ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 டிசம்பர், 2009

உனக்கென்று !





ராதேக்ருஷ்ணா


உலகில் உனக்கென்று ஒரு
இடம் என்றுமுண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
வாழ்க்கை உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
பசி உண்டு ! 

உலகில் உனக்கென்று ஒரு
ஆகாரம் உண்டு !

உலகில் உனக்கென்று 
மனிதர்கள் உண்டு !

உலகில் உனக்கென்று
காற்று உண்டு !

உலகில் உனக்கென்று
உடுத்த ஆடை உண்டு !

உலகில் உனக்கென்று
இளைப்பாற இடம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
அமைதி உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
பலம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
சமாதானம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
சந்தோஷம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
நேரம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
ப்ரயாணம் உண்டு !

உலகில் உனக்கென்று
பழங்கள் உண்டு !

உலகில் உனக்கென்று
ஒதுங்க நிழல் உண்டு !

உலகில் உனக்கென்று
குடிக்க நீர் உண்டு !

உலகில் உனக்கென்று
அமர இடம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
படுக்கை உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
தூக்கம் உண்டு ! 


உலகில் உனக்கென்று ஒரு
வெளிச்சம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
விழிப்பு உண்டு !
  
உலகில் உனக்கென்று
கடமை உண்டு !
  
உலகில் உனக்கென்று ஒரு
மனம் உண்டு !

உலகில் உனக்கென்று
ஆத்ம பந்துக்கள் உண்டு !

உலகில் உனக்கென்று
க்ருஷ்ண நாம ஜபம் உண்டு !

உலகில் உனக்கென்று
ராதையும்,க்ருஷ்ணனும் உண்டு !

உலகில் உனக்கென்று
பகவானுடைய கோயில்கள் உண்டு !

உலகில் உனக்கென்று
சத்சங்கம் உண்டு !

உலகில் உனக்கென்று
க்ருஷ்ண லீலா உண்டு !

உலகில் உனக்கென்று
ப்ருந்தாவனம் உண்டு !

உலகில் உனக்கென்று
பகவத் ப்ரசாதம் உண்டு !

உலகில் உனக்கென்று
குரு உண்டு !

உலகில் உனக்கென்று
இத்தனை இருக்கும்போது
ஏன்
எதுவுமில்லை என்கிறாய் ! 


இதுபோல் உனக்கென்று
பல உண்டு !

அதனால் இனிமேல் சமாதானாமாக இரு !

இதோ உனக்கென்று
இந்த உபதேச ஆனந்த வேதம்
வந்ததல்லவா ! ! !

அதனால் 
தெளிந்து விடு !

பயத்தை விட்டு விடு !
மனக்குழப்பத்தை கொன்று விடு !
பலவீனத்தை மறந்து விடு !
பகைமையை அழித்து விடு !
சோம்பேறித்தனத்தை மாற்றி விடு !

வாழ்க்கையை வாழ்ந்து விடு !
சந்தோஷமாக பொழுதை உபயோகப்படுத்திவிடு !






0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP