ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 அக்டோபர், 2009

பாக்கியம் பெற்ற நீ ! ! !




ராதேக்ருஷ்ணா


இன்று காலையில் பூத்து மாலையில்
வாடும் மலர்கள் கூட ஆனந்தமாய்
சிரிக்கின்றன !

உணவு கிடைப்பதைப் பற்றி
நிச்சயமில்லாமல்
பல மைல்கள் பறக்கும்
பறவைகள் கூட
குதூகலமாக இருக்கின்றன !

காட்டில் வாழும் சிங்கத்திடமிருந்து
தன்னைக் காப்பாற்றிக் கொண்டு
வாழவேண்டிய மான்கள் கூட
துள்ளிக் குதித்து இன்று
வாழ்க்கையை ஆரம்பித்துள்ளன !


சில நாட்கள் வாழும்
பட்டாம்பூச்சி கூட 
உற்சாகத்தோடு 
எழுந்து தன் வாழ்க்கையை
வாழ்கின்றன !


எல்லோராலும் விரட்டப்பட்ட
சொறி நாய்கள் கூட
தன் முயற்சியைக்
கைவிடாமல் நம்பிக்கையுடன்
வாழ்கின்றன !


"ராதேக்ருஷ்ணா" என்று சொல்லும்
பாக்கியம் பெற்ற நீ
கலங்கலாமோ ?
அழலாமோ ?
புலம்பலாமோ ?
பரிதவிக்கலாமோ ?
நொந்து போகலாமோ ?
சோர்ந்து விடலாமோ ?
வாழ்க்கையை வெறுக்கலாமோ ?
மற்றவரை குறை கூறலாமோ ?
நம்பிக்கையை இழக்கலாமோ ?
துவண்டு போகலாமோ ?



இனி சமத்தாக இருக்கணும் !




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP