ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 மார்ச், 2010

சமூக சேவை !


ராதேக்ருஷ்ணா

பலபேர் இன்று
சமூக சேவை என்று
ஒரு மாயையில் மயங்கியிருக்கிறார்கள் !

உலகில் ஒவ்வொருவரும்
சமூகத்தின் அங்கமே !

நானோ,நீயோ இல்லாமல்
ஒரு சமூகம் இல்லை !

நானும்,நீயும் சரியாக ஆனால்
சமூகம் தானாக மாறும் !

கொஞ்சம் உன்னை சரிசெய்வோமா ?

களை எடுப்போமா ?

நீ தயாரா ? 

நீ ஒழுங்காக இருந்தால் அதுவே
மிகப்பெரிய சேவை !

முதலில் நீ ஒழுங்காயிரு !

பிறகு
மற்றவரை வழி நடத்தலாம் !

இப்பொழுது முதல்
உன் சமூக சேவை ஆரம்பம் . . .

ஒவ்வொன்றாக நீ செய்துவரும்போது
உன்னைச் சுற்றி நடப்பவை
மாறுவதை நீயே உணர்வாய் !
யாருக்கும் பாரமாய் இருக்காதே !

யாருக்கும் கெடுதல் நினைக்காதே !

யாரையும் தப்பாக பேசாதே !

யாருக்கும் கெடுதல் செய்யாதே !

யாரையும் கேவலப்படுத்தாதே !

யாரையும் உபத்திரவிக்காதே !

எதையும் வீணடிக்காதே !

நல்லவற்றை ஒதுக்காதே !

நல்லவர்களை பழிக்காதே !

தர்மத்தை விடாதே !

சத்தியத்தை அலட்சியம் செய்யாதே !

அதர்மத்தைச் செய்யாதே !

கெட்டவர்களை கொண்டாடாதே !

 உன் பெருமையை பேசாதே !

 ஊரைக் குப்பையாக்காதே !

யாருக்கும் இடைஞ்சல் தராதே !

யாரைப்பற்றியும் வம்பு பேசாதே !

வதந்தியைப் பரப்பாதே !

தாய் நாட்டை பழிக்காதே !

தாய் மொழியை ஒதுக்காதே !

பெற்றோரை உதாசீனப்படுத்தாதே !

சோம்பேறித்தனத்தை விரும்பாதே !

சுமையை அடுத்தவர் தலையில் ஏற்றாதே !

பொறுப்பிலிருந்து தப்பிக்காதே !

கடமையிலிருந்து நழுவாதே !

நேரத்தைக் கொல்லாதே !

 யாரையும் விரோதியாக்கிக் கொள்ளாதே !

அகம்பாவத்தை வளர்க்காதே !

அத்ருஷ்டத்தைக் கொண்டாடாதே !

முட்டாளாய் வாழாதே !

அறியாமையிடம் தோற்காதே !

நாஸ்தீகத்தைப் பேசாதே !

நம்பிக்கைத் துரோகம் செய்யாதே !

எங்கும்,யாரிடமும் நடிக்காதே !


நோயாளிகளை வெறுக்காதே !

பணத்திற்கு அடிமையாகாதே !

சொன்ன சொல் தவறாதே !

துன்பத்தில் துவளாதே !

இன்பத்தில் ஆடாதே !

பயத்தில் நடுங்காதே !

சஞ்சலத்தில் குழம்பாதே !

நேரம் தவறாதே !

தாழ்வு மனப்பான்மை கொள்ளாதே ! 

இந்து தர்மத்தை விடாதே !  

 க்ருஷ்ணனை சந்தேகிக்காதே !


நாம ஜபத்தை விடாதே !

சரணாகதியைத் தள்ளாதே !

குருவை மறக்காதே !


 இதுவே மிகப்பெரிய சமூக சேவை !
  
ஒவ்வொரு நாளும் இவ்வாறு
இருந்தாயா என்று உன்னை நீயே கேள் !

வாழ்வின் எல்லை வரை இதை நினை !

நீ மாறுவாய் !
 நீ மாற. உன் குடும்பம் மாறும் !
உன் குடும்பம் மாற, உன் தெரு மாறும் !
உன் தெரு மாற, உன் ஊர் மாறும் !
உன் ஊர் மாற,உன் சமூகம் மாறும் !
 சமூகம் மாற, தேசம் மாறும் !
தேசம் மாற,உலகம் மாறும் !

அதனால் உன் சமூக சேவையைத் தொடங்கு !

தாமதம் செய்யாதே ! 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP