ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

சிரிப்பு !





ராதேக்ருஷ்ணா


சிரிப்பு....

வாழ்க்கையின் மிகப்பெரிய
பொக்கிஷம்...

வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாத அனுபவம்...

ஆனால்...
சிரித்த காரணத்தைக்
கொஞ்சம் அலசிப் பார்ப்போமா ?!? 
 

உயிரில்லாத பொம்மைக்காக
சிரித்தாய் !

தாய் தூக்கிக் கொண்டதற்காக
சிரித்தாய் !

தந்தையுடன் வெளியில் செல்வதற்காக
சிரித்தாய் !

மற்றவர் கொஞ்சியதற்காக
சிரித்தாய் !

புத்தாடை கிடைத்ததற்காக
சிரித்தாய் !

உன் ஆடை நன்றாகயிருக்கிறது,
என்று அடுத்தவர் சொல்ல
சிரித்தாய் !

தோழர்களுடன்,தோழிகளுடன்
விளையாடிச் சிரித்தாய் !

போட்டிகளில் பரிசு
வென்றதற்காகச் சிரித்தாய் !

பலபேர் கொண்டாடும்போது
சிரித்தாய் !

பிடித்த ஆகாரம் சாப்பிட்டுச்
சிரித்தாய் !

பட்டாசு வெடித்துச்
சிரித்தாய் !

அடுத்தவரின் பைத்தியக்காரத்தனத்தைப்
பார்த்துச் சிரித்தாய் !

உன்னைக் கஷ்டப்படுத்துபவர்களின்
கஷ்டத்தைப் பார்த்துச் சிரித்தாய் !

உன்னைக் கொண்டாடுபவர்களை
பார்த்துச் சிரித்தாய் !

உன் வெற்றியில் சிரித்தாய் !

உனக்குப் பிடித்தவர்களின்
சந்திப்பில் சிரித்தாய் !

அழகானவர்களைப் பார்த்துச்
சிரித்தாய் !

படிப்பில் முதலிடம்
பிடித்ததற்குச் சிரித்தாய் !

 காமத்தில் மயங்கிச்
சிரித்தாய் !

நினைத்தது நடந்தததற்காகச்
சிரித்தாய் !

பிரச்சனைகள் முடிந்தவுடன்
சிரித்தாய் !

பிரச்சனைகளிலிருந்து தப்பித்ததற்காகச்
சிரித்தாய் !

வியாதி சரியானவுடன்
சிரித்தாய் !

வெளியூருக்குச் செல்லச்
சிரித்தாய் !

அருமையாக தூங்கி எழுந்தவுடன்
சிரித்தாய் !

சிறிது நேரம் இளைப்பாறியதற்காகச்
சிரித்தாய் !

குடும்பத்தினர் கொண்டாடியதற்காகச்
சிரித்தாய் !

ஊரில் மரியாதை கிடைத்ததற்குச்
சிரித்தாய் !

பிடித்த பொருளை
வாங்கியவுடன் சிரித்தாய் !

இழந்தது மீண்டும்
கிடைத்தவுடன் சிரித்தாய் !

பெரிய கூட்டத்தில்
உன் வார்த்தை எடுபட்டதற்காகச்
சிரித்தாய் !

வைத்தியன் ஒன்றும்
பயப்பட அவசியமில்லை என்று
சொன்னவுடன் சிரித்தாய் !

புதிய வேலை கிடைத்ததற்காகச்
சிரித்தாய் ! 

வேலை செய்யுமிடத்தில்
சம்பள உயர்வு கிடைத்ததை
நினைத்துச் சிரித்தாய் !

உன் அழகை அடுத்தவர்
கொண்டாடியதை
நினைத்துச் சிரித்தாய் !

இன்னும் எத்தனையோ
விஷயங்களுக்காகச்
சிரித்தாய் !

சிரித்துக்கொண்டிருக்கிறாய் !

இனியும்!
சிரிக்கத்தான் போகிறாய் !

இதையெல்லாம் விட
உன்னதமான
ஒரு சிரிப்பு உண்டு !  !  !

இந்த அத்தனை
சிரிப்புகளையும் சேர்த்தாலும்
அதற்குச் சமமாகாது !

அதுதான் பரமானந்தச் சிரிப்பு . . .

விடாது நாம ஜபம் செய்ய,
தொடர்ந்து குரு த்யானம் செய்ய,
அந்தச் சிரிப்பு வரும்...

அது தெய்வீகச் சிரிப்பு . . .
ஆத்மாவின் சிரிப்பு . . .
மனதின் சிரிப்பு . . .
உண்மையான சிரிப்பு . . .
வாழ்வின் சிரிப்பு . . .

ஆண்டாள் சிரித்தாள் !
பொய்கையாழ்வார் சிரித்தார் !
கணிகண்ணன் சிரித்தான் !
மஞ்சுளா சிரித்தாள் !
ராஜா அம்பரீஷன் சிரித்தான் !
தேவஹூதி சிரித்தாள் !
குகன் சிரித்தான் !
பீஷ்மர் சிரித்தார் !

இன்னும் பலர் அந்த
தெய்வீகச் சிரிப்பை சிரித்தனர் ! ! ! 
 
குருஜீ அம்மா சிரிக்கின்றார் . . .
வந்து பார்...
கேட்டுப் பார்...

நீயும் நாம ஜபம் செய்ய
உனக்கும் அந்தச் சிரிப்பு வரும் . . .




சிரித்துப் பார் . . .
அனுபவித்துப் பார் . . .
பரமானந்தத்தில் திளைத்துப் பார் . . .

சீக்கிரம் தெய்வீகச் சிரிப்பு வரட்டும் . . .

அதைப் பார்க்க
நான்
மிக ஆசையுடன்
காத்திருக்கின்றேன் ! ! !



 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP