ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 மே, 2010

உனக்குத் தெரியுமா ? ! ?



ராதேக்ருஷ்ணா
 உனக்குத் தெரியுமா ? ! ?
நீ யாரென்று உள்ளபடி தெரியுமா ? ! ?

உன் தாயோ,தந்தையோ,உற்றாரோ,
மற்றவரோ உனக்குச் சொன்னதுண்டா ? ! ?

இப்பொழுது நான் சொல்கிறேன் !
உன்னை யாரென்று உனக்கு
அறிமுகப்படுத்துகிறேன் !

உனக்குத் தெரியாத உன்னை
அடையாளம் காட்டுகிறேன் !

கொஞ்சம் ஏற்றுக்கொள்ள
கடினமான விஷயம்தான்  . . .
உண்மை கசக்கத்தானே செய்யும் !
இருந்தாலும் உண்மை நிரந்தரமானது !
எத்தனை நாள்தான் உன்னை
நீயே ஏமாற்றிக்கொள்வாய் . . .
கொஞ்சம் உன் மனதைத் திற !
உண்மையை அதில் விதைப்போம் !
அது வளர்ந்து உனக்கு உன்னைப்
புரியவைக்கும் !

அதன்பிறகு நீதான் பயனாளி !
விதைப்பவன் கண்ணன் !
விளைச்சலின் பயன் உனக்குத்தான் !
நான் உனக்கு உதுவுபவன் !அவ்வளவுதான் ! 
 
 முதலில் உன் கடந்த காலம் !
  
நீ கொசுவாக ரத்தம் குடித்திருக்கிறாய் !
நீ ஈயாக அலைந்திருக்கிறாய் !
நீ புழுவாக நெளிந்திருக்கிறாய் !
நீ மூட்டைப் பூச்சியாய் நோகடித்திருக்கிறாய் !
நீ எறும்பாக மனிதர்களை கடித்திருக்கிறாய் !
நீ வெட்டுக்கிளியாய் செடிகளை தின்றிருக்கிறாய் !
நீ மின்மினிப் பூச்சியாய் திரிந்திருக்கிறாய் !
நீ விட்டில் பூச்சியாய் விளக்கில் விழுந்திருக்கிறாய் !
நீ கரப்பான்பூச்சியாய் வீட்டில் சுற்றியிருக்கிறாய் !
நீ சிலந்தியாய் வலை பின்னியிருக்கிறாய் !
நீ பட்டுப்பூச்சியாய் வலையில் இருந்திருக்கிறாய் ! 
நீ அட்டையாய் ரத்தத்தை உறிஞ்சிருக்கிறாய் ! 
நீ பல்லியாய் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருந்தாய் !
  
நீ நாயாய் நன்றியுடன் இருந்திருக்கிறாய் !
நீ பன்றியாய் சாக்கடையில் சுகித்திருந்தாய்!
நீ மாடாய் புல்லை மேய்ந்திருக்கிறாய் !
நீ சிங்கமாய் மான் மீது பாய்ந்திருக்கிறாய் !
நீ மானாய் பயந்து நடுங்கியிருக்கிறாய் !
நீ நரியாய் தந்திரம் செய்திருக்கிறாய் !
 நீ யானையாய் குளத்தில் குளித்திருக்கிறாய் !
நீ எருமையாய் சேற்றில் திளைத்திருக்கிறாய் !
நீ பாம்பாய் விஷத்தைக் கக்கியிருக்கிறாய் !
நீ முதலையாய் மாமிசத்தை ரசித்திருக்கிறாய் !
நீ குரங்காய் மரம் மரமாக தாவியிருக்கிறாய் !
நீ அணிலாய் விடாமல் கத்தியிருக்கிறாய் !
நீ கழுதையாய் பொதி சுமந்திருக்கிறாய் !
நீ ஒட்டகமாய் பாலைவனத்தில் வாழ்ந்திருக்கிறாய் !
நீ குதிரையாய் வேகமாக ஓடியிருக்கிறாய் !
நீ புலியாகப் பதுங்கியிருக்கிறாய் ! 

நீ கிளியாக பழங்களைத் தின்றிருக்கிறாய் !
நீ குயிலாக அழகாக பாடியிருக்கிறாய் !
நீ காகமாக கண்டதையும் ருசித்திருக்கிறாய் !
நீ மயிலாக அற்புதமாக ஆடியிருக்கிறாய் !
நீ சிட்டுக்குருவியாக பறந்திருக்கிறாய் !
நீ கழுகாகக் கோழியை கொன்றிருக்கிறாய் !
நீ மீன்கொத்தியாக மீனைப் பிடித்திருக்கிறாய் !
நீ மரங்கொத்தியாக மரத்தைத் துளைத்திருக்கிறாய் !

நீ செடியாக வளர்ந்திருக்கிறாய் !
நீ ரோஜாச்செடியாகப் பூத்திருக்கிறாய் !
நீ தாமரையாய் சேற்றில் சுகித்திருந்தாய் ! 
நீ கொடியாய் படர்ந்திருக்கிறாய் !
நீ மரமாய் நிழல் தந்திருக்கிறாய் !
நீ மாமரமாய் கல்லடி வாங்கியிருக்கிறாய் !
நீ தேக்குமரமாய் நிற்க வெட்டப்பட்டிருக்கிறாய் !
நீ முள்மரமாய் வேலியாய் நின்றிருக்கிறாய் !
நீ சந்தனமரமாய் மணம் வீசியிருக்கின்றாய் !
நீ ஆலமரமாய் விழுது விட்டிருக்கிறாய் !
நீ வேப்பமரமாய் நின்று கசந்திருக்கிறாய் !

நீ மீனாக வலையில் சிக்கியிருக்கிறாய் !
நீ திமிங்கலமாக படகைக் கவிழ்த்திருக்கிறாய் !
நீ ஆமையாக நிதானமாக ஊர்ந்திருக்கிறாய் !
நீ தவளையாய் பாம்பின் வாயில் அகப்பட்டிருக்கிறாய் !
நீ தட்டாம்பூச்சியாகப் பறந்திருக்கிறாய் !
நீ கோழியாக முட்டை இட்டிருக்கிறாய் !
நீ சேவலாய் விடியலில் கத்தியிருக்கிறாய் !
நீ தேளாக அடிபட்டிருக்கிறாய் !
நீ கரையானாக மரத்தை அரித்திருக்கிறாய் !

நீ கிருமியாய் பறவை உடலில் இருந்திருக்கிறாய் !
நீ நோய் கிருமியாக மனிதரின் உடலில் இருந்திருக்கிறாய்!
நீ மிருகங்களின் உடலில் கிருமியாய் வாழ்ந்திருக்கிறாய் !

நீ கந்தர்வனாக பறந்திருக்கிறாய் !
நீ குபேர பட்டணத்தில் வசித்திருக்கிறாய் !
நீ சந்திரலோகத்தில் சல்லாபம் செய்திருக்கிறாய் !
நீ அப்சரஸ் ஸ்த்ரீயாக நாட்டியமாடியிருக்கிறாய் !
நீ இந்திரலோகத்தில் சுகமாக காலம் கடத்தியிருக்கிறாய் !

நீ ராகஷசனாக ரத்தம் அருந்தியிருக்கிறாய் !
நீ அரக்கியாக காமத்தில் அலைந்திருக்கிறாய் !
நீ பேயாக பலரை பயமுறுத்தியிருக்கிறாய் !
நீ கொலைகாரனாகக் கொலை செய்திருக்கிறாய் !
நீ திருடியாகக் கொள்ளையடித்திருக்கிறாய் !
நீ அரசனாக இருந்திருக்கிறாய் !
நீ ஏழையாய் பாடுபட்டிருக்கிறாய் !
நீ இளவரசியாகப் பலரை ஏவியிருக்கிறாய் !

நீ உழைப்பாளியாய் உண்மையாய் உழைத்திருக்கிறாய் !
 நீ நாஸ்தீகனாய் உளரியிருக்கிறாய் !
நீ பைத்தியமாய் திரிந்திருக்கிறாய் !
நீ மூளை வளர்ச்சியில்லாமல் இருந்திருக்கிறாய் !
நீ ஊனத்தில் நொந்து போயிருக்கிறாய் !
நீ வேசியாய் உடலை விற்றிருக்கிறாய் !
 நீ உடல் சுகத்திற்காக பிசாசாக அலைந்திருக்கிறாய் !
 நீ அலியாய் வாழ்ந்து அழுதிருக்கிறாய் !


இப்படி எல்லாம் ஜனனம்,மரணம் என்று
பல பிறவிகள் சுழன்றடித்தாய் நீ . . .

இத்தனை உடம்புகளில்
சுற்றித்திரிந்த
ஆத்மா நீ . . .
நீ உடலைக்கடந்த ஆத்மா . . .
நீ உடலில் மாட்டிக்கொண்ட ஆத்மா . . .
அத்தைத் தின்று அங்கே கிடக்கும் ஆத்மா . . .
ஜோதி ஸ்வரூபனான ஆத்மா . . .
அழிக்கமுடியாத ஆத்மா . . .
அழியாத ஆத்மா . . . 
  
இப்பொழுது உன் நிகழ் காலம் . . .
இந்த ஜன்மாவில் உன் நிலைமை . . . 

க்ருஷ்ண க்ருபையால்
பூமியில் மனித ஜன்மாவில்
ஆணாகவோ,பெண்ணாகவோ,அலியாகவோ
மீண்டும் பிறந்திருக்கிறாய் ! ! !
இப்பொழுது மனித உடலில்
இருக்கும் அதே பழைய ஆத்மாவே நீ . . .
உடல்தான் மாறியிருக்கிறது !
உன்னுள் எதுவும் மாறவில்லை !
பசி,கோபம்,மயக்கம்,காமம்,களைப்பு,
என்று எதுவுமே மாறவில்லை . . .
நீ உன்னை உணர்ந்தால்
எல்லாம் மாறும் . . . 

நீ அனுபவிப்பதற்கு ஒன்றும்
பாக்கியில்லை !
ஒன்றே ஒன்றைத் தவிர . . .
அந்த ஒன்று பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனே !

ஒரு வேளை நீ இந்த ஜன்மாவை
வீணடித்துவிட்டால்
மீண்டும் இத்தனை பிறவி
சுழல வேண்டும் . . .
நான் உனக்குச் சொன்னது
மிகக் குறைவே !
மொத்தம் 84 லக்ஷம் உடல்கள் உண்டு !

84 லக்ஷம்...எத்தனைக் கஷ்டம் தெரியுமா . . .

பட்டுப்பூச்சியானால் கொதிக்கிற
வென்னீரில் உன்னைக் கொல்வார் . . .

மானானால் சிங்கம் உன்னை
பாய்ந்துக் கொல்லும் . . .

பாம்பானால் உன்னை உலகமே
அடித்துக்கொல்லும் . . .

சந்தனமரமானால் உன்னை உலகம்
வெட்டி,தேய்த்து விடும் . . .

குரங்கானால் உன்னை வைத்து
வித்தை காட்டுவார் . . .

வேசியானால் உன் உடலை
அனுபவித்து உன்னை துடிக்கவைப்பர் . . .

அரசனானால் உன்னைக் கொல்ல
உன் வேலையாளே முயற்சிப்பர் . . .

இப்படியே பல கோடி
வருஷங்கள்
சுற்றுவாய் . . .
மீண்டும் இது போல் 
ஒரு
மனிதஜன்மா கிடைக்கும் . . .

மீண்டும் கர்ப்பவாசம் . . .
மீண்டும் ஜனனம் . . .
மீண்டும் தாய்,தந்தை,சொந்தம் . . .
மீண்டும் கணவன்,மனைவி,குழந்தைகள் . . .
மீண்டும் சொந்தங்கள்,நண்பர்கள்,விரோதிகள் . . .
மீண்டும் வெயில், பனி, மழை . . .
மீண்டும் வியாதி,வைத்தியம்,வைத்தியன் . . .
மீண்டும் பசி,தூக்கம்,களைப்பு . . .
மீண்டும் பயம்,துன்பம்,மன உளைச்சல் . . .
மீண்டும் சந்தேகம்,குழப்பம்,அழுகை . . . 
 மீண்டும் மரணம் . . .
மீண்டும் ஒரு ஜனனம் . . .

போதாதோ . . ?
இன்னும் தேவையோ . . ?





இதிலிருந்து தப்பிக்கவேண்டாமா . . ?

ஓடு . . .தப்பித்துக்கொள் . . . காப்பாற்றிக்கொள் !

உடனே "க்ருஷ்ணா" என்று சொல் !
இப்பொழுதே க்ருஷ்ணனின் திருவடியைப் பிடி !
இன்றே சத்சங்கத்தில் ஈடுபடு !
உன்னை க்ருஷ்ணனிடம் தந்துவிடு !
உன்னை குருவிடம் ஒப்படைத்துவிடு !

விட்டுவிடாதே !
ஜாக்கிரதை . . .வாழ்கை உன் வசத்திலில்லை !
நிகழ்வுகள் உன் இஷ்டத்திலில்லை !
காலத்தின் பிடியில் நீ இருக்கிறாய் . . .ஜாக்கிரதை . . .

இப்பொழுதே உன் எதிர்காலத்தை
சரியாக்கிக்கொள் . . .

சரியாக்கிக்கொண்டபின்
உன் எதிர்காலம்
எப்படியிருக்குமென்று சொல்கிறேன் . . .
அதையும் தெரிந்துகொள் !

மனதில் நிம்மதியிருக்கும் !
புத்தியில் தெளிவு பிறக்கும் !
சிந்தனையில் ஒரு நேர்த்தி இருக்கும் !
வாழ்க்கையின் யதார்த்தம் புரியும் !
உடல் உன் சொல்படி கேட்கும் !
இந்திரியங்கள் உன் இஷ்டப்படி நடக்கும் !
நல்லவைகள் உனக்கு வசப்படும் !
தீயவைகள் பயந்து விலகும் !
ஆனந்தம் உன்னை தோளில் சுமக்கும் !
பக்தி உன்னைக் கொஞ்சும் !
ஞானம் உனக்கு விசிறி வீசும் !
வைராக்கியம் உன் கைகோர்த்து நடக்கும் !
விதி உனக்கு அடிபணிந்து கிடக்கும் !
மரணம் உன்னிடம் பயப்படும் !

இந்த சரீரத்தின் முடிவில்

ஸ்ரீ க்ருஷ்ணன் உனக்கு நித்யமான,
சுகமான,கவலையில்லாத,துர்நாற்றமில்லாத,
திவ்யமான சரீரம் தருவான் . . .  

எமதர்மன் உனக்கு வேலைக்காரனாவான் !
விஷ்ணுதூதர்கள் உன் ஏவலுக்கு காத்திருப்பார்கள் !
மஹாத்மாக்கள் உன்னைக் கொண்டாடுவார்கள் !
வைகுந்தம் உனக்காகத் திறக்கும் !

அங்கே உனக்கு. . .
 நான் ஏன் சொல்ல வேண்டும் . . ?
நீயே போய் தெரிந்து கொள் ! ! !







Read more...

வெள்ளி, 28 மே, 2010

வா ! நரசிம்மா ! வா!

ராதேக்ருஷ்ணா

நரசிம்மா !
அழகிய சிங்கமே !
ப்ரஹ்லாத வரதா !

வா ! நரசிம்மா ! வா!
என் அஹம்பாவத்தைக்
கிழித்துப்போடும் !

வா ! நரசிம்மா ! வா!
என் சுயநலத்தைக்
கொன்றுபோடும் !

வா ! நரசிம்மா ! வா!
என் காமத்தை
அழித்துப்போடும் !

வா ! நரசிம்மா ! வா!
என் கோபத்தைக்
இல்லாமல் செய்யும் !

வா ! நரசிம்மா ! வா!
என் குழப்பத்தை
வதம் செய்யும் !

வா ! நரசிம்மா ! வா!
என் சந்தேகத்தைக்
குடித்துவிடும் !

வா ! நரசிம்மா ! வா!
என் பாவத்தை மாலையாகப்
போட்டுக்கொள்ளும் !

வா ! நரசிம்மா ! வா!
எனக்கு ப்ரஹ்லாதனைப்போல்
பக்தியைத் தாரும் !

வா ! நரசிம்மா ! வா!
எனக்கு தடைபடாத நாமஜபத்தை
அருள்செய்யும் !

வா ! நரசிம்மா ! வா!
எனக்கு சுத்தமான ஞானத்தை
தந்தருளும் !

வா ! நரசிம்மா ! வா!
எனக்கு வைராக்யத்தைக்
கொடுத்துவிடும் !

வா ! நரசிம்மா ! வா! 
 என்னை இந்த ஸம்சாரத்திலிருந்து
விடுதலை செய்யும் !

வா ! நரசிம்மா ! வா!
இந்த கோரமான மனிதரிடமிருந்து
என்னைக் காப்பாற்றும் !

வா ! நரசிம்மா ! வா!
உன் அபயக்கரங்களை
என் தலையில் வையும் !

வா ! நரசிம்மா ! வா!
இந்த அடியேனை உன்
மடியில் அமர்த்திக்கொள்ளும் !

வா ! நரசிம்மா ! வா!
உன் திருநாக்கால் என்னையும்
நக்கி சுத்தம் செய்யும் !

வா ! நரசிம்மா ! வா!
உன் திருவடியில் இந்த
ஜந்துவையும் வைத்துக்கொள் !

வா! நரசிம்மா ! வா!
இந்த உடல் முடியும் சமயத்தில்
உன் மடியில் என்னை
வைத்துக்கொள்ளும் !

நான் ப்ரஹ்லாதன் அல்ல !
நான் இரண்யகசிபுதான் !
அதனால் இந்த உடலைக்
கிழித்துப்போடும் !
இந்த உடலால் ஒரு
நல்லவையும் சம்பவிக்கவில்லை !

வீணடித்துவிட்டேன் ஜன்மா முழுவதையும் !
ஒரு நல்ல காரியமும் செய்ததில்லை மறந்தும் !
அதனால் கிழித்துவிடும் !
உன் கோபத்தை என் மீது காட்டி
என்னைக் காப்பாற்றும் !

எனக்கு கருணையே வேண்டாம் !
உன் கோபம் ஒன்றுதான்
என்னை சரிசெய்யும் !

வா ! நரசிம்மா ! வா!
கொன்று போடு !
கிழித்துப் போடு !
குடலை உருவி எடு !
ரத்தத்தைக் குடித்து விடு !

அப்போதாவது
நான் உருப்படுகிறேனா என்று
பார்க்கலாம் . . .

வா ! நரசிம்மா ! வா!
சீக்கிரம் வா . . .
உடனே வா . . .
விரைந்தோடி வா . . .

உக்கிர நரசிம்மனாக வா . . .

என்னை இல்லாமல் செய்ய வா . . .
வா ! நரசிம்மா ! வா!
  
 

Read more...

வைகாசி விசாகம் - 27/05/2010

ராதேக்ருஷ்ணா

வைகாசி விசாகம் !
எங்கள் ஆழ்வாரின் பிறந்த நாள் !
க்ருஷ்ணனின் நம்மாழ்வாரின் பிறந்த நாள் !

கலியுகத்தின் முதல் பக்தன்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்த நாள் !

உடையநங்கையின் தவப் புதல்வன்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்த நாள் !

உத்தமர் காரியின் அன்புச் செல்வன்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்த நாள் !

திருக்குறுங்குடி நம்பியின் ஆசீர்வாதத்தில் பிறந்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்த நாள் !

  பகவான் ஸ்ரீ ராமனின் கலியுக அவதாரம்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

திருப்புளியாழ்வாரான லக்ஷ்மணனின் மடியிலிருக்கும்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

பிறக்கும்பொழுதே சடம் என்ற
மாயாவாயுவை விரட்டி சடகோபன்
என்ற திருநாமம் அடைந்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் ! 

பிறந்த 12ம் நாள் தவழ்ந்து,
புளியமர பொந்தில்,பத்மாசனமிட்டு அமர்ந்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

16 வருஷம் மல,மூத்திரம் விடாமல்,
அன்னம் சாப்பிடாமல்,தண்ணீர் அருந்தாமல்,
தியானத்திலிருந்த,மேனி துளியும் வாடாத
 ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

அன்னை உடையநங்கை அணிவித்த
மகிழம்பூ மாலையையே ஆபரணமாகக் கொண்ட,
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

பலரும் முயன்றும்,பலவிதத்தில் முயன்றும்,
துளியும் தியானம் கலையாத,கலைக்கமுடியாத
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் ! 

ஒரு குண்டுக்கல்லை மதுரகவியாழ்வார்
எடுத்துக்கிழே போட அதைக்கேட்டுக் கண் விழித்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்
எத்தைத் தின்று எங்கே கிடக்கும் என்ற கேள்வியை
மதுரகவியாழ்வார் கேட்க,அதற்கு புன்னகை பூத்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

அத்தை தின்று அங்கே கிடக்கும் என ஆத்மாவின்
நிலைமையை உள்ளபடி பதிலாய் சொன்ன
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

கிழவரான மதுரகவியாழ்வாரைச் சிஷ்யனாகத்
 தன்னுடைய 16ஆவது வயதில் ஏற்றுக்கொண்ட
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

4 வேதங்களையும் தமிழில்,
திருவாய்மொழியாக,திருவாசிரியமாக,திருவிருத்தமாக,
பெரியதிருவந்தியாகத் தந்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

உண்ணும் சோறு,பருகும் நீர்,தின்னும் வெற்றிலையுமாகக்
கண்ணனைக் கலியுகத்தில் எல்லோருக்கும் புரியவைத்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

32 வருஷங்கள் புளியமரப் பொந்திலேயே இருந்து,
108 திவ்யதேசப் பெருமாள்களையும்,
தன்னிடத்திற்கு வரவழைத்து,
வரிசையில் நிற்க வைத்த,
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று சொல்லி
எதிர்காலத்தில் பவிஷ்யதாசார்யனாக வரப்போகும்
ஸ்வாமி ராமானுஜரை முன்பே 
உலகுக்குக் காட்டிய
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

திருக்குறுகூர் என்ற திவ்யதேசத்தின் பெயரையே,
ஆழ்வார் திருநகரி என்று மாறவைத்த,
காரி மாறன்,பராங்குசன்,வகுளாபரணன்,
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

வேறொன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் என்று மதுரகவியாழ்வாரை
ஆசார்யபக்த சிரோன்மணியாக்கிய
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

எல்லோரும் மறந்த தமிழ் வேதமாகிய
நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை,
ஸ்ரீ மன் நாதமுனிகளுக்குத் தந்த
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !


கருவூர் சித்தரின் நாய் தினமும்
ஆழ்வார் திருநகரியில் எச்சிலை உண்ண,
அதற்கும் தாமிரபரணியின் வெள்ளத்தில்,
பரமபதத்தை அளித்த கருணாசாகரன்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

நவதிருப்பதி எம்பெருமான்களான
ஆழ்வார் திருநகரி பொலிந்து நின்ற பிரான்,
ஸ்ரீ வைகுண்டம் கள்ளபிரான்,
வரகுண மங்கை எம் இடர் கடிவான்,
திருப்புளியங்குடி காய்சினி வேந்தன்,
இரட்டைத்திருப்பதி அரவிந்தலோசனன்,
திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான், 
திருக்குளந்தை மாயக்கூத்தன்,
தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன்,
திருக்கோளூர் வைத்தமாநிதி என்று
எல்லோரையும் உற்சவத்தில் சேரவைக்கும்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !


இந்தப் பூவுலகில்,கலியுகத்தில்,
ஒன்றும் தெரியாத மூட ஜனங்களையும்
காப்பாற்ற இன்றும் ப்ரத்யக்ஷமாக
இருந்து அருள் பாலிக்கும்
ஸ்வாமி நம்மாழ்வாரின் பிறந்தநாள் !

ஸ்வாமி நம்மாழ்வாரே !
நாங்கள் மூடர்கள் !
நாங்கள் அகம்பாவிகள் !
நாங்கள் சுயநலவாதிகள் !
நாங்கள் வேஷதாரிகள் !
நாங்கள் நம்பிக்கையற்றவர்கள் !

தயவு செய்து எங்களைக் கரையேற்றும் !

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின்
திருவடிகளில்
எங்களுக்கு திடமான பக்தியும்,
நம்பிக்கையும் வர ஆசீர்வதியுங்கள் !

இந்த வைகாசி விசாகத்தில்
ப்ரார்த்திக்கிறோம் !
உம்மைப்போல் பக்தியே
வாழ்க்கையாக வாழ
எங்களுக்கு அனுக்ரஹம் செய்யுங்கள் !

உம் தரிசனமே எங்கள் பாக்கியம் !

கனவிலாவது ஒரு முறை
எங்களுக்கு
தரிசனம் தரலாகாதோ ! ? ! 

இந்த வருஷம்
வைகாசி விசாகத்திற்கு
உயிரோடிருக்கிறோம் . . .

அடுத்த வருஷமும்
உயிரோடிருந்து
உங்கள் கோயிலில்
உற்சவத்தைக் காண
ஆசையோடு ப்ரார்த்திக்கிறோம் . . .












வைகாசி விசாகம் முடியவேண்டாம் . . .

அடுத்த வைகாசி விசாகமே சீக்கிரம் வா ! 
 
  

Read more...

செவ்வாய், 25 மே, 2010

வாழ்ந்து காட்டு . . .



ராதேக்ருஷ்ணா


உன்னைக் கேவலப்படுத்தினவரின்
முன் வாழ்ந்து காட்டு . . .



உன்னைக் கஷ்டப்படுத்துபவரின்
முன் வாழ்ந்து காட்டு . . .



உனக்கு நம்பிக்கைத் துரோகம்  
செய்தவர் முன்  வாழ்ந்து காட்டு . . .


உன் கடந்தகால தோல்விகளை
வெற்றியாக்கி வாழ்ந்து காட்டு . . .



உன்னை அவதூறு சொன்னவர்கள்
முன் வாழ்ந்து காட்டு . . .


உன்னை அழிக்க நினைப்பவர்கள் முன்
ப்ரஹ்லாதனைப் போல்
வாழ்ந்து காட்டு . . .


உன்னை அவமரியாதை செய்தவர்கள் முன்
த்ரௌபதியைப் போல்
வாழ்ந்து காட்டு . . .

உன்னைப் பற்றி அவதூறு பேசியவர்கள் முன்
ஸ்ரீமதி மீராவைப் போல்
வாழ்ந்து காட்டு . . .

உன்னை ஏளனமாகப் பார்த்தவர்கள் முன்
விதுரரைப் போல்
வாழ்ந்து காட்டு . . .

உன்னை ஒதுக்கித் தள்ளினவர்கள் முன்
ஹரிதாஸ் யவனைப் போல்
வாழ்ந்து காட்டு . . .

உன்னைப் பரிகசித்தவர்கள்
முன் பின்பழகிய பெருமாள் ஜீயரைப் போல்
வாழ்ந்துகாட்டு . . .

உன் மனதைக் காயப்படுத்தியவர்கள்
முன் ஸ்ரீமதி சக்கு பாயைப் போல்
வாழ்ந்துகாட்டு . . .

உன்னை அலட்சியம் செய்பவர் முன்
ஸ்ரீராமனின் தம்பி பரதனைப் போல் 
 வாழ்ந்துகாட்டு . . .

உன்னைத் துறும்பாக எடை போட்டவர்
முன் சத்ரபதி சிவாஜியைப் போல்
வாழ்ந்துகாட்டு . . .

உன்னை வேண்டுமென்றே சீண்டியவர்கள்
முன் மஹரிஷி வசிஷ்டரைப் போல்
வாழ்ந்துகாட்டு . . .

உன்னை அனாதையாக அலையவிடுபவர்கள்
முன் நாரத மஹரிஷியைப் போல்
வாழ்ந்துகாட்டு . . .

உனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் 
முன் பாண்டவர்களைப் போல்
வாழ்ந்து காட்டு . . .



உன்னை அவநம்பிக்கையில் அழுத்துபவர்கள்
முன் கூர்மதாஸரைப் போல் 
 வாழ்ந்து காட்டு . . .

உன் சத்தியத்தை அழிக்க நினைப்பவர்கள்
முன் ராஜா ஹரிச்சந்திரனைப் போல்
வாழ்ந்து காட்டு . . .

உன்னிடம் பொய் சொல்லி ஏமாற்றுபவர்
முன் சந்த் துகாராமைப் போல்
வாழ்ந்து காட்டு . . . 

உன்மீது வீண் பழி சுமத்துபவர்
முன் திருமழிசை ஆழ்வாரைப் போல்
வாழ்ந்து காட்டு . . .

வாழ்ந்து காட்டு . . .
வாழ்ந்து காட்டு . . .
வாழ்ந்து காட்டு . . .

வாழ்ந்துகாட்ட வேண்டும் !
இதுவே உன் வாழ்வின் லக்ஷியம் !
இதுவே உன் வாழ்வின் சாதனை !
இதுவே உன் வாழ்வின் ப்ரயோஜனம்!


வாழ்ந்துகாட்ட வேண்டும் ! 
இதுவே இன்று முதல்
உன்
வாழ்வின் தாரக மந்திரமாகட்டும் !

எது எப்படி நடந்தாலும்,
யார் என்ன செய்தாலும்,
நீ உலகில் வாழ்ந்துகாட்ட வேண்டும் !

உன் க்ருஷ்ணன் உன்னோடு இருக்கிறான் !
நீ வாழ்ந்து காட்டவேண்டும் !

உலகில் உனக்கென்று ஒரு இடம் இருக்கிறது!
உன் க்ருஷ்ணன் உனக்கென தந்த இடம் !
 உன் க்ருஷ்ணன் உனக்கென தந்த ப்ரசாதம் !
உன் க்ருஷ்ணன் உனக்கென தந்த வாழ்க்கை !

இதில் வாழ உனக்கு முழு அருகதை உண்டு !

நீ வாழ்ந்துகாட்ட வேண்டும் !
அதைக் கண்டு உலகம் ப்ரமித்து நிற்கவேண்டும் !
 அதைப் பார்த்து க்ருஷ்ணன் கைதட்ட வேண்டும் !

அதைக்கேட்டு நான் எழுந்து நின்று
உனக்கு மரியாதை செய்யவேண்டும் ! ! !

நான் தயாராகிவிட்டேன் . . .
க்ருஷ்ணன் எப்போதோ தயாராகிவிட்டான் . . .

இனி
நீ தான் வாழ்ந்துகாட்ட வேண்டும் . . .








Read more...

வியாழன், 20 மே, 2010

எங்கள் குருஜீஅம்மா !

ராதேக்ருஷ்ணா

பிறந்த நாள் !
இன்று பிறந்த நாள் !

எங்கள் குமுதவல்லியின் பிறந்தநாள் !
எங்கள் பெருந்தேவியின் பிறந்தநாள் !
எங்கள் வேதவல்லியின் பிறந்தநாள் !

எங்கள் கோபாலக்ருஷ்ணரின்
பத்னிக்குப் பிறந்தநாள் !

ராதேக்ருஷ்ணாசத்சங்கத்தின்
ஸ்தாபகரின் பிறந்தநாள் !

பல குழந்தைகளின் தாய்க்கு
பிறந்தநாள் !

பலரின் வழிகாட்டிக்கு
பிறந்தநாள் !

க்ருஷ்ணனின் கோபிக்கு
பிறந்தநாள் !

ப்ருந்தாவனத்திற்கு மட்டுமே
ஏங்கும் தாஸியின் பிறந்தநாள் !

ராதிகாவின் தோழிக்குப்
பிறந்தநாள் !

ராஜாமடத்தின் செல்லத்துக்குப்
பிறந்தநாள் !

ஸ்ரீநிவாஸராகவரின் புதல்விக்குப்
பிறந்தநாள் !
  
எங்கள் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மாவுக்குப்
பிறந்தநாள் ! 
 
என் குருஜீஅம்மாவின்
பிறந்தநாள் !

எங்கள் வாழ்வின் பிறந்தநாள் !

எங்கள் பக்தியின் பிறந்தநாள் !

எங்கள் நாமஜபத்தின் பிறந்தநாள் !

எங்கள் ஞானத்தின் பிறந்தநாள் !

எங்கள் வைராக்கியத்தின் பிறந்தநாள் !

எங்கள் ஆசீர்வாதத்தின் பிறந்தநாள் !

எங்கள் தாயாரின் பிறந்தநாள் !

எங்கள் குழந்தையின் பிறந்தநாள் !

எங்கள் நலம் விரும்பியின் பிறந்தநாள் !

எங்கள் வாழ்வின் பிறந்தநாள் !

ராதேக்ருஷ்ணா !

ஒரு வேளை இந்த தினத்தில்
1946ம் வருடம்
குருஜீ அம்மா பிறக்கவில்லையென்றால்  . . .

ஸ்ரீநிவாஸராகவருக்கு ஒரு
அழகான புதல்வி
கிடைத்திருக்கமாட்டாள் ! 

கோபாலக்ருஷ்ணருக்கு ஒரு
அற்புதமான துணைவி
கிடைத்திருக்கமாட்டாள் . . .

க்ருஷ்ணனுக்கு ஒரு
நல்ல பக்தை
கிடைத்திருக்கமாட்டாள் . . .




உலகத்திற்கு
ராதேக்ருஷ்ணா சத் சங்கம்
கிடைத்திருக்காது . . .

எத்தனையோ
சம்சாரிகளுக்கு நாமஜபம்
தெரிந்திருக்காது . . .

பல மூடர்களுக்கு
"ராதேக்ருஷ்ணா"
சொல்லத் தெரிந்திருக்காது . . .

பல குழந்தைகளுக்கு
சத்சங்கம்
கிடைத்திருக்காது . . .

நிறைய மூடஜனங்களுக்கு
க்ருஷ்ண பக்தி
புரிந்திருக்காது . . .

பல ஏழைகளுக்கு
ஞான தனம்
லபித்திருக்காது . . .

இதோ...இந்த ஆனந்தவேதம்
நான் எழுதியிருக்கமாட்டேன் . . .
நீயும் படித்திருக்கமாட்டாய் . . . 

ஐயோ !
வீணாகப் போயிருப்போம் !

நல்ல வேளை !

குருஜீ அம்மா பிறந்தார்களோ,
எங்கள் பிறவியும்
பயனுடையதாயிற்று ! ! !

குருஜீ அம்மா,
எங்களைப் பிடித்து
இழுத்தார்களோ,
நாங்கள் யமனிடமிருந்தும்,
நரக வேதனைகளிலிருந்தும்,
தப்பித்தோம். . .பிழைத்தோம் . . .

குருஜீஅம்மாவை
எங்களுக்குத் தந்த
எங்கள் க்ருஷ்ணனுக்கு

கோடானுகோடி வந்தனங்கள் !

ராதேக்ருஷ்ணனை 
எங்களுக்குத் தந்த
எங்கள் குருஜீஅம்மாவிற்கு
கோடானுகோடி நன்றிகள் !

சர்வம் குரு அர்ப்பணம் !

க்ருஷ்ணா !
உன்னிடம் ஒரு ப்ரார்த்தனை !

எங்கள் குருஜீ அம்மாவை
சௌக்கியமாக,சந்தோஷமாக,
ஆரோக்கியமாக,நிம்மதியாக,
ஒரு குறையில்லாமல்
குறைந்தது ஒரு 100 வருஷங்களாவது
இந்தப் பூமியில்
வாழ வை !

குருஜீ அம்மா !
உங்களிடம் ஒரு வேண்டுகோள் !
நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு. . .

 எங்களுக்கு நல்ல புத்தியில்லை !
எங்களுக்கு நல்ல நாமஜபமில்லை !
எங்களுக்கு நல்ல திடமில்லை !
எங்களுக்கு நல்ல நம்பிக்கையில்லை !
 எங்களுக்கு நல்ல வினயமில்லை !
எங்களுக்கு நல்ல பக்தியில்லை !
எங்களுக்கு நல்ல க்ருஷ்ண ப்ரேமையில்லை ! 

ஆனால் நிச்சயம் ஒரு நாள்
உங்களின் ஆசிர்வாதத்தால்,
ஒரு நாள்
நாங்களும் நல்ல பக்தர்களாக,
நல்ல பக்தைகளாக
மாறியே தீருவோம் ! ! !

தயவு செய்து . . .
எங்களை தள்ளி விடாதீர்கள் . . .

உங்களைத் தவிர
இந்த உலகில்
எங்களுக்கு யாருமில்லை . . .
எங்களுக்கு யாரையும் தெரியாது . . .

எப்படியாவது,
எங்களை இந்த கோரமான
சம்சாரத்திலிருந்து
கரையேற்றிவிடுங்கள் . . .

எங்களுக்கு
உங்களை உள்ளபடி
புரியவுமில்லை . . .

ஒரு நாள் புரியும் . . .
எங்களின்
உடல் கீழே
விழுமுன் . . .
ஒரு நாள் புரியும் . . . 
 

ஜெய் ஸ்ரீ பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மாவுக்கு ஜெய் ! 
 

Read more...

புதன், 19 மே, 2010

நீ செய்யவேண்டியது . . .



ராதேக்ருஷ்ணா

நீ செய்யவேண்டியது . . .
உபசரிக்க வேண்டியது - சத் சிஷ்யர்களை
பேச வேண்டியது - குரு மஹிமையை
நினைக்க வேண்டியது - குரு க்ருபையை
கடைபிடிக்க வேண்டியது - குரு வார்த்தையை
ரகசியமாக வைக்கவேண்டியது - உபதேசத்தை
 சம்பாதிக்க வேண்டியது - க்ருஷ்ண அனுபவங்களை
இருக்க வேண்டியது - பூமியில்
அடைய வேண்டியது - க்ருஷ்ண பக்தியை
 

 தூங்க வேண்டியது - குரு ஸ்மரணத்தில்
எழுந்திருக்க வேண்டியது - ஞானத்தில்
அனுபவிக்கவேண்டியது - வைராக்கியத்தில்  
கண்டிக்க வேண்டியது - ஆசையை 
விடவேண்டியது - அகம்பாவத்தை
ஒதுக்கவேண்டியது - மமகாரத்தை
தள்ள வேண்டியது - பயத்தை
நம்பக் கூடாதது - மனிதரின் வார்த்தையை
நம்பவேண்டியது - க்ருஷ்ண நாமத்தை


வாழவேண்டியது - ப்ருந்தாவனத்தில்

 கலக்கவேண்டியது - ப்ரேமசங்கமத்தில்
லயிக்கவேண்டியது - சேவாகுஞ்சத்தில்
 உயிரைவிடவேண்டியது - குரு சரணத்தில்

வேறு என்ன சொல்லவேண்டும் நான் ?

Read more...

செவ்வாய், 11 மே, 2010

கொள்ளையடி !


ராதேக்ருஷ்ணா


கொள்ளை !
பகல் கொள்ளை !
முகமூடிக் கொள்ளை !
நூதனக் கொள்ளை !
துணிகரக் கொள்ளை !

எத்தனை கொள்ளைகள் !
ஒவ்வொரு நாளும் உலகத்தில்
பலவிதத்தில் கொள்ளைகள்
நடக்கிறது !

நாமும் போவோம் வா !
கொள்ளையடிக்க !

இதுவரை யாரும் கொள்ளையடிக்காத
பல விலை உயர்ந்த பொருட்கள்
இந்த பூமியில் கொட்டிக்கிடக்கிறது !

புறப்படு !
முடிந்தவரை கொள்ளையடிப்போம் !

இவைகளைக் கொள்ளையடித்துவிட்டால்
பிறகு,
யாரிடமும் கெஞ்சவேண்டாம் !
எதற்கும் பயப்படவேண்டாம் !
உன் வம்சமே சௌக்கியமாயிருக்கலாம் !

ஆயுதம் வேண்டாம் !
கூட்டம் வேண்டாம் !
இருட்டு வேண்டாம் !
முகமூடி வேண்டாம் !
கத்தி வேண்டாம் !

அதோ ப்ரஹ்லாதன் !
பிடி !
ப்ரஹ்லாதனிடத்தில் தைரியத்தைக்
கொள்ளையடி !

ஆஹா! விதுரர் !
விடாதே !
விதுரரிடத்தில் வினயத்தைக்
கொள்ளையடி !

அங்கே பார் ! கோபிகைகள் !
சுற்றி வளை !
கோபிகைகளிடத்தில்
கொட்டிக்கிடக்கும் ப்ரேமையைக்
கொள்ளையடி !

ஜோர் ! ஜோர் ! துருவன் !
இறுக்கிப்பிடி !
துருவனிடத்தில் த்ருடத்தைக்
கொள்ளையடி !

சத்தம் போடாதே !
யசோதா மாதா தயிர் கடைகிறாள் !
பின்னே சென்று கண்ணை மூடு !
யசோதா மாதாவிடத்தில்
வாத்ஸல்யத்தைக்
கொள்ளையடி !

மரத்திலிருந்து கீழே குதி !
நாரதரை தடுத்து நிறுத்து !
நாரதரிடமிருந்து
நாம ஜபத்தைக்
கொள்ளையடி !

புதரில் ஒழிந்து கொள் !
அதோ ஒரு கிளி வருகிறது !
சுகப்ரும்ம கிளி வருகிறது !
அதன் வாயில் ஒரு பழம் இருக்கிறது !
பாகவதமாகிய பழத்தை
சுகப்ரும்மத்திடமிருந்து
கொள்ளையடி !

கையில் வில்லோடு
அர்ஜுனன் வருகிறான் !
ஒடிப் போய் பிடி !
அர்ஜுனனிடத்தில்
பகவத் கீதையைக்
கொள்ளையடி !

படுக்கையில் பீஷ்மர்
கிடக்கிறார் !
மேலே விழுந்து
விஷ்ணு சஹஸ்ர நாமத்தைக்
கொள்ளையடி !

தன்னை மறந்து
சந்த் துகாராம் பஜனை செய்கிறார் !
ரஹஸ்யமாக,அவருக்குத் தெரியாமல்
விட்டல் பஜனையைக்
கொள்ளையடி !

சப்தம் போடாதே !
வடுக நம்பி வருகிறார் !
ஆசார்ய கைங்கர்யத்தை
வடுகநம்பியிடமிருந்து
கொள்ளையடி !

ராஜா அம்பரீஷன் உட்கார்ந்திருக்கிறான் !
சடக்கென்று அவன்
வயிற்றைப் பிடித்து
விரதத்தைக் கொள்ளையடி !

ஜடபரதர் தனிமையிலிருக்கிறார் !
காலைப் பிடித்து
ஜடபரதரிடமிருந்து
வைராக்யத்தைக் கொள்ளையடி !

சத்ரபதி சிவாஜி வருகிறான் !
குதிரை மீதேறி அவனைத் துரத்து!
சத்ரபதி சிவாஜியிடமிருந்து
வீரத்தைக் கொள்ளையடி !

சுநீதி தேவி ப்ரார்த்தனை செய்கிறாள் !
மெதுவாகச் சென்று
துருவனின் தாயார் சுநீதி தேவியிடமிருந்து
ப்ரார்த்தனையைக் கொள்ளையடி !

நில்! கவனி ! தயாராகு !
ஏகநாதர் கோதாவரியில் குளிக்கிறார் !
உள் நீச்சல் அடித்து அவரைப் பிடி !
ஏகநாதரிடமிருந்து பொறுமையைக் கொள்ளையடி !

லக்ஷ்மணன் வில்லும் அம்புமாக அலைகிறான் !
ஜாக்கிரதையாக ஓடி அவனைக் கைது செய்!
லக்ஷ்மணனிடமிருந்து
பகவத் கைங்கர்யத்தைக் கொள்ளையடி !

கையில் கிளியோடு ஆண்டாள் சிரிக்கிறாள் !
அவள் தூங்கும்போது
அருகில் நில் !
ஆண்டாளிடமிருந்து
க்ருஷ்ண கனவைக் கொள்ளையடி !

அதோ பக்த ராஜ அனுமன் !
தனியாக காட்டில் அலைகிறார் !
அமைதியாக அவர் பக்கத்தில் செல் !
ஆஞ்சனேயரிடமிருந்து
பக்தி அனுபவத்தைக் கொள்ளையடி !

ஆழ்வார் திருநகரியில்,புளிய மர பொந்தில்
ஸ்வாமி நம்மாழ்வார் அமர்ந்திருக்கிறார் !
ஒரு குண்டுக் கல்லைத் தூக்கிக் கீழே
போட்டு, ஸ்வாமி நம்மாழ்வாரிடமிருந்து
தியானத்தைக் கொள்ளையடி !

கையில் த்ரிதண்டத்துடன்,
ஸ்வாமி இராமானுஜர் திருக்கோஷ்டியூர்
கோயில் கோபுரத்தில் இருக்கிறார் !
யதிராஜர் எம்பெருமானார் பவிஷ்யதாசார்யர்
ஸ்வாமி இராமானுஜரிடமிருந்து
தியாகத்தைக் கொள்ளையடி !

அதோ ஊர்ந்து ஊர்ந்து
கை காலில்லாத கூர்மதாஸர் செல்கிறார் !
அவருக்கு பணிவிடைகள் செய்து,
கூர்மதாஸரிடமிருந்து விடாமுயற்சியைக்
கொள்ளையடி !

அங்கே பார் ! தன்னை மறந்து
பூரி ஜகந்நாதனின் சன்னிதியில்
ஸ்ரீ க்ருஷ்ணசைதன்ய மஹாப்ரபு
ப்ரேமையில் நாமஜபத்தோடு நாட்டியமாடுகிறார் !
இறுக்கி ஒரு ப்ரேமாலிங்கனம்
செய்து ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரிடமிருந்து
ப்ரேம நாட்டியத்தைக் கொள்ளையடி !

அரசவையில் சிரத்தையோடு
ஜனக மஹாராஜா உட்கார்ந்திருக்கிறார் !
அவர் அருகில் நின்று கொண்டு,
ஜனகருக்குத் தெரியாமல்
அவரிடமிருந்து கர்மயோகத்தைக் கொள்ளையடி !

திருவாலி திருநகரியில் பரிவேட்டையில்
திருமங்கையாழ்வார் தயாராயிருக்கிறார் !
அவருடைய வேலைக்காரனாக இருந்து,
திருமங்கையாழ்வாரிடமிருந்து ததியாராதனத்தைக்
கொள்ளையடித்துவிடு !

திருஅனந்தபுரத்தில் ஸ்ரீஅனந்தபத்மநாபரின்
சன்னிதியில்,ஆனந்த பாஷ்பத்தோடு,
புளகாங்கிதமாக,மஹாராஜா ஸ்வாதித் திருநாள்
கைகூப்பி தொழுதுகொண்டிருக்கிறார் !
அற்புதமான கவித்வத்தை
மஹாராஜா ஸ்வாதித் திருநாளிடமிருந்து
கொள்ளையடி !

பண்டரீபுரத்தில்,பாண்டுரங்கன் சன்னிதியில்,
அழகாக ஸ்ரீ நாமதேவர் பகவானுக்கு
நிவேதனம் செய்கிறார் !
அவருடன் தோழமையோடு பழகி
பகவத் நிவேதனத்தை
ஸ்ரீ நாமதேவரிடமிருந்துக் கொள்ளையடி !

குருவாயூரப்பனின் சன்னிதியில்
ஆனந்தமாக,குதூகலத்தோடு,
ஸ்ரீ நாராயண பட்டத்திரி நிற்கிறார்!
உத்தமமான ஸ்ரீமன் நாராயணீயத்தை
ஸ்ரீ நாராயண பட்டத்திரியிடமிருந்து
கொள்ளையடி !

மறைந்து கொள் !
சப்திக்கின்ற அலைகளினால் அலங்கரிக்கப்பட்ட,
கன்னியாகுமரியின் சமுத்திரத்தின் நடுவில்,
ஒரு பாறையில் சலனமில்லாத
ஒரு வீரத்துறவி உட்கார்ந்திருக்கிறார் !
அந்த வீரத்துறவியான ஸ்வாமி விவேகானந்தரின்
இரும்பு நெஞ்சத்தை வேகமாகக் கொள்ளையடி !

ஆஹா!ஐயா!ஜோர்!அற்புதம்!
ராதிகா ராணி அழகாக நிற்கிறாள் !
கண்களில் கண்ணீரோடு,
ராதையின் திருப்பாதத்தில் விழு !
ராதிகாவிடமிருந்து
க்ருஷ்ணனைக் கொள்ளையடி !

இன்னும் நிறைய கொள்ளையடிக்கலாம் !
ராத்திரி படுக்கையில் படுத்துக்கொண்டு,
நிறைய யோசனை செய் !

இன்னும் கோடி பக்தர்கள்
பூமியில் இருக்கிறார்கள் !
ஒவ்வொருவரிடமிருந்தும்
ஒவ்வொன்றைக் கொள்ளையடித்துவிடு !

உன் ஆயுள் முழுக்க இந்த சொத்து
உன்னோடிருக்கும் !

இவைகளைக் கொள்ளையடித்தால்
உனக்கு தண்டனை கிடையாது !

இந்தக் கொள்ளைக்கு
உனக்கு வைகுந்தத்தில்
நிரந்தர வாசம் கிடைக்கும் !

நீ இந்த உடலை விட்டுச் செல்லும்போது
இவைகள் உன் வம்சத்திற்குக்
கிடைக்கும் !

இந்தக் கொள்ளைக்கு
உனக்கு க்ருஷ்ணனின்
ஆசிர்வாதமும்,பக்தர்களின்
அனுக்ரஹமும் பூரணமாயுண்டு !

இந்தக் கொள்ளையடிக்கத்தான்
நான் பூமியில் வந்திருக்கிறேன் !

நிறைய கொள்ளையடித்து விட்டேன் !
ஆனால் போதுமென்று தோன்றவில்லை !
கொள்ளையடித்துக் கொண்டயிருக்கிறேன் !
ஆயுள் உள்ளவரை கொள்ளையடிப்பேன் !
இந்த உடல் போனபின்னும் திரும்ப
இன்னொரு உடல் என் கண்ணனிடம்
வாங்கிவருவேன் ! பிரளயத்தில் உலகம்
அழியும்வரை கொள்ளையடித்துக்கொண்டே
இருப்பேன் !

வைகுந்தம் போய் கொள்ளையடிப்பேன் !
எல்லோரிடமும் கொள்ளையடிப்பேன் !
எல்லாவற்றையும் கொள்ளையடிப்பேன் !

ஆனாலும் உனக்குச் சொல்லவேண்டுமென்று
என் கண்ணன் சொல்லிவிட்டான் !
நானும் சொல்லிவிட்டேன் !

நீயும் கொள்ளையடித்து அனுபவி !

Read more...

திங்கள், 3 மே, 2010

பசி !

ராதேக்ருஷ்ணா

பசி !
உலகின் ஆதாரம் பசி !
வாழ்க்கையின் ரஹஸ்யம் பசி !
எல்லா ஜீவராசிக்கும் பொதுவானது பசி !

பசியாயிருப்பது பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனே !


பசியினால்தான் ஆகாரத்திற்கு மரியாதை !


பசியினால்தான் ருசிக்கு மரியாதை !


பசியினால்தான் சமையலுக்கு மரியாதை !


பசியினால்தான் தாய்ப்பாலுக்கு மரியாதை !


பசியினால்தான் காய்கறிகளுக்கு மரியாதை !


பசியினால்தான் பழைய சாதத்திற்கு மரியாதை !

பசியினால்தான் உழைப்பிற்கு மரியாதை !



பசியினால்தான் நேர்மைக்கு மரியாதை !


பசியினால்தான் நியாயத்திற்கு மரியாதை !


பசியினால்தான் தர்மத்திற்கு மரியாதை !


பசியினால்தான் பணத்திற்கு மரியாதை !


பசியினால்தான் வயலுக்கு மரியாதை !


பசியினால்தான் தண்ணீருக்கு மரியாதை !


பசியினால்தான் மழைக்கு மரியதை !


பசியினால்தான் விவசாயத்திற்கு மரியாதை !


பசியினால்தான் விவசாயிக்கு மரியாதை !


பசியினால்தான் விளைச்சலுக்கு மரியாதை !


பசியினால்தான் சேமிப்பிற்கு மரியாதை !


பசியினால்தான் தானியங்களுக்கு மரியாதை !


பசியினால்தான் சமைப்பவருக்கு மரியாதை !


பசியினால்தான் காய்கறி கடைக்கு மரியாதை !


பசியினால்தான் பழங்களுக்கு மரியாதை !


பசியினால்தான் விரதத்திற்கு மரியாதை !


பசியினால்தான் ப்ராசதத்திற்கு மரியாதை !


பசியினால்தான் நிவேதனத்திற்கு மரியாதை !


பசியினால்தான் வெண்ணைக்கு மரியாதை !


பசியினால்தான் நெய்க்கு மரியாதை !


பசியினால்தான் எண்ணைக்கு மரியாதை !


பசியினால்தான் தேனுக்கு மரியாதை !


பசியினால்தான் சோளத்திற்கு மரியாதை !


பசியினால்தான் திணைமாவுக்கு மரியாதை !


பசியினால்தான் ஊறுகாய்க்கு மரியாதை !


பசியினால்தான் அப்பளத்திற்கு மரியாதை !


பசியினால்தான் வாழைப்பூவுக்கு மரியாதை !


பசியினால்தான் வாழைத்தண்டிற்கு மரியாதை !


பசியினால்தான் நேரத்திற்கு மரியாதை !


பசியினால்தான் ஆரோக்கியத்திற்கு மரியாதை !


பசியினால்தான் விலைவாசிக்கு மரியாதை !


பசியினால்தான் பொருளாதாரத்திற்கு மரியாதை !


பசியினால்தான் பதவிக்கு மரியாதை !


பசியினால்தான் தோட்டங்களுக்கு மரியாதை !

பசியினால் பண்டிகைகளுக்கு மரியாதை !


பசியினால்தான் திவசத்திற்கு மரியாதை !


பசியினால்தான் மலத்திற்கு மரியாதை !


பசியினால்தான் ஆராய்ச்சிக்கு மரியாதை !


பசியினால்தான் விஞ்ஞானத்திற்கு மரியாதை !


பசியினால்தான் மெய் ஞானத்திற்கு மரியாதை !


பசியினால்தான் வளர்ச்சிக்கு மரியாதை !


பசியினால்தான் வறட்சிக்கு மரியாதை !


பசியினால்தான் பஞ்சத்திற்கு மரியாதை !


பசியினால்தான் ஜீவராசிகளுக்கு மரியாதை !


பசியினால்தான் தாய்மைக்கு மரியாதை !


பசியினால்தான் தந்தைக்கு மரியாதை !


பசியினால்தான் கல்விக்கு மரியாதை !


பசியினால்தான் காதலுக்கு மரியாதை !


பசியினால்தான் கல்யாணத்திற்கு மரியாதை !


பசியினால்தான் பசும்பாலுக்கு மரியாதை !


பசியினால்தான் விருந்திற்கு மரியாதை !


பசியினால்தான் அன்னதானத்திற்கு மரியாதை !


பசியினால்தான் தர்மத்திற்கு மரியாதை !


பசியினால்தான் அனாதை இல்லங்களுக்கு
மரியாதை !


பசியினால்தான் முதியோர் இல்லங்களுக்கு
மரியாதை !


பசியினால்தான் அடுப்பிற்கு மரியாதை !


பசியினால்தான் அக்னிக்கு மரியாதை !


பசியினால்தான் சூரியனுக்கு மரியாதை !


பசியினால்தான் காற்றிற்கு மரியாதை !


பசியினால்தான் மேகத்திற்கு மரியாதை !


பசியினால்தான் கலைகளுக்கு மரியாதை !


பசியினால்தான் பாத்திரங்களுக்கு மரியாதை !


பசியினால்தான் பள்ளிக்கூடத்திற்கு மரியாதை !


பசியினால்தான் பலவித சுவைகளுக்கு மரியாதை !


பசியினால்தான் வேதத்திற்கு மரியாதை !


பசியினால்தான் தெய்வத்திற்கு மரியாதை !


பசியினால்தான் சுத்தத்திற்கு மரியாதை !


பசியால்தான் பூமிக்கு மரியாதை !


பசியினால்தான் வாழ்க்கைக்கு மரியாதை !


அதனால் ஒரு பொழுதும்
பசியை அல்பமாக நினைக்காதே !


பசியை ஒருநாளும் அவமதிக்காதே !


பசியைத் தள்ளிப்போடாதே !


பசியேயில்லாத ஜீவராசிகளே இல்லை !


ராதேக்ருஷ்ணா

வாழ்வில் பலவிதமான
பசி உண்டு !

எல்லோருக்கும் பொதுவானது
வயிற்றுப்பசி !

குழந்தைகளுக்கு
விளையாட்டுப் பசி !

இளவயதுக்காரர்களுக்கு
உடல் பசி !

படிப்பவர்களுக்கு
கேள்விப்பசி !

படிக்கமுடியாதவர்களுக்கு
அறிவுப் பசி !

பல பெண்களுக்கு
நகைப் பசி !

திருடர்களுக்கு
கொள்ளைப் பசி !

தீவிரவாதிகளுக்கு
கொலைப் பசி !

முதலாளிகளுக்கு
பணப் பசி !

தொழிலாளிகளுக்கு
சம்பளப் பசி !

வியாபாரிகளுக்கு
லாபப் பசி !

சோம்பேறிகளுக்கு
வெட்டிப் பசி !

கொசுக்களுக்கு
ரத்தப் பசி !

ராஜாக்களுக்கு
ராஜ்யப் பசி !

அரசியல்வாதிகளுக்கு
பதவிப் பசி !

சுயநலவாதிகளுக்கு
தன்னலப் பசி !

பொதுநலவாதிகளுக்கு
கடமைப் பசி !

குடிகாரர்களுக்கு
போதைப் பசி !

கவிஞர்களுக்கு
கற்பனைப் பசி !

விஞ்ஞானிகளுக்கு
ஆராய்ச்சிப் பசி !

அடிமைகளுக்கு
சுதந்திரப் பசி !

ஏழைகளுக்கு
உணவுப் பசி !

பணக்காரர்களுக்கு
நிம்மதிப் பசி !

தனிமையிலிருப்பவர்களுக்கு
துணைப் பசி !

கூட்டதிலிருப்பவர்களுக்கு
தனிமைப் பசி !

நோயாளிகளுக்கு
ஆரோக்யப் பசி !

சங்கீதப் பிரியர்களுக்கு
சப்தப் பசி !

பேச்சாளர்களுக்கு
கூட்டப் பசி !

ஊமைகளுக்கு
மொழிப் பசி !

குருடர்களுக்கு
விழிப் பசி !

விரோதிகளுக்கு
சண்டைப் பசி !

தூதுவர்களுக்கு
சமாதானப் பசி !

பதவியிலிருப்பவர்களுக்கு
அதிகாரப் பசி !

பயந்தவர்களுக்கு
தைரியப் பசி !

செடி,கொடிகளுக்கு
தண்ணீர் பசி !

சம்சாரிகளுக்கு
சொத்துப் பசி !

வீரர்களுக்கு
வெற்றிப் பசி !

ஞானிகளுக்கு
ஞானப் பசி !

விரக்தர்களுக்கு
வைராக்யப் பசி !

பக்தர்களுக்கு
பக்திப் பசி !

கோபிகைகளுக்கு
ராசக்ரீடைப் பசி !

ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யருக்கு
ப்ருந்தாவனப் பசி !

ஸ்வாமி ராமானுஜருக்கு
கருணைப் பசி !

ஸ்வாமி விவேகானந்தருக்கு
வீரப் பசி !

மீரா மாதாவிற்கு
நாம சங்கீர்த்தனப் பசி !

ராதிகாவிற்கு
க்ருஷ்ணப் பசி !

உனக்கு என்ன பசி ? ! ?

உன் பசியைப் பொறுத்து
உன் ஆகாரம் !

உன் ஆகாரத்தைப் பொறுத்து
உன் மனம் !

உன் மனதைப் பொறுத்து
உன் இந்திரியங்கள் !

உன் இந்திரியங்களைப் பொறுத்து
உன் உடல் !

உன் உடலைப் பொறுத்து
உன் வாழ்க்கை !

சரியான பசிக்கு
அற்புதமான ஆகாரம் !

இன்று உன் பசியை
தீர்மானம் செய் ! ! !


Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP