ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 மார்ச், 2010

தியானம் !


ராதேக்ருஷ்ணா

தியானம் செய் !
தினமும் தியானம் செய் !
விடாமல் தியானம் செய் !

ஆனால் எதைத் தியானம் செய்வாய் ?
எப்படித் தியானம் செய்வாய் ?
எந்த இடத்தில் தியானம் செய்வாய் ?

இன்றைய காலகட்டத்தில்
தியானம் என்று சொல்லி,
மக்களிடம் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர் !

ஜனங்களும் ஆட்டு மந்தைக்கூட்டம் போல்
அலைகின்றனர் !

எதை,எப்படி,எங்கு தியானம் செய்யவேண்டும்
என்று நம்முடைய ஆசார்யபுருஷர்கள்
சொல்லியிருக்கிறார்கள் !
நம்முடைய இதிஹாச,புராணங்களும்
மிக அழகாக சொல்லியிருக்கின்றன !

இதோ சொல்கிறேன் !
க்ருஷ்ணனின் கட்டளைப்படி
உனக்குச் சொல்கிறேன் !

செலவு இல்லாத ஒரு த்யானம் !
உன் ஆயுள் முழுக்க சத்தியமாக
உன்னால் செய்ய முடியும் !

நீ எந்த ஜாதியைச் சேர்ந்தவராக
இருந்தாலும் செய்ய முடிந்த தியானம் !

துருவனுக்கு நாரதர் சொன்னது போலே
மிகச் சுலபமான ஒரு த்யானம் !

நிச்சயமாக உன்னால் முடியும் !
முயன்று பார் !

முதலில் பகவான் க்ருஷ்ணனிடம்
"க்ருஷ்ணா! எனக்கு உன்னை
தியானம் செய்யவேண்டும் !
என் மனதை அடக்கும் சக்தி
எனக்கில்லை ! அதனால் ஹே ப்ரபோ !
தயவு செய்து என் மனதை நீயே
நல்வழிப்படுத்து !உன் திருவடிகளில்
சரணாகதி செய்கிறேன் !" என்று
மனமுருகி ப்ரார்த்தனை செய் !

பிறகு "க்ருஷ்ணா" என்று
வாயால் சொல்லிக்கொண்டேயிரு !
நாமத்தைக் கணக்குப் பண்ணாதே !

உன் குருவை நினைத்துக்கொள் !
ஒரு வேளை உனக்கு குரு என்று
யாரும் இல்லையென்றால் க்ருஷ்ணனையே
குருவாக நினைத்துக்கொள் !

க்ருஷ்ணா என்று சொல் !
சகலவிதமான துயரங்களையும் அறுக்கும்
பலமுடைய பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனுடைய
அழகான சிவந்த
செந்தாமரைப் பாதங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
செதுக்கி வைத்தாற்போலிருக்கும்,
முத்து முத்தான கால்
விரல்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அழகான கால் விரல்களில் இருக்கும்
மோதிரங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கால் விரல்களில் இருக்கும்
சந்திரன் போல் ஒளி வீசும்,
அற்புதமான நகங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய
கடல் போன்ற
கரு நீலத் திருமேனியின்
வண்ணத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
தங்கத் தண்டையையும்,தங்கச் சலங்கையும்
அணிந்த,அழகுப் பெட்டகமான
கணுக்கால்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பார்த்தவுடன் மனதைப் பறிக்கும்
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத
முழங்கால்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
இரண்யகசிபுவைக் கிழித்துப்போட,
நரசிம்மனாய் வாசற்படியில் அமர்ந்து
அவனைப் போட்டுக்கொண்டத்
திருத்தொடைகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
உள்ளழகை மறைத்துத் தான் மட்டுமே
அனுபவித்து,அதில் திளைக்கும்,
அவன் இடுப்பை அணைத்துக்கொண்டிருக்கும்
திவ்யமான பீதாம்பரத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
யாருக்கும் உள்ளபடி கற்பனை
செய்யமுடியாத,அழகின் திருவுருவமான
குஹ்யப்ரதேசத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
இடுப்பில் விளையாடும்,
திவ்யமான ரத்தினங்கள்
பதிக்கப்பட்டு,தங்கத்தாலான
அரைச் சலங்கையை நினை!

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
உலகையே படைக்கும்
ப்ரும்மதேவனின் உற்பத்தி ஸ்தானமான,
கருந்தாமரைப் பூப்போன்ற
திருநாபிக்கமலத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பக்திக்கு வசப்பட்டு,அறிவொன்றும்
இல்லாத ஆய்ச்சி கட்டின
தாம்புக்கயிற்றின் அடையாளமிருக்கும்
மணிவண்ணனின் திருவயிற்றை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
லக்ஷ்மி தேவியின் இருப்பிடமான,
ஜீவர்களையே நினைத்துக் கொண்டிருக்கும்,
ப்ருகு மஹரிஷி உதைத்த,
திருமார்பை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
திருமார்பினை உரசி விளையாடி,
பக்தர்கள் பக்தியோடு தந்த,
சுகந்தமான,குளிர்ச்சியான,
துளசி மாலையை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
திருமார்பில் ஆனந்தமாக,
சுதந்திரமாக,உரிமையோடு,
தவழும் வைஜயந்திமாலையையும்,
நவரத்ன ஆபரணங்களையும்
திருப்தியாக நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
சாணூரன்,முஷ்டிகன் போன்ற
மல்லர்களை பிரட்டிப்போட்ட
மிகுந்த பலமுடைய,மலை போன்ற
திருத்தோள்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அபயம் அளிக்கும்,சம்சாரிகளை
சம்சாரத்திலிருந்து கரையேற்றத்
துடிக்கும் உருண்டு,நீண்டிருக்கும்,
யானை துதிக்கை போன்ற,
தோள்வளையல்களாலும்,கங்கணங்களாலும்
அலங்கரிக்கப்பட்ட
ஆச்சரியமான திருக்கைகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
புல்லாங்குழலை ஏந்தியிருக்கும்,
மாடுகளை தேய்த்துக் குளிப்பாட்டும்,
வெண்ணையைத் திருடும்,
கோபிகளின் ஆடையை இழுக்கும்,
செந்தாமரையைப் பழிக்கும்
உள்ளங்கைகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
ப்ரேம ஸ்வரூபினியான ராதிகாவை
செல்லமாகக் கிள்ளும் நகங்களையுடைய,
மென்மையான,ஆனாலும் பலமான,
பலவித மோதிரங்களால் அலங்கரிக்கப்பெற்ற
அதிரூப சுந்தரமான கைவிரல்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
மூன்று மடிப்புகளையுடைய,
அண்டங்களை அனாயாசமாக
விழுங்கிய,சந்தனம் பூசிய
அற்புதமான திருக்கழுத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கோபிகைகளை சுண்டியிழுக்கும்,
ஆண்டாளும் புலம்பின,
புல்லாங்குழலை ஊதும்,
வெண்ணையை விழுங்கும்,
செங்கனிவாயை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
மாதுளம்பழத்தின் முத்துக்கள் போலே
ப்ரகாசிக்கும்,ஜாதி புஷ்பத்தின்
சிவந்த கரையைப் போல்,
வெற்றிலையால் சிவந்த,
முத்துப்பற்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கற்பூரத்தின் வாசத்தையும்,
கமலப்பூ வாசத்தையும்,
மிஞ்சும்,வெற்றிலை போடாமலேயே
சிவந்திருக்கும்,ராதிகா ராணி
ருசிக்கும் சிவந்த நாவை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கண்ணாடி போன்று பளபளக்கும்,
கோபிகைகள் முத்தமிட்டு சிவந்திருக்கும்,
ராதிகா ராணி செல்லமாகக் கிள்ளும்,
கன்னங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
எந்த மூச்சுக்காற்றை வேதமாகச்
சொல்கிறோமோ,அந்த மூச்சை
இழுத்து விடும்,புல்லாக்கு
அணிந்த தீர்க்கமான
திருமூக்கை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பார்ப்பவரை சுண்டியிழுக்கும்,
பாபத்தை நாசம் செய்யும்,
கருணை மழை பொழியும்,
ப்ரேம ரசம் சிந்தும்,
கரியவாகி,புடை பரந்து,
மிளிர்ந்து செவ்வரியோடும்,
திருக்கண்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
புல்லாங்குழல் வாசிக்கும் சமயத்தில்,
நெறிந்து ஏறி, வில் போன்று வளைந்த,
அடர்த்தியான புருவங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
முத்து முத்தாய் வியர்க்கும்,
கஸ்தூரி திலகத்துடன் விளங்கும்,
மனோஹரமான திருக்குழல் கற்றைகளால்,
மறைந்திருக்கும் நெற்றியை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
மகரகுண்டலங்களுக்கு அழகு தரும்,
கோபிகைகளின் ரஹஸ்யத்தைக் கேட்கும்,
பக்தர்களின் ப்ரார்த்தனையைக் கேட்கும்,
அழகான செவிகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
யசோதா மாதா சீவி சிங்காரித்துவிடும்,
பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட,
மயில்பீலியைச் சொருகிக்கொண்டிருக்கும்,
துளசிதேவியின் நிரந்தர வசிப்பிடமான,
திருமுடியை நினை !

எத்தனை சுகமாக இருக்கிறது இல்லையா !?!

இப்படியே நினை !
நினைத்துப் பார் !
இதன் பெயர் தான் தியானம் !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
திருவடி முதல் திருமுடி வரை
நினைத்தாய் அல்லவா !
அதாவது பாதம் முதல் தலை வரை !

இப்பொழுது அதே போல்
க்ருஷ்ணா என்று சொல் !
திருமுடி முதல் திருவடி வரை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அழகான சுருட்டையான முடிகளால்
விளங்கும் திருமுடியை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பறந்த நெற்றியை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
மகர குண்டல்ங்களோடு செவியை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
வில் போன்ற வளைந்த புருவங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அழகான செந்தாமரைக் கண்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அதிசயமான தீர்க்கமான நாசியை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
மதுர ரஸம் சிந்தும் செங்கனி வாயை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
முத்துப்பற்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
நீண்ட,சிவந்த நாவினை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அழகான தாடையை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
நீண்ட கழுத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
திரண்ட தோள்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பருத்த புஜங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
மயக்கும் முழங்கைகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கைகளின் மணிக்கட்டுகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
சங்கு,சக்கர ரேகைகளால்
அடையாளம் செய்யப்பட்ட
சிவந்த உள்ளங்கைகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கோப குழந்தைகள்,
சொடுக்கு எடுக்கும்,
நீண்ட மெல்லிய விரல்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அழகு கொஞ்சும்,
வக்ஷஸ்தலத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அகன்ற திருமார்பை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
யசோதை கட்டிய தாம்புக்கயிற்றின்
அடையாளமிருக்கும் திருவயிற்றை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கருந்தாமரை போன்ற
தொப்புள்கொடியிருக்கும்,
நாபிக்கமலத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பீதாம்பரம் நழுவாதபடி காக்கும்,
சிறந்த அரைச் சதங்கையை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அழகின் பிறப்பிடமான
ரகசிய முத்தத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பருத்து,திரண்டிருக்கும்,
அசைந்தாடி அனைவரையும் ஈர்க்கும்,
வீணை போன்ற பின்பாகத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கச்சைக்கட்டிய,எல்லோருக்கும்
தெரியும்படியான
திருத்தொடைகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கடிக்கலாம் என்று தோன்றவைக்கும்
முழங்கால்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
சப்திக்கும் சலங்கைகளையுடைய,
கணுக்கால்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
திருமங்கையாழ்வாரும் ருசித்த,
கால்விரல்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
மஹாபலியும் தலையில் சுமந்த,
செந்தாமரைப் பாதங்களை நினை !

இப்படியே தோன்றும் போதெல்லாம்
நினைத்துக்கொண்டிருப்பாய் !

இதில் என்ன கஷ்டமிருக்கிறது ?
எத்தனை சுலபம் !

இதற்கு பெரிய படிப்பு வேண்டாம் !
நிறைய பணம் வேண்டாம் !
பெரிய தியான மண்டபம் வேண்டாம் !
கையில் துளசி மாலை வேண்டாம் !
குறிப்பிட்ட நேரம் வேண்டாம் !
இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது !

இன்றிலிருந்து தொடங்கு !
நீ இருக்கும் நிலைமையிலிருந்து தொடங்கு !

நாளை குளித்துவிட்டு சுத்தமாக
தொடங்கலாம் என்று நினைக்காதே !

இதை நீ படிப்பது அர்த்த ராத்திரியாக
இருந்தாலும் உடனே தொடங்கு !
இதை நீ படிப்பது சந்தியா வேளையாக
இருந்தாலும் உடனே தொடங்கு !
இதை நீ வண்டியில் சென்றுகொண்டு
படித்தாலும் உடனே தொடங்கு !

உனக்கு சந்தேகமாக இருந்தால்
பரீட்சை செய்து பார் !

நஷ்டமில்லாத முயற்சி !
ஆனந்தமான முயற்சி !
அற்புதமான முயற்சி !

இனியும் தியான வகுப்புகளுக்குச்
சென்று ஏமாறாதே !

நீ உன் க்ருஷ்ணனை நினைக்க,
உனக்கு யாரும் வகுப்புகள்
நடத்தவேண்டாம் . . .

தியானம் செய் . . .
ஒரு நாள் என்னைப் பார்க்கும்போது
இதன் பலனை நீ
எனக்குச் சொல்வாய் !

ஒருவேளை நான்
க்ருஷ்ண சரணத்தை அடைந்துவிட்டாலும்
என் க்ருஷ்ணன்
எனக்கு உன் அனுபவத்தைச் சொல்வான் !

இனி எங்கும் தியானம் !
எப்பொழுதும் தியானம் !
க்ருஷ்ண தியானம் !

இதிலே இன்னும் ஒரு படி உண்டு !
அதை நீயே கண்டுபிடி !

ஒரு குறிப்பு சொல்லவா ?
ராதே...ராதே...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP