ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 டிசம்பர், 2009

ஹே ராதே !





ராதேக்ருஷ்ணா


ஹே ராதே !
உன்னோடு க்ருஷ்ணனுக்கு
அந்தரங்க கைங்கர்யம்
செய்ய பக்தியைக் கொடுத்துவிடு . . .

ஹே ராதே !
உனக்கும் க்ருஷ்ணனுக்கும்
அலங்காரம் செய்ய
பாக்கியம் தந்துவிடு  . . .

ஹே ராதே !
நீயும், க்ருஷ்ணனும்
உடுத்திக் களைந்த ஆடைகளை
தோய்க்க கட்டளை இடு . . .

ஹே ராதே !
உனக்கும், க்ருஷ்ணனுக்கும்
ஆகாரம் ஊட்டிவிட
அனுமதி கொடு . . .

ஹே ராதே !
நீயும்,க்ருஷ்ணனும்
படுக்கும் படுக்கையை
தயார் செய்ய
கண்ணால் ஜாடை செய்துவிடு . . .

ஹே ராதே !
நீயும் க்ருஷ்ணனும்
படுத்துக்கிடக்க
உங்களுக்கு விசிறி வீச
என்னைக் கூப்பிடு . . .

ஹே ராதே !
உன்னை யாருக்கும் தெரியாமல்
க்ருஷ்ண சங்கமத்திற்கு
அழைத்துச் செல்ல
வாய்ப்பு கொடு . . .

ஹே ராதே !
உன் க்ருஷ்ணனைப் பற்றி
நான் உன்னிடம் குறை கூற
எனக்கு 
சந்தர்ப்பம் கொடு . . .

ஹே ராதே !
உனக்காக
க்ருஷ்ணனிடம் தூது
செல்ல என்னை
உன் சொத்தாக மாற்றிவிடு . . .

ஹே ராதே !
நீயும் க்ருஷ்ணனும்
பேசும் ரஹசிய பேச்சுக்களைக்
கேட்க எனக்கு
தீர்க்கமான காதுகளைக் கொடு . . .

ஹே ராதே !
நீயும், க்ருஷ்ணனும்
விளையாடும் ராசத்தைப்
பார்க்க எனக்கு ப்ரேம
பார்வையைக் கொடு . . .

ஹே ராதே !
உன் வாசனையையும்,
கருப்பனின் வாசனையையும்,
முகர்ந்து திளைக்கும்
சுகத்தை என் மூக்கிற்கு கொடு . . .

ஹே ராதே !
 உன்னையும்,க்ருஷ்ணனையும்,
மடியில் வைத்துக்கொண்டு
தாலாட்டுப் பாட
என் வாய்க்கு சொல்லிவிடு . . .

ஹே ராதே !
உனக்கும்,க்ருஷ்ணனுக்கும்
த்ருஷ்டி சுத்திப் போட
எனக்குப்
பலத்தைக் கொடு . . .

ஹே ராதே !
 உன்னையும்,க்ருஷ்ணனையும்
குளிப்பாட்டி விட
எனக்கு
ஆணையிடு . . .

ஹே ராதே !
நீயும், க்ருஷ்ணனும்
ஊஞ்சலில் ஆட,
அதை ஆட்டும்
ஆனந்தத்தை அளித்துவிடு . . .



ஹே ராதே !
உனக்கும்,க்ருஷ்ணனுக்கும்,
பழங்களையும்,பாலையும்,
எடுத்துக்கொண்டு வருகின்ற
வேலைக்காரியாக
 என்னையாக்கிவிடு . . .

ஹே ராதே !
நீயும்,க்ருஷ்ணனும்
யமுனையில் செல்லும்
ஓடத்தை ஓட்டும் ஓடக்காரியாக
எனக்கு வரம் கொடு . . .

ஹே ராதே !




ஹே ராதே !
உன்னை ஒரு ஜன்மாவில்
வயிற்றில் சுமக்கும்
தாயாக எனக்கு
திவ்யமான கர்ப்பப்பை அளித்துவிடு . . .

ஹே ராதே !
என்றும்,எப்பொழுதும்,எங்கும்,
உன் புகழையும்,
க்ருஷ்ணனின் பெருமையையும்
பாடும் ஒரு பைத்தியமாக
என்னை மாற்றிவிடு . . .

ஹே ராதே !
இன்னும் எத்தனையோ
கேட்க
மனது துடிக்கிறது . . .

உனக்குத்தான்
என்னைத்
தெரியுமே . . .

ஹே ராதா மாதா . . .
என்னை மன்னித்துவிடு . . .
நான் கேட்ட எதற்கும்
எனக்கு தகுதியே கிடையாது . . .
ஏதோ ஆசையில்
உளறிவிட்டேன் . . .

உன்னிடத்தில் இத்தனையும்
சொல்ல இந்த அதம ஜீவனுக்கும்
ஒரு சந்தர்ப்பம் தந்தாயே . . .
அதுவே போதும் . . .

கோடி ஜன்மா
உன்னிடத்தில் நான்
உளறிக் கொட்டியதை
நினைத்தே வாழ்ந்து விடுவேன் . . .

நான் சொன்னதையும்
காது கொடுத்துக் கேட்டாயே . . .

அதுவே உன் கருணையின் பலம் . . .

எனக்குத் தெரியும் . . .
நான் குருஜீ அம்மாவின்
குழந்தை என்பதால் தான்
இதைக் கூட நீ கேட்டாய் . . . 
 
 இப்படி உன்னிடத்தில்
பேசவும்,ப்ரார்த்திக்கவும்,உளறவும்
தகுதியைத் தந்த
என் குருஜீ அம்மாவின்
மனம் நோகாமல் நான் வாழ்ந்தால்
அதுவே எனக்குப் போதும் . . .

அந்த ஒன்றை மட்டும் தா...

 


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP