ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 அக்டோபர், 2009

பிடிவாதம் நல்லதுதான் ! ! !

ராதேக்ருஷ்ணா

பிடிவாதம் இல்லாத மனிதர்களே கிடையாது !
பிடிவாதம் நல்லதா ? கெட்டதா ?
பிடிவாதம் வாழ்க்கைக்கு தேவையா ?

பிடிவாதம் நல்லதுதான் ! ! !


ஞானம் வேண்டுமென்று பிடிவாதம் பிடி !

வைராக்யத்தை அடைந்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடி !

காமத்தை கொல்லவேண்டும் 
என்று பிடிவாதம் பிடி !

 ப்ரேமையை  அடைவதற்கு பிடிவாதம் பிடி !

நாமத்தை விடமாட்டேனென்று  
பிடிவாதம் பிடி !

க்ருஷ்ணனை காண்பதற்கு பிடிவாதம் பிடி !

சத்சங்கம் எனக்கு தேவை 
என்று பிடிவாதம் பிடி !

பக்தர்கள் வேண்டுமென்று பிடிவாதம் பிடி !

பக்தி வேண்டும் வேண்டும் நிறைய 
வேண்டும் என்று பிடிவாதம் பிடி !

க்ருஷ்ணனிஷ்டப்படி மட்டும்தான் 
வாழ்வேனென்று பிடிவாதம் பிடி !

உன்னதமான மனிதவாழ்க்கையை   
க்ருஷ்ணனுக்காகவே அர்ப்பணம் 
செய்வேனென்று  கதறியழுது 
பிடிவாதம் பிடி !

சத்குருநாதனை யாருக்காகவும் ,
எந்த சமயத்திலும் ,
எந்த காரணத்திற்காகவும் ,
விடமாட்டேனென்று 
பிடிவாதம் பிடி ....

 இந்த பிடிவாதங்கள் நல்லது தான் ! 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP