ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 30 நவம்பர், 2009

ரசிப்பாயா !



ராதேக்ருஷ்ணா




தாயை ரசிக்கின்றாய் !
தந்தையை ரசிக்கின்றாய் !
மனைவியை ரசிக்கின்றாய் !
கணவனை ரசிக்கின்றாய் !
குழந்தைகளை ரசிக்கின்றாய் !
சகோதரனை ரசிக்கின்றாய் !
சகோதரியை ரசிக்கின்றாய் !
பந்துக்களை ரசிக்கின்றாய் ! 
பூவை ரசிக்கின்றாய் !
செடியை ரசிக்கின்றாய் !
நந்தவனத்தை ரசிக்கின்றாய் ! 
நிழலை ரசிக்கின்றாய் !
சூட்டை ரசிக்கின்றாய் ! 
வானத்தை ரசிக்கின்றாய் !
மேகத்தை ரசிக்கின்றாய் !
மழையை ரசிக்கின்றாய் !
குளிரை ரசிக்கின்றாய் !
அருவியை ரசிக்கின்றாய் !
மலையை ரசிக்கின்றாய் !
வானவில்லை ரசிக்கின்றாய் ! 
நாயை ரசிக்கின்றாய் !
கோலத்தை ரசிக்கின்றாய் !
இளநீரை ரசிக்கின்றாய் ! 
சாப்பாட்டை ரசிக்கின்றாய் !
துணிமணிகளை ரசிக்கின்றாய் !
துணி துவைப்பதை ரசிக்கின்றாய் ! 
விடியற்காலையை ரசிக்கின்றாய் !
இசையை ரசிக்கின்றாய் ! 
நடனத்தை ரசிக்கின்றாய் !
சண்டையை ரசிக்கின்றாய் !
நகைச்சுவையை ரசிக்கின்றாய் !நடிப்பை ரசிக்கின்றாய் ! 
பேச்சை ரசிக்கின்றாய் !
பேசுவதை ரசிக்கின்றாய் ! 
நடையை ரசிக்கின்றாய் !
செருப்பை ரசிக்கின்றாய் ! 
சிரிப்பை ரசிக்கின்றாய் !
ஓவியத்தை ரசிக்கின்றாய் !
கேலிச் சித்திரத்தை ரசிக்கின்றாய் ! 
விளம்பரத்தை ரசிக்கின்றாய் !
அழைப்பிதழை ரசிக்கின்றாய் ! 
அலங்காரத்தை ரசிக்கின்றாய் !
அலங்கரிப்பதை ரசிக்கின்றாய் ! 
நட்பை ரசிக்கின்றாய் !
உன் பொருட்களை ரசிக்கின்றாய் !
அடுத்தவரின் உடலை ரசிக்கின்றாய் !
மற்றவரின் பொருட்களை ரசிக்கின்றாய் !
புத்தகத்தை ரசிக்கின்றாய் !
எழுதுகோலை ரசிக்கின்றாய் !
இளந்தளிரை ரசிக்கின்றாய் ! 
உதிர்ந்த இலைகளை ரசிக்கின்றாய் !
மற்றவரின் பைத்தியக்காரத்தனத்தை
ரசிக்கின்றாய் !
கூட்டத்தை ரசிக்கின்றாய் !
இளமையை ரசிக்கின்றாய் !
முதுமையை ரசிக்கின்றாய் !
மழலையை ரசிக்கின்றாய் !
பிரயாணத்தை ரசிக்கின்றாய் !
வண்டிகளை ரசிக்கின்றாய் !
 தேனை ரசிக்கின்றாய் ! 
சிற்றுண்டியை ரசிக்கின்றாய் !
நொறுக்குத்தீனிகளை ரசிக்கின்றாய் !
அழைப்புமணியை ரசிக்கின்றாய் !
பரிசை ரசிக்கின்றாய் !
பழைய நினைவுகளை ரசிக்கின்றாய் !
புகைப்படங்களை ரசிக்கின்றாய் !
தொழில்நுட்பத்தை ரசிக்கின்றாய் !
குறுந்தகவல்களை ரசிக்கின்றாய் !
வதந்தியை ரசிக்கின்றாய் !
அழகு சாதன பொருட்களை ரசிக்கின்றாய் !
உன்னையே அங்குலம் அங்குலமாக
ரசிக்கின்றாய் !


இதுவே போதுமென்று
நினைக்கின்றேன் !
இதற்கு மேல்
சொல்ல வேண்டுமோ ! ? !

இத்தனையையும்,
இதற்கு மேலும்
ரசிக்கத்தெரிந்த
உனக்கு
க்ருஷ்ணனை
ரசிக்கமுடியாதா ! ? !

இத்தனைக்குள்ளும்
நீ எதை ரசிக்கின்றாயோ
அவையனைத்தும்
க்ருஷ்ணனின் ஒரு துளியே !

இத்தனையையும்
இவ்வளவு ரசிக்கும்படியாக
படைத்திருக்கிறானென்றால்
அவன் எவ்வளவு பெரிய
ரசிகனாக இருப்பான் ! ! !

இத்தனையையும்
ரசிப்பதில் நீ உன் க்ருஷ்ணனை
ரசிக்க மறந்துவிட்டாயே ! ? !

இனி க்ருஷ்ணனை ரசிப்பாய் !

எல்லாவற்றிற்குள்ளும்
இருக்கும் உன்
க்ருஷ்ணனை
இனியாவது ரசிப்பாயா !

க்ருஷ்ணனைத்தவிர
ரசிக்கும்படியாக
எது இந்த உலகில்
நிரந்தரமாக உள்ளது ? ! ! 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP