ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

அழுகை !





ராதேக்ருஷ்ணா


அழுகை...அழுகை...அழுகை...

எதற்கெல்லாம் அழுகை . . .



யாராவது திட்டினால்
அழுகை வருகிறதே !

அவமானப்படுத்தினால்
அழுகை வருகிறதே !

எதையாவது இழந்தால்
அழுகை வருகிறதே !

நினைப்பது நடக்காவிட்டால்
அழுகை வருகிறதே !

தவறுக்கு தண்டனை கிடைத்தால்
அழுகை வருகிறதே !

உன் பாபத்தை அடுத்தவர் கூறினால்
அழுகை வருகிறதே !

கஷ்டத்தில் யாரும் கண்டுகொள்ளாவிட்டால்
அழுகை வருகிறதே !



உடலில் வியாதி வந்தால்
அழுகை வருகிறதே !

பிடித்தவர்கள் இறந்தால்
அழுகை வருகிறதே !

தோற்றுப்போய்விட்டால்
அழுகை வருகிறதே !

பொருள் நஷ்டமானால்
அழுகை வருகிறதே !

பிடிக்காத வேலையைச் செய்தால்
அழுகை வருகிறதே !

நெருங்கினவர்கள் பிரிந்தால்
அழுகை வருகிறதே !

ஒழுங்கான சாப்பாடு கிடைக்காவிட்டால்
அழுகை வருகிறதே !

  பிடித்த ஆடை கிழிந்துவிட்டால்
அழுகை வருகிறதே !

நல்ல செருப்பு தொலைந்துவிட்டால்
அழுகை வருகிறதே !

யாராவது புரிந்துகொள்ளாவிட்டால்
அழுகை வருகிறதே !

 மரண பயத்தில்
அழுகை வருகிறதே !

பயங்கரமான கனவு கண்டால்
அழுகை வருகிறதே !

இப்படி எவ்வளவு அழுகை . . .

சிறு வயதில்
பொம்மைக்கு அழுகை . . .

பள்ளிக்கூடம்
செல்ல அழுகை. . .

பாடம் படிக்க
அழுகை. . .

இள வயதில் காதல் என்று
உளறல் அழுகை . . . 
 
வயதான காலத்தில்
தனிமை என்று அழுகை . . .

சீ .... சீ
என்ன ப்ரயோஜனம் . . .

இத்தனை அழுகையினால்
என்ன கிடைத்தது ?

அடுத்தவர்களை ஏமாற்றினாய் . . .

சுய பச்சாதாபம் சம்பாதித்தாய் . . .

இவையில்லாமல்
எத்தனை சந்தர்ப்பத்தில்
பொய்யாய் அழுதாய் . . .

வெட்கப்படு . . .

இது போல் தண்டமாய்
அழுது வாழ்க்கை
வீணாகிவிட்டதே . . .


இதுவரை எத்தனை தடவை
க்ருஷ்ணனுக்காக
அழுதிருக்கிறாய் . . .

இதுவரை எத்தனை முறை
உன் தவறுகளுக்காக
மனம் நொந்து
அழுதிருக்கிறாய் . . .


என்று க்ருஷ்ணனுக்காக
அழப் போகிறாய் . . .

தினமும் உன்னையே
கேட்டுக்கொள் . . . 
"இன்று க்ருஷ்ணனுக்காக
அழுதேனா ?"
முதலில் கேள் . . .
கேட்டால் உனக்கே புரியும் !

அழுது பார் . . .

மீராவைப் போல் அழுது பார் !
ஆண்டாளைப் போல் அழுது பார் !
நம்மாழ்வாரைப் போல் அழுது பார் !
திருமங்கையாழ்வாரைப் போல் அழுது பார் !
சக்குபாயைப் போல் அழுது பார் !
 ராமானுஜரைப் போல் அழுது பார் !
க்ருஷ்ணசைதன்யரைப் போல் அழுது பார் !
துகாராமைப் போல் அழுது பார் !
அன்னமாச்சார்யாரைப் போல் அழுது பார் !
தியாகராஜரைப் போல் அழுது பார் !
ருக்மிணியைப் போல் அழுது பார் !
யசோதையைப் போல் அழுது பார் !
கௌசல்யா தேவியைப் போல் அழுது பார் !

  துருவனைப் போல் அழுது பார் !
ப்ரஹ்லாதனைப் போல் அழுது பார் !
பரீக்ஷித்து ராஜனைப் போல் அழுது பார் !

கோபிகளைப்போல் அழுது பார் !
ராதிகாவைப் போல் அழுது பார் !
குருஜீ அம்மாவைப் போல் அழுது பார் !

விடாது நாம ஜபம் செய் !
உளமாற ப்ரார்த்தனை செய் !

தானாக ஒரு அழுகை வரும் . . .

பிறகு  . . .

பைத்தியக்காரத்தனமாய்
அல்ப விஷயங்களுக்காக
அழவே மாட்டாய் . . .

அந்த நாள் என்றோ ? ! ?

ஏன் அது இன்றாகவே இருக்கட்டுமே . . .

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP