ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 அக்டோபர், 2009

உன் மனம் !




ராதேக்ருஷ்ணா


உன் மனம் பறந்து கொண்டுதான் இருக்கிறது.
அதை கருடனாக மாற்ற க்ருஷ்ணனிடத்தில் ப்ரார்த்தனை செய் !


உன் மனம் காடாகத்தான் இருக்கிறது.
அதை ப்ருந்தாவனமாக மாற்ற ராதையிடம்
சரணாகதி செய் !


உன் மனம் பாம்பு போல்தான் இருக்கிறது.
அதை ஆதிசேஷனாக மாற்ற
ஸ்வாமி ராமானுஜரிடத்தில் கதறியழுது
ப்ரார்த்தனை செய் !


உன் மனம் ஆடிக்கொண்டுதான் 
இருக்கிறது.
அது ஊஞ்சலாக மாறி, அதில்
ராதையும், க்ருஷ்ணனும் ஆடுவதற்கு
கோபிகைகளிடம் வரம் கேள்!


உன் மனம் கல்லாகத்தான் இருக்கிறது!
அதை திருமலையில் படியாகக் கிடக்க
குலசேகர ஆழ்வாரிடத்தில் பக்தியுடன்
விண்ணப்பம் செய் !


உன் மனம் மலையாகத்தான் இருக்கிறது!
அதை கோவர்தனமாக மாற்ற
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரிடத்தில்
ரகசியமாக ப்ரார்த்தனை செய்!


உன் மனம் பைத்தியமாகத்தான் இருக்கிறது!
அதை க்ருஷ்ண பைத்தியமாக
மாற்ற சுகப்ரும்ம மஹரிஷியிடத்தில்
ப்ரேம பாடம் கற்றுக் கொள் !



உன் மனம் மரமாகத்தான் இருக்கிறது!
 அதில் "ராதாக்ருஷ்ணன்" ரூபம் உண்டாக
குருஜீ அம்மாவிடம்
திடமான நம்பிக்கை கொள் !



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP