ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

வெற்றி கொள் !

ராதேக்ருஷ்ணா


உலகைத் திருத்த நீ யார் ?
உலகைத் திருத்த உனக்கு யார்
கட்டளையிட்டது ?


நீ திருந்தினால் உலகம்
தானாகத் திருந்தும் !


இனியாவது அடுத்தவரைத்
திருத்துவதை விட்டுவிட்டு
நீ திருந்துவதைப் பார் !


உன்னை உயர்த்திக்கொள் !


உன்னை திருத்திக்கொள் !


உன்னை மாற்றிக்கொள் !


உன்னை சோதித்துக்கொள் !


உன்னைப் புரிந்துகொள் !


உன்னைத் தெரிந்துகொள் !


உன்னை பண்படுத்திக்கொள் !


உன்னை பக்குவப்படுத்திக்கொள் !


உன்னை நல்லவற்றில்
ஈடுபடுத்திக்கொள் !


உன்னை கெட்டவற்றிலிருந்து
விலக்கிக்கொள் !


உன்னை பக்தர்களொடு
சேர்த்துக்கொள் !


உன்னை சத்சங்கத்தோடு
இணைத்துக்கொள் !


உன்னை சோம்பேறித்தனத்திலிருந்து
காத்துக்கொள் !


உன்னை அறியாமையிலிருந்து
காப்பாற்றிக்கொள் !


உன்னை பக்தியில்
அர்ப்பித்துக்கொள் !


உன்னை பகவானோடு
வைத்துக்கொள் !


உன்னை நாமஜபத்தோடு
கரைத்துக்கொள் !


உன்னைச் சரியாக
கவனித்துக்கொள் !


உன்னை வெற்றி கொள் !


உன்னை நீ வென்றுவிட்டால்
உலகில் நீயே
சந்தோஷமானவன்/சந்தோஷமானவள் !


இது க்ருஷ்ணன் மேல் சத்தியம் ! ! !





0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP