரின்
திருவடிகளில் சரணாகதி செய்தான் . . .


திருமழிசை ஆழ்வாரும்,தன் ப்ரிய
சிஷ்யனை பிரிய மனமில்லாமல்,
இந்த அற்புதனிடம் வந்து,
என் சிஷ்யன் இல்லாத இடத்தில்
உனக்கென்ன வேலை என்றார் . . .


கணிகண்ணன் போகின்றான்,
நானும் போகின்றேன்,
நீயும் உன் பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்,
என திருமழிசைஆழ்வார் உத்தரவிட,
மறு வார்த்தை பேசாமல்,
உடனே தன் ஆதிசேஷப் பாயைச்
சுருட்டிக்கொண்டு நின்ற
அற்புதன் இவனன்றோ !


ஹே ! கருணாசாகரா . . .
ஹே ! தீன தயாளா . . .
ஹே ! பக்தவத்சலா . . .
ஹே ! ப்ரபோ . . .


நீ சொல்ல மனிதன் கேட்கவேண்டும் . . .
பக்தன் சொல்ல நீ கேட்டாயா . . .
ஹே கருணா சாகரா . . .


ஒரு முறை கேட்பதே
பெரிய விஷயம் . . .


ஆனால் அற்புதன்
மீண்டும் ஒரு முறை கேட்டான் . . .


திருமழிசை ஆழ்வாரோடும்,
கணிகண்ணனோடும்,
மற்ற தேவர்களுடனும்,
ஊரை விட்டு வெளியேறி,
கணிகண்ணன் இஷ்டப்படி,
ஓர் இரவு இருக்கையில்,
ஓரிரவு இருந்து,
மீண்டும் ராஜன் கணிகண்ணனிடம்
மன்னிப்புக் கேட்க,
திரும்பவும் தன் இருப்பிடமான
திருவெஃகாவிற்குத் திரும்பின
அற்புதன் இவனன்றோ . . .

திரும்பி வந்தபோதும்
தன்னிடத்தில் தானாகப் போய்
படுத்துக்கொள்ளாத அற்புதன்
இவன் தானே !

திரும்பவும் திருமழிசை ஆழ்வார்,
கணிகண்ணன் போய் வந்தான்,
உன் அடியவனான நானும் போய் வந்தேன்,
நீயும் உன் பைந்நாகப் பாயை
விரித்துக் கொண்டு படு என்று
அன்புடன் சொன்னவுடன் 
 மீண்டும் படுத்துக்கொண்ட
அற்புதன் இவனே. . .

மீண்டும் படுத்தபோதும்,
தன் பக்தனின் பெருமையையும்,
அவருடைய சிஷ்யனின் பெருமையையும்,
உலகினர் அறியும்படியாக,
இடம்,வலமாக மாறிப் படுத்து,
இன்றும் காட்சி தரும்,
சொன்ன வண்ணம் செய்த
அற்புதன் இவன் தானே . . .

sonna vannam seytha perumal

சொன்ன வண்ணம் செய்தவன்
படுத்திருக்கும் அழகே தனி . . .
இடது கையை தலையில் வைத்து,
வலது கையை வில் பிடித்தாற் போல் கொண்டு,
இடுப்பை வளைத்து ஒய்யாரமாய்,
படுத்திருப்பதைக் காண,
ஆயிரம் கண்கள் போதாது . . .

சரி...
இவன் சொன்ன வண்ணம் செய்தான் . . .

நீ சொன்னால் செய்வாயா ? ! ? 

நான் சொல்வதை செய்வாயா ?

எப்பொழுதெல்லாம் உனக்கு,
தெய்வத்திடம் நம்பிக்கைக் குறைகிறதோ,
அப்பொழுதெல்லாம் இந்த
சொன்ன வண்ணம் செய்த அற்புதனை
நினைத்துக்கொள் . . .

 நிச்சயம் நம்பிக்கை வரும் . . .

 இப்படியே செய்து வர,
ஒரு நாள்,
நீ சொன்ன வண்ணம் செய்வான் . . .

சீக்கிரம் சொல். . .
அவன் தயார் . . .
நீ தான் சொல்லவேண்டும் . . .


 

Read more...

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

கை வீசம்மா கை வீசு !

 ராதேக்ருஷ்ணா



குழந்தைப் பருவம் . . .

நாம் மறக்கவே முடியாதது . . .

நாம் பலவற்றை மறந்த வயது . . .

நாம் பலரையும் நேசித்த வயது . . .

நாம் பலதையும் ரசித்த வயது . . .

நாம் பல விஷயத்திற்கும் அழுத வயது !

நாம் ஆனந்தமாய் சிரித்த வயது !

நாம் எதையும் யோசிக்காத வயது !

நாம் மறந்தும் திட்டமிடாத வயது !

நாம் வேறுபாடு அறியாத வயது !

நாம் பணத்தை கணக்கிடாத வயது !

நாம் குப்பையையும்
அழகாய் பார்த்த வயது !

நாம் ஆசைப்பட்டு
குளிக்காத வயது !

நாம் மழலையில் எல்லோரையும்
வசப்படுத்திய வயது !

நாம் சைகையினால் பல
காரியங்களை சாதித்த வயது !

நாம் மரியாதையைப் பற்றிக்
கவலைப்படாத வயது !

நாம் கௌரவத்தைப் பற்றி
யோசிக்காத வயது !

நம் பலவீனம் தெரியாத வயது !

நம் பலம் புரியாத வயது !

நாம் காமத்தைக் கொண்டாடாத வயது !

நாம் காதலில் தோற்காத வயது !

நாம் காதலை அறியாத வயது !

நாம் ஜாதியைப் பற்றி தெரியாத வயது !

நாம் எதிர்காலத்தைப் பற்றி
கவலைப்படாத வயது !

நாம் மீண்டும் கிடைக்காதா
என்று
ஏங்கும் வயது !

மீண்டும் கிடைக்குமா ?
மீ்ண்டும் கிடைத்தால் ?

எப்படி ஆரம்பிக்கலாம் . . .

மிகவும் சரியான ஆரம்பமாய்
அது இருக்க வேண்டும் . . .

இப்பொழுது நீ
சிறிய குழந்தை என்று
நினைத்துக்கொள் . . .

இப்பொழுது உனக்குத்
தெரிந்த,
ஆனால் தெரியாத
ஒரு பாடலைச்
சொல்லித்தருகிறேன் . . .

கற்றுக்கொள் . . .

கை வீசம்மா கை வீசு !

சத் சங்கம் போகலாம் கை வீசு !

கிச்சா கதை கேட்கலாம் கை வீசு !

நாம ஜபம் பண்ணலாம் கை வீசு !

பக்தர்களைப் பார்க்கலாம் கை வீசு !

பஜனை பண்ணலாம் கை வீசு !

குதித்து ஆடலாம் கை வீசு !

ராதிகாவை நினைக்கலாம் கை வீசு !

பூஜை பண்ணலாம் கை வீசு !

சத்குருவை சேவிக்கலாம் கை வீசு !

நிவேதனம் பண்ணலாம் கை வீசு !

ஆரத்தி காட்டலாம் கை வீசு !

ப்ரசாதம் சாப்பிடலாம் கை வீசு !

சந்தோஷமாய் வாழலாம் கை வீசு !

கை வீசம்மா கை வீசு !

இப்படியே சொல்லிக்கொண்டிரு . . .
ஒரு நாள் நீ க்ருஷ்ண குழந்தை
என்று உனக்குப் புரியும் . . .

அதுவரை
கை வீசம்மா கை வீசு !


Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP