ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 அக்டோபர், 2009

ஆனந்தம் பொழிகிறது !





ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளுமே
ஆனந்தம்தான்
அதுவே வேதம் !


ஆனந்தத்திற்கு அடையாளம்
இருவர் !
ஒன்று பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் !
இன்னொன்று பக்தர்கள் !


இரண்டும் ஒன்றாக இணைந்தால் !!!
பரமானந்தம் ! நித்யானந்தம் !
ரஹஸ்யானந்தம் ! ப்ரேமானந்தம் !
ஆத்மானந்தம் ! ஜன்மானந்தம் !
நாமானந்தம் ! க்ருபானந்தம் !


இன்று அப்படியொரு விசேஷம்!


இன்று, ஸ்ரீ க்ருஷ்ணனாகிய
நம் திருவனந்தபுரத்து
அனந்தபத்மநாபஸ்வாமி
பக்தர்களோடு,
சங்குமுக தீரத்தில்,
சமுத்திர க்ரீடை செய்யும்
மஹோத்சவம் !


இன்று, ஐப்பசி திருவோணம் !
உலகையே அகலாக,
கடலையே நெய்யாக,
சூரியனையே விளக்காக,
சுடராழியானடிக்கு சூட்டின
பொய்கையாழ்வார்
அவதார நன்னாள் ! 


இதைவிட வேறு என்ன 
வேண்டும் !


ஹே மனிதர்களே !
உங்கள் மேல் ஆனந்தம்
பொழிகிறது !
நீங்கள் தடுக்காமல்
இருந்தால் போதும் ! !





0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP