ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 அக்டோபர், 2009

உனக்கு அடிமை !


ராதேக்ருஷ்ணா  

உன்னை யாரும் ஏமாற்றவில்லை !

உன்னுடைய காமமும், கோபமும், சுயநலமும்தான்,
 உன்னை பல வருஷங்களாக, 
அமர்க்களமாக 
எமாற்றிக்கொண்டிருக்கின்றது !

அந்த அசுரர்களிடமிருந்து உன்னைக்  
 காப்பாற்ற உன் தாயாலோ , 
தந்தையாலோ, கணவனாலோ ,
மனைவியாலோ , குழந்தையினாலோ ,
நண்பர்களாலோ, உறவினர்களாலோ, வேறு யாராலோ முடியவே முடியாது. 

இவ்வளவு ஏன் !
உன்னாலேயே உன்னை 
இவர்களிடமிருந்து 
காப்பாற்றிக்கொள்ளமுடியாது .

ஆனால் ஒருவன் மட்டுமே 
இவர்களை அழித்து உன்னைக் 
காப்பாற்றி, உனக்கு நிம்மதியைத் 
தரமுடியும் !

அவன் உன்னுடைய நலம் விரும்பி !
அவன் உன்னுடனேயே என்றுமிருக்கிறான் !
எதற்காகவும் அவன் உன்னை விட்டு விலகியதே இல்லை ! 
யாராலும் அவனை உன்னிடமிருந்து 
பிரிக்கவும் முடியாது !
நீயே துரத்தினாலும் அவன்
உன்னைவிட்டு  செல்லமாட்டான் !
அவன் உன்னிடமிருந்து 
எதையும் எதிர்பார்ப்பதில்லை ! 

அவன் யார் தெரியுமா ?
அவனே உன்  இதயத்திலிருக்கும்
உன்னுடைய க்ருஷ்ணன் ! 

அவன் நாமத்தைச் சொல்லி 
அவனுடைய சரண கமலங்களில்
உன்னை அர்ப்பித்துவிடு !

இனி அந்த அசுரர்கள் உனக்கு அடிமை ! 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP