ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

வாழ்ந்தாலே சந்தோஷம் !





ராதேக்ருஷ்ணா

நீ குந்தியைப் போல்
துக்கத்தை வரமாக
கேட்கவேண்டாம் !

வருகின்ற கஷ்டங்களில்
க்ருஷ்ண அனுக்ரஹத்தை
உணர்ந்தாலே போதும் !


நீ திரௌபதியைப் போல்
அவமானப் பட வேண்டாம் !


அவமானங்களில் க்ருஷ்ணன்
கூட இருக்கின்றான் என்று 
மனதில் நம்பிக்கை வைத்தாலே போதும்!


நீ ப்ரஹ்லாதனைப் போல்
பகவானை நிரூபிக்க வேண்டாம் !


எத்தனை பேர் என்ன சொன்னாலும்
உன் க்ருஷ்ணனிடத்தில்
நம்பிக்கை மாறாமலிருந்தாலே போதும் !


நீ துருவன் போலே காட்டிற்குச் 
சென்று தவம் செய்ய வேண்டாம் !

நீ இருக்குமிடத்தில் இருந்து கொண்டு
குரு வார்த்தைப்படி நடந்தாலே போதும்!


நீ மீராவைப்போல் விஷத்தைக்
குடிக்கவேண்டாம் !


க்ருஷ்ணனுக்கு எல்லாம் 
தெரியுமென்று சமாதானமாக
இருந்தாலே போதும் !


நீ இராமானுஜரைப்போல்
சன்னியாசியாக வேண்டாம் !


பைத்தியக்காரத்தனமான
பேராசை, பிடிவாதங்களை
விட்டாலே போதும் !




நீ உன் க்ருஷ்ணனை பிடித்துக்கொண்டு,
விடாமல் நாம ஜபம் செய்துகொண்டு,
உன் கடமைகளை பண்ணிக்கொண்டு,
வருவதை ஏற்றுக்கொண்டு

வாழ்க்கையை
ஒழுங்காக

வாழ்ந்தாலே சந்தோஷம் !



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP