ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 நவம்பர், 2009

நிரந்தரம் !



ராதேக்ருஷ்ணா


உன்னுடைய க்ருஷ்ணன்
எல்லோரையும் விட மிகப்பெரியவன்தான் !



உன்னுடைய க்ருஷ்ணன்
உன் தாயைக் காட்டிலும்
உன்னிடத்தில் பரிவுடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன் தந்தையைக் காட்டிலும்
உன்னிடத்தில் அக்கறையுடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன் குழந்தைகளைக் காட்டிலும்
உன்னிடத்தில் பாசமுடையவன் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய சகோதர,சகோதரிகளைவிட
உன்னிடத்தில் சினேகமுடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன் கணவனைக் காட்டிலும்
உன்னிடத்தில் உரிமையுடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன் மனைவியைக் காட்டிலும்
உன்னிடத்தில் ஆசையுடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன் நண்பர்களைக் காட்டிலும்
உன்னிடத்தில் நட்புடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன்னுடைய வேலைக்காரர்களைவிட
உன்னிடத்தில் விசுவாசம் உடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன்னுடைய பந்துக்களைக் காட்டிலும்
உன்னிடத்தில் பந்தம் உடையவன் !


உன்னுடைய க்ருஷ்ணன்
உன் வைத்தியரைவிட
உன் தேக சுகத்தில்
நலமுடையவன்!


உன் க்ருஷ்ணன்
மற்றவர்களை விட
உன்னிடத்தில் நன்றியுடையவன் !

உன்னுடைய க்ருஷ்ணன்
உன்னைக் காட்டிலும்
உன்மீது அன்புடையவன் !

உன்னை உனக்கு சிறிது
வருஷங்களாகத்தான் தெரியும் !


உன்னை உன் பெற்றோருக்கு
நீ பிறந்ததிலிருந்துதான் தெரியும் !


மற்றவருக்கு உன்னை
சில வருஷங்களாகத் தெரியும் !


ஆனால் யாருக்குமே
உன்னுடைய பூர்வஜன்மாவோ,
உன்னுடைய பாவ புண்ணியங்களோ,
உன்னுடைய மனதோ,
உள்ளபடி தெரியவே தெரியாது . . .

ஏனெனில் யாரும் நிரந்தரமில்லை . . .



க்ருஷ்ணனுக்கோ உன்னை
ஆதியிலிருந்து தெரியும் . . .
உன் உடலை அங்குலம் அங்குலமாக
நன்றாகத் தெரியும் . . .
உன் மனதை உனக்குள்ளிருந்தே
பார்த்துக் கொண்டிருக்கிறான் . . .


உன்னைப்பற்றி
எல்லோரையும் விட
மிக நன்றாகத் தெரிந்தவன் க்ருஷ்ணனே!


மற்றவர் தூங்கும்போது அவர்களுக்கு
உன்னைத் தெரியாது. . .
நீ தூங்கும்போது உனக்கே எப்படித்
தூங்குகின்றாய் என்று தெரியாது . . .


ஆனால் க்ருஷ்ணன்
எப்பொழுதுமே 
விழித்துக் கொண்டிருக்கின்றான் !


அதனால் க்ருஷ்ணனை
திடமாக நம்பு !
வாழ்க்கையில் அவனுக்கு
எல்லோரையும் விட
முக்கியத்துவம் தா !


அவனுக்குக் கீழ்தான்
மற்ற அனைவருமே !


உயர்வற உயர் நலமுடையவன் அவன்
மயற்வற மதி நலம் தருபவன் அவன்
அயர்வறு அமரர்கள் அதிபதி அவன்


அவன் உன் கண்ணன் !

அவனுடைய
துயரறு சுடரடி மட்டுமே
நிரந்தரம் !




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP