ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 அக்டோபர், 2009

அன்பாக மாறு !


ராதேக்ருஷ்ணா


அன்பினால் என்ன பிரயோஜனம் ?

அன்பு மட்டும்தான்
வாழ்க்கையின் ப்ரயோஜனம் !


உண்மையான அன்பு எது ?


தாயின் அன்பா ?
தந்தையின் அன்பா ?
கணவனின் அன்பா ?
மனைவியின் அன்பா ?
குழந்தையின் அன்பா ?
தாதாவின் அன்பா ?
பாட்டியின் அன்பா ?
பேரனின் அன்பா ?
பேத்தியின் அன்பா ?
சகோதரனின் அன்பா ?
சகோதரியின் அன்பா ?
தோழனின் அன்பா ?
தோழியின் அன்பா ?
வளர்க்கும் நாயின் அன்பா ?


இது எல்லாம் ஓரளவுக்கு
உண்மைதான் ! ! !


ஆனால் ஒரு தாயின் அன்பை
தந்தையால் தரமுடியுமோ ?

தந்தையின் அரவணப்பை

மனைவி தரமுடியுமோ ?


கணவனின் காதலை
பிள்ளை தரமுடியுமோ ?


சகோதரனின் உரிமையை
பேரன் செய்யமுடியுமோ ?



நண்பனின் கனிவை
வளர்க்கும் நாய் தருமோ ?


ஒருவர் தரும் அன்பை
மற்றொருவர் தர முடியாது !


ஆனால் இவையெல்லாம்
சேர்ந்தாலும் தர முடியாத
அன்பைத் தரவே
க்ருஷ்ணன் இருக்கின்றான் !


அந்த அன்பை அனுபவிப்பதே
உன் வாழ்வின் ஒரே ப்ரயோஜனம் !

எந்த அன்பு  யாரிடமும்

கிடைக்கவில்லையென்றாலும்
அதைவிட உயர்ந்த அன்பை
கண்ணன் உன்னிடம்
வைத்திருக்கினறான் !
அதை ஒரு நாளும் மறவாதே ! ! !

இனி யாருடைய
அன்பிற்கும் ஏங்காதே !



அந்த அன்பையே அகல் விளக்காக,
ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தையே திரியாகக்
கொண்டு விளக்கேற்றின
பூதத்தாழ்வாரின் திருநக்ஷத்திரமான
ஐப்பசி அவிட்டமாகிய இன்று
நீயும் அன்பு செய் !
நீயும் அன்பை அனுபவி !
நீயும் அன்பைப் பருகு !
நீயும் அன்பினால் விளக்கேற்று !
நீயும் அன்பில் குளி !
நீயும் அன்பில் விளையாடு !
நீயே க்ருஷ்ணனின் அன்பாக மாறு !





1 கருத்துகள்:

Unknown 29 அக்டோபர், 2009 அன்று AM 8:50  

radhekrishna guruji,
on the auspicious day of bhoothathazhvar,u have given us a shower of true love and made us realise it and hope u will also chage our mind to become the only place for krishnas premai,true premai, boundless premai and make us enjoy our precious life.
radhekrisha,radhekrishna radhekrishna

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP