ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 மே, 2010

வாழ்ந்து காட்டு . . .



ராதேக்ருஷ்ணா


உன்னைக் கேவலப்படுத்தினவரின்
முன் வாழ்ந்து காட்டு . . .



உன்னைக் கஷ்டப்படுத்துபவரின்
முன் வாழ்ந்து காட்டு . . .



உனக்கு நம்பிக்கைத் துரோகம்  
செய்தவர் முன்  வாழ்ந்து காட்டு . . .


உன் கடந்தகால தோல்விகளை
வெற்றியாக்கி வாழ்ந்து காட்டு . . .



உன்னை அவதூறு சொன்னவர்கள்
முன் வாழ்ந்து காட்டு . . .


உன்னை அழிக்க நினைப்பவர்கள் முன்
ப்ரஹ்லாதனைப் போல்
வாழ்ந்து காட்டு . . .


உன்னை அவமரியாதை செய்தவர்கள் முன்
த்ரௌபதியைப் போல்
வாழ்ந்து காட்டு . . .

உன்னைப் பற்றி அவதூறு பேசியவர்கள் முன்
ஸ்ரீமதி மீராவைப் போல்
வாழ்ந்து காட்டு . . .

உன்னை ஏளனமாகப் பார்த்தவர்கள் முன்
விதுரரைப் போல்
வாழ்ந்து காட்டு . . .

உன்னை ஒதுக்கித் தள்ளினவர்கள் முன்
ஹரிதாஸ் யவனைப் போல்
வாழ்ந்து காட்டு . . .

உன்னைப் பரிகசித்தவர்கள்
முன் பின்பழகிய பெருமாள் ஜீயரைப் போல்
வாழ்ந்துகாட்டு . . .

உன் மனதைக் காயப்படுத்தியவர்கள்
முன் ஸ்ரீமதி சக்கு பாயைப் போல்
வாழ்ந்துகாட்டு . . .

உன்னை அலட்சியம் செய்பவர் முன்
ஸ்ரீராமனின் தம்பி பரதனைப் போல் 
 வாழ்ந்துகாட்டு . . .

உன்னைத் துறும்பாக எடை போட்டவர்
முன் சத்ரபதி சிவாஜியைப் போல்
வாழ்ந்துகாட்டு . . .

உன்னை வேண்டுமென்றே சீண்டியவர்கள்
முன் மஹரிஷி வசிஷ்டரைப் போல்
வாழ்ந்துகாட்டு . . .

உன்னை அனாதையாக அலையவிடுபவர்கள்
முன் நாரத மஹரிஷியைப் போல்
வாழ்ந்துகாட்டு . . .

உனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் 
முன் பாண்டவர்களைப் போல்
வாழ்ந்து காட்டு . . .



உன்னை அவநம்பிக்கையில் அழுத்துபவர்கள்
முன் கூர்மதாஸரைப் போல் 
 வாழ்ந்து காட்டு . . .

உன் சத்தியத்தை அழிக்க நினைப்பவர்கள்
முன் ராஜா ஹரிச்சந்திரனைப் போல்
வாழ்ந்து காட்டு . . .

உன்னிடம் பொய் சொல்லி ஏமாற்றுபவர்
முன் சந்த் துகாராமைப் போல்
வாழ்ந்து காட்டு . . . 

உன்மீது வீண் பழி சுமத்துபவர்
முன் திருமழிசை ஆழ்வாரைப் போல்
வாழ்ந்து காட்டு . . .

வாழ்ந்து காட்டு . . .
வாழ்ந்து காட்டு . . .
வாழ்ந்து காட்டு . . .

வாழ்ந்துகாட்ட வேண்டும் !
இதுவே உன் வாழ்வின் லக்ஷியம் !
இதுவே உன் வாழ்வின் சாதனை !
இதுவே உன் வாழ்வின் ப்ரயோஜனம்!


வாழ்ந்துகாட்ட வேண்டும் ! 
இதுவே இன்று முதல்
உன்
வாழ்வின் தாரக மந்திரமாகட்டும் !

எது எப்படி நடந்தாலும்,
யார் என்ன செய்தாலும்,
நீ உலகில் வாழ்ந்துகாட்ட வேண்டும் !

உன் க்ருஷ்ணன் உன்னோடு இருக்கிறான் !
நீ வாழ்ந்து காட்டவேண்டும் !

உலகில் உனக்கென்று ஒரு இடம் இருக்கிறது!
உன் க்ருஷ்ணன் உனக்கென தந்த இடம் !
 உன் க்ருஷ்ணன் உனக்கென தந்த ப்ரசாதம் !
உன் க்ருஷ்ணன் உனக்கென தந்த வாழ்க்கை !

இதில் வாழ உனக்கு முழு அருகதை உண்டு !

நீ வாழ்ந்துகாட்ட வேண்டும் !
அதைக் கண்டு உலகம் ப்ரமித்து நிற்கவேண்டும் !
 அதைப் பார்த்து க்ருஷ்ணன் கைதட்ட வேண்டும் !

அதைக்கேட்டு நான் எழுந்து நின்று
உனக்கு மரியாதை செய்யவேண்டும் ! ! !

நான் தயாராகிவிட்டேன் . . .
க்ருஷ்ணன் எப்போதோ தயாராகிவிட்டான் . . .

இனி
நீ தான் வாழ்ந்துகாட்ட வேண்டும் . . .








0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP